Thottal Thodarum

Jun 13, 2009

மாசிலாமணி – திரை விமர்சனம்.

maasilamani

புதிதாய் வேறு படங்கள்  ஐ.சி.சி மேட்ச் காரணமாய் வெளியிடபடாமல் இருக்க, இந்த நேரத்தில், சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் வந்திருக்கும் வழக்கமான படம் தான் மாசிலாமணி.

ஹீரோ ஒரு லோகிளாஸ் காலனியில் இருப்பவன், காலேஜ் மாணவனாம், அந்த காலனியே அவனை பாட்ஷா ரேஞ்சுக்கு மதிக்கிறதாம் அவர்களின் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தும் அவன் சுனைனாவை கண்டதும் காதலிக்கிரான், அவளின் பார்வையில் இவன் செய்யும் விஷயங்கள் எல்லாம் ரவுடியாய் தெரிய வர,  அவனை வெறுக்கிறார் சுனைனா.. சுனைனாவை மணக்க, அவரின் வீட்டிற்கு மணி என்கிற பெயரில் சென்று அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாருடைய அன்பையும் வென்று, சுனைனாவின் காதலை வெல்கிறான் மணி என்கிற மாசி என்கிற மாசிலாமணி.  இதற்கு நடுவில் ஒரு வில்லன் போலீஸ் ரூபத்தில் வர,  அவனிடம் முடிஞ்சா நான் மணியா, இல்ல மாசியா புருவ் பண்ணிக்கன்னு சவால் வேற, க்ளைமாக்ஸூல சுனைனாவுக்கு மணியும், மாசியும் ஒண்ணுதான் தெரிஞ்சிச்சா, அவங்க காதல் என்னாவாச்சுங்கிறதுதான் கதை.

masilamani-movie-photos-01

சொல்லும் போது அட பரவாயில்லையேன்னு நினைப்போம் ஆனா படம் முழுசா பாக்க முடியல . பல படங்களில் பார்த்த அரத பழசான சீன்கள், காமெடி பண்ணுகிறேன். நம்மை கிச்சு, கிச்சு, கூட மூட்டாத காட்சிகள் என்று நோகடிக்கிறார்கள்.

நகுல் நடிக்கிறேன் பேர்வழி என்று குஷ்டம் வந்தவன் போல் கையை வாயின் அருகில வைத்து கொண்டு அழும் காட்சிகள் கோரம்.  முகத்தில் எக்ஸ்ப்ரெஷன் என்பது கிலோ என்ன விலை என்று கேட்பார் போலிருக்கு. அதிலும் அவர் பேசும் தமிழ்.. என்ன கொடுமைடா சாமீ..

masilamani-movie-photos-09

சுனைனா.. ரொம்ப சொன்னைண்னா.. சப்பி போட்ட மாங்கொட்டை போல இருக்கிறார். முன் பல் வேறு தனியா தெரியுதா..?  டாம் அண்ட் ஜெரி, ஜெர்ரி எலி ஞாபகம் வருது.  க்ளைமாக்ஸுல அவர் பேசுற நீண்ட வசன் காட்சியில் என்னா உணர்ச்சி, என்னா ஒரு ஆக்ஸன்..?

காமெடி என்கிற பெயரில் சந்தானம், அண்ட் கோ வழக்கம் போல் சந்தானம் பேசிக் கொண்டே இருக்கிறார். ப்ரேமில் அவர் இல்லாவிட்டாலும் டப்பிங்கில் வாய் ஓவர்லாப்பிலேயே பேசி கொண்டிருக்கிறார். சொல்லி கொள்ளும் படியாய் இருக்கும் ஒரே நல்ல காமெடி ட்ராக் எம்.எஸ். பாஸ்கரின் ட்ராக்தான்  தனியொரு மனிதராய் காமெடி செய்திருக்கிறார். கூட கருணாஸ் வந்தாலும் அவரும் தன் பாட்டுக்கு பேசி கொண்டேயிருக்கிறார்.

masilamani-movie-photos-08

கேமராவை அங்கும் இங்கும், ஆட்ட்டியபடி படமெடுத்தால் பரபரப்பான காட்சியை காட்டுகிறோம் என்று இவருக்கு யார் சொல்லி கொடுத்தது. அவன் தலையில் இடிவிழ. கண்ணெல்லாம் வலிக்குது.

