பத்து வருடங்களுக்கு முன்னால் பாட்ரிக் சுசண்ட் ஆல் எழுதபட்ட நாவல். பிரபல இயக்குனர்கள் ஸ்டன்லி க்யூப்ரிக், மார்டின் சாசரஸ், ரிட்லி ஸ்காட் போன்றவர்கள் இயக்க ஆசைப்பட்ட நாவல். கடைசியாய் ரன் லோலா ரன் இயக்குனர் டாம் டிவியுக்கர் வெற்றி பெற்றார்.
ஜீன் பேப்டிஸ்ட் கெரொனொலிக்கு மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்க படும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. ஊரே திரண்டு வந்திருந்து அவனை எப்படியெல்லாம் கொல்ல வேண்டுமென்ற வெறியுடன் கூச்சலிட்டு கொண்டிருக்க, மெதுவாய் கேமரா அவனுடய மூக்குக்குள் போக.. ப்ளாஷ் பேக்.
மீன் மார்கெட்டில் நாற்றத்தின் நடுவே பிறந்து தன் முதல் சுவாசத்தை ஆரம்பிக்கிறான் ஜீன் பேப்டிஸ்ட் கெரொனொலி. கெரொனொலியின் தாய் இல்லீகல் கர்பத்தால், குழந்தையை விட்டு போக முயற்சித்ததால், காவலர்களால் தூக்கிலடப்படுகிறாள். ஒரு அனாதை ஆசிரமத்தில் வளரும் அவனுக்கு ஒரு ஸ்பெஷல் திறமை நுகர்வது.. எவ்வளவு தூரத்திலுள்ள விஷயமாய் இருந்தாலும் துல்லியமாய் நுகரும் தனித்திறமையுடவனாக வளர்கிறான். ஒரு முறை முதல் முறையாய் மார்கெட்டுக்கு போகும் ஒரு பெண்ணின் வாசனையை பிடித்து போய் அவளை தொடர்கிறான். அவள் அவனை பார்த்து பயந்து போய் கத்த முயற்சிக்க, அவனின் முதல் கொலை ஆரம்பமாகிறது.
பின்பு ஒரு சிறந்த வாசனை திரவியஙகள் தயாரிப்பாளர் ஒருவரிடம் தனக்கு வாசனை திரவியம் தயாரிக்க கற்று கொடுக்க சொல்ல, அவரிடமிருந்து கற்றுக் கொண்டு, ஒவ்வொரு பெண்ணையும் கொன்று அவர்களின் உடலை பதப்படுத்தி அதிலிருந்து சில சொட்டு வாசனை திரவியத்தை உருவாக்குகிறான். அரசு அவனை கைது செய்து, மரன தண்டனை கொடுக்கிறது.
கதையை கேட்டால் ஏதோ ஒரு சீரியல் கில்லர் படம் போல தோன்றும், பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் பெரிய வெற்றியே படம பார்க்கும் நமக்கு அவன் நுகரும் விஷயங்களை உணர வைப்பதே. அவனுக்கு வாசனை திரவியததை தயாரிக்கும் நுட்பத்தை சொல்லி கொடுப்பவராக, டஸ்டின் ஹாப்மேன்.
அருமையான ஒளிப்பதிவு, அழகு , அழகான பெண்கள், அவர்க்ளை கொன்று அவன் பதப்படுத்தும் அழகு இருக்கிறதே…. இதுவரை எக்ஸ்டஸி என்கிறா நுண் உணர்வை திரையில் கொண்டுவர முயற்சி செய்தவர் தமிழில் எனக்கு தெரிந்து கமல்ஹாசன் தன்னுடய ஆளவந்தான் திரைபடத்தில் போதையின் உச்சத்தில் உள்ள ஒருவனின் உணர்வை காட்சியாக்கியிருப்பார்.
ஆனால் இப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் கொலை வாள் தன் கழுத்துக்கு தயாராய் இருக்க, ஒரே ஒரு முறை தான் இவ்வளவு பேரை கொன்று, தயாரித்த வாசனை திரவியத்தை, ஒரு தடவை கர்சீப்பில் நினைத்து வெட்ட வெளீயில் வீச.. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இடமே மொத்த எக்ஸ்டஸியின் உச்சத்தில் கிறிஸ்துவ போதகர் உட்பட,யார் யாருடன் என்று பாராமல் அந்த வாசனையின் தூண்டுதலால் செக்ஸில் ஈடுபடும், காட்சியை துளி கூட வக்கிரமில்லாமல் எடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதே போல் கடைசி காட்சி தான் கண்டுபிடித்த திரவத்தை வைத்து தான் பிறந்த மீன் மார்கெட்டில் தன் அழித்து கொள்ளும் காட்சி நம்மை ஸ்டன் ஆக்கிவிடும்..