இமானின் இசையில் “டோரா..டோரா” பாடல் நன்றாகயிருக்கிறது. கவிதை குண்டர்  பாடிய ஓடி விளையாடு பாடல் பெரிய லெட் டவுன்.

R.N.R. மனோகர் நிறைய டிவி சீரியல்களில், திரைக்கதை வசனம் எழுதியவர். இன்னமும் டிவி சீரியல் மூடிலிருந்து வரவேயில்லை. மாசி, மணி குழப்பத்தை கிரேசிமோகன் அடித்து துவைத்து காயவைத்து பல வருஷங்கள் ஆகிவிட்டது. காமெடி என்கிற பெயரில் டெல்லி கணேஷ் வீட்டில்  அவர் அமைத்திருக்கும் காட்சிகள் பக்கா டிவி சீரியல். சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்  அடுத்த காட்சி என்ன வென்று, அவ்வளவு அமெச்சூரான ஐடியாக்கள். மாசியை மணியில்லை என்று நிருபிப்பதற்காக அவரின் அக்கா பெண்ணின்  மீது போலீஸ் ஜீப் ஏற்றி ஆஸ்பிட்டல் கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஒவர். அந்த காட்சியில் மட்டும் வரும் டிவிஸ்ட் ஓகே. masilamani-movie-photos-07

ஆனால் அநியாயமாய்  அந்த காலனியில் யாராவது  ஒண்ணுக்கு போவதானாலும் கூட மாசியை கேட்டு தான் போவது போல வைத்திருக்க்கும் ஹீரோ பில்டப் காட்சிகள் அநியாயம். க்ளைமாக்ஸ் காட்சியில் மாசி  இறந்துவிட்டதாக பொணமாய் படுத்திருப்பதும், ஊரே நடிப்பதும் போன்ற தெலுங்கு படங்களை தூக்கி சாப்பிடும் காட்சிகள். முடியல.  சுனைனா பேசும் வசனங்கள் அதைவிட  பழசிலும் பழசு அரத பழசு.

மாசிலாமணி  -  என்னத்தை சொல்ல. வழக்கம் போல சன் டிவிக்கு மட்டும் சூப்பர் ஹிட் .


Post a Comment

39 comments:

முரளிகண்ணன் said...

கேபிள்ஜி

உங்க கடைசி பன்ச் நாக் அவுட் பன்ச்.

ஸ்ரீ.... said...

//மாசிலாமணி - என்னத்தை சொல்ல. வழக்கம் போல சன் டிவிக்கு மட்டும் சூப்பர் ஹிட்.//

இது உங்க touch. சரியான விமர்சனம்.

ஸ்ரீ....

Sukumar said...

இந்த படத்துக்கும் ஊ ஊ ஊவா....சன் பிக்சர்ஸ் பெயரை பேசாம சங்கு பிக்சர்ஸ்னு மாத்திடலாம்....
தல.... ஜெயா டிவி பேட்டியில விமர்சனம் எழுதுவதால உங்களுக்கு எதாவது அச்சுறுத்தல் வருதானு கேட்டாங்கள்ள...... நீங்க இந்த மாதிரி படங்களை பார்ப்பதே உங்களுக்கு பெரிய அச்சுறுத்தல்தான் எங்களுக்கு புரியுது... வாழ்க உங்கள் கலை சேவை....!

Anbu said...

நல்ல வேலை நான் தப்பிச்சுட்டேன் அண்ணா

விமர்சனம் அருமை..

அகநாழிகை said...

கேபிள்,
நல்லாயிருங்க. வேறென்னத்த சொல்ல.
பொறாமையா இருக்கு.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Raju said...

சன் டிவியோட அடுத்த ஃப்ளா(ஆ)ப்பா..?
அவுக ரெண்டு பேரும் மெய்யாலுமே லவ்வுகறாகலாமே..
நெசமா தலீவா..?

தராசு said...

சன் பிக்சர்ஸ் எந்தப் படத்த எடுத்தாலும் அத கன்னா பின்னான்னு கலாய்க்கறீங்களே, இதுல எதாவது உள்குத்து, நுண்ணரசியல் அப்படி எதாவது இருக்கா?

biskothupayal said...

சன் டிவி சீரியல் எடுக்கபோரங்கனு படிச்சேன் அதனாலே இந்தப்படம் எடுத்தாங்க போலேருக்கு இதே கதையே 2500 எபிசொட் வரைக்கும் தாங்கும் !

நர்சிம் said...

சன் டீவிக்கு மட்டும் சூப்பர் ஹிட்.. ஹஹஹஹஹா

butterfly Surya said...

சன் டிவியின் மொக்கைகளில் அடுத்த வெளீயீடு அவ்ளோதான்.

தொடர்ந்து மசாலா படங்கள் (except அயன்) தோல்விய தழுவினாலும் தம்மிடம் மீடியா பலத்தால் எல்லா குப்பைகளையும் காசாக்கலாம் என்ற
தைரியத்தால் இந்த கதை தொடரும்.

தமிழ் சினிமாவை இப்படியே வைத்திருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு அலைபவர்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.

எப்படியோ எங்களையெல்லாம் தொடர்ந்து காப்பாற்றி கொண்டிருக்கும்
தங்கள் பொறுமைக்கும் பதிவிற்கும் நன்றிகள் பல.

கலையரசன் said...

கருப்பு பணத்தை எப்டிதான் வெள்ளையாக்குறதாம்?

வெட்டி வேலு said...

சன் பிக்கஸர்ஸ் படத்துலயே இது பெரிய மொக்கயா இருக்கும் போல

ரொம்ப நன்றி ... எங்களயெல்லாம் காப்பத்துனதுக்கு ...

K.S.Muthubalakrishnan said...

Sir,

Thanks for save us.

அக்னி பார்வை said...

////ஊரே நடிப்பதும் போன்ற தெலுங்கு படங்களை தூக்கி சாப்பிடும் காட்சிகள். முடியல.///

இப்ப தெலுங்கு படங்க எப்ப்டி இருக்குன்னு உங்களுக்கே தெரியும்!...

நையாண்டி நைனா said...

மாசிலாமணி = நாக்கில்லா மணி.

நன்றி அண்ணாத்தே... இந்த விமர்சனத்திற்கும் நம்ம கடையாண்ட வந்து கண்டுகிட்டதுக்கும்..

***************************
உங்க கமன்டை படிக்க தான் பத்து ரூபா கொடுத்து பிரவுசிங்லே உக்காந்து இருக்கேன்.


(நீங்க டாக்டரை தனியா இட்டுகினு போக தான் அல்லாரையும் தூர போங்க என்று நினைப்பது போல் கற்பனை செய்து இருக்கிறேன் )

Unknown said...

அதெப்பிடிங்க கேபிள்... சன் பிக்சர்ஸ் படம் ஒருக்காலும் மொக்கையாகாது. சன் டி.வி டாப் டென்னில் ஒரு 25 வாரமாவது டாப்பில் இருக்கும். எல்லாச் சானலிலும் ‘கண்கள் இரண்டால்' பாட்டும், ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' பாட்டும் டாப்பில் இருக்க, சன் டி.வி. வில் மட்டும் 'நாக்க மூக்க' பாட்டு டாப்பில் இருந்தது. கலைஞர் வசனம் எழுதினார் என்பதற்காக 2நாளில் தியேட்டரைவிட்டு ஓடின் உளியின் ஓசை ‘டாப் டென்'னில் ஐந்தாறு மாதங்கள் இருந்தது...இப்பிடீல்லாம் இருக்க எப்பிடிங்க ‘சன்' இந்தப் படத்தை தோக்க விடும்?? (நகுலோட முதல் படம் அப்படி ஒண்ணும் கிரேட் இல்ல...இருந்தும் ஓட சன் டி.வி.தான் காரணம். அதைவிட காமடி காபி வித் அனுவில இவனும் அவன் அக்காள் தேவயானியும் அடிச்ச கூத்து)

மேவி... said...