சுமார் பண்ணிரெண்டு விருதுகளை அள்ளிய படம். காட்சிகளாய் பார்த்தை என்னால் முயன்ற வரை விமர்சனம் என்கிற எழுத்தில் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன். நான் எழுதியதை விட எழுதாத காட்சிகள் படத்தில் அதிகம், படம் பாருங்கள் இதை விட அதிகம் உணர்வீர்கள்.
Perfume – வாசனை பிரியர்களுக்கு ( வாசனையை பிடிக்காதவர்கள் உண்டோ.?)
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
என்னால் இதை திரில்லர் என்று வகைபடுத்த முடியவில்லை. படம் பார்த்தவங்க.. கண்டிப்பா திரும்ப பார்ப்பாஙக்..
ஆமாம் முரளி.. முடிஞ்சா படம் பாருங்க..
பெண்ணின் மேனிக்கு இயற்கையிலே வாசனை உண்டு என்று கூறி நக்கீரர்க்கு சவால் விடுகிறார்கள்!!
நல்ல படம்.. நல்ல விமர்சனம்
அப்புறம்... யாஹூல ‘buzz' பண்ணுறீங்களா? ஒரு மேட்டர்.!!
பார்க்க வேண்டிய லிஸ்ட் கூடிகிட்டே போகுதே .. ??
இதற்கு ஒரு வழி சொல்லுங்கண்ணா.. ?
பார்க்க வேண்டிய லிஸ்ட் கூடிகிட்டே போகுதே .. ??
இதற்கு ஒரு வழி சொல்லுங்கண்ணா.. ?
பாலகிருஷ்ணா.. தயவு செய்து படம் பார்த்துவிட்டு கருத்தை சொல்லுங்கள்.. நிச்சயம் இது மனம் பிற்ழ்ந்தவனின் கதையல்ல
சரியா சொன்னீங்க கிஷோர்.. நன்றி
வேற வழி தேடி பிடிச்சு பார்த்துட வேண்டியதுதான்.. நன்றி வண்ணத்து பூச்சியாரே..
கண்டிப்பாய் பாருங்க நன்றி சரவணக்குமார்.
கொஞ்சம் நாளாச்சு படம் வந்து அதனால நிறைய பேருக்கு தெரியாது.. நேரே போய் தேடி பாருங்க.. ராஜ நடராஜன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி..
ஆமாம் சார் இது போன்ற கதைகளுக்கு திரைகதை அமைப்பதே சிரமமான காரியம். உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்.
பாத்துட்டேன்னுதான் நினைக்கிறேன். வால்பையன்.
உங்களுக்கென்ன டொரெண்ட் இருக்கவே இருக்கு..
நல்ல படம்.. நல்ல விமர்சனம்//
ஹா..ஹா.. நல்ல கம்பேரிசன் ஹை.. நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்
பார்த்து பிரமித்துவிட்டேன். விமர்சனம் சற்று சாதாரணமாகவே தெரிகிறது. படத்தை பார்த்தபோது ஏற்பட்ட அளவுக்கு படிக்கும் போது அழுத்தம் தோன்றவில்லை.
நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே ஊர்சுற்றி.. ஏதோ என்னாலானவரை முயற்சி செய்து இம்பாக்டை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
படத்தில் செக்ஸ் காட்சிகளே கிடையாது. க்ளைமாக்ஸ் காட்சியை தவிர.. அதை கட் செய்திருந்தால் படம் பார்த்த உணர்வே இருந்திருக்காது.. டிவிடியே சரணம்.
நன்றி ஆதவன்.. உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும்
உங்களுக்கு வேற வேலையேகிடையாதா, எந்நேரமும் சினிமா பாத்துட்டேதான் இருப்பீங்களா,
ஹி, ஹி சும்மா டமாசுக்கு
நம்ம இப்ப என்ன பாக்கணுங்கிறீங்களா. ? வேணாங்கிறீங்களா..?