:-)

auto vara madiri theriyuthe....

Subha said...

Nice review sanar. The height of the comedy was...yesterday morning..sun tv...add...super hit Masilamani..i think that time the first show might not have been shown....is there any censor for these TV people...not to lie....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடப்பாவிகளா நேத்தே விமர்சனம் எழுதியிருந்தா எனக்கு 250Rs மிச்சமாயிருக்குமே. அவசரப் பட்டு டிக்கெட் புக் பண்ணிட்டனே.

puduvaisiva said...

ரொம்ப நன்றி தல
எங்களயெல்லாம் காப்பத்துனதுக்கு!!

Prabhu said...

நல்ல வேளை... இந்த இழவுக்கு இன்னைக்கு கூப்பிட்டுட்டு வேற இருந்தானுங்க.... ஜஸ்ட் மிஸ்!

Muthukumara Rajan said...

எல்லா படத்தையும் போய் பாக்குற உங்கள மாதிரி நாலு பேரு இருப்பதால் தான் எங்கள்ள மாதிரி ஆபவி ரசிகர்கள் தப்பிரிறோம் .

Great escape ..

Cable சங்கர் said...

/கேபிள்ஜி

உங்க கடைசி பன்ச் நாக் அவுட் பன்ச்.//

நன்றி முரளி.. ஸ்ரீ..

Cable சங்கர் said...

/தல.... ஜெயா டிவி பேட்டியில விமர்சனம் எழுதுவதால உங்களுக்கு எதாவது அச்சுறுத்தல் வருதானு கேட்டாங்கள்ள...... நீங்க இந்த மாதிரி படங்களை பார்ப்பதே உங்களுக்கு பெரிய அச்சுறுத்தல்தான் எங்களுக்கு புரியுது... வாழ்க உங்கள் கலை சேவை...//

:)

Cable சங்கர் said...

நன்றி,
அன்பு, அகநாழிகை, டக்ளஸ், நர்சிம்.

Cable சங்கர் said...

நன்றி
வண்ணத்து பூச்சியார்,
பிஸ்கோத்துபயல்.
முத்துகுமார்.
பப்பு,
புதுவை சிவா,
எஸ்.ஜி. ரமேஷ்.
மாயாவி..
கீத் குமாரசாமி,
நைனா,
முத்து பாலகிருஷ்ணன்,
கலையரசன்,
வெட்டி வேலு.

அத்திரி said...

//சன் பிக்சர்ஸ் எந்தப் படத்த எடுத்தாலும் அத கன்னா பின்னான்னு கலாய்க்கறீங்களே, இதுல எதாவது உள்குத்து, நுண்ணரசியல் அப்படி எதாவது இருக்கா?//

repeeeeaatttteeyyy......

ஷண்முகப்ரியன் said...

தமிழ் சினிமாவை இப்படியே வைத்திருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு அலைபவர்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.

எப்படியோ எங்களையெல்லாம் தொடர்ந்து காப்பாற்றி கொண்டிருக்கும்
தங்கள் பொறுமைக்கும் பதிவிற்கும் நன்றிகள் பல.//

வண்ணத்துப் பூச்சியாரை அப்படியே வழிமொழிகிறேன்.

Romeoboy said...

தல அந்த படத்த பார்த்து எவள்ளவு நொந்து போனேன் தெரியுமா .
அதும் நகுல் பேசுற தமிழ் இருக்கே யபா முடியல. என் பொண்டாட்டி என்ன அடிக்காத குறைய படம் முடிஞ்சி வீடு வரைக்கும் திட்டின. . தயவு செய்து யாரும் அந்த படத்துக்கு காசு வேஸ்ட் பண்ணி போய் பார்த்து தொலைகதிங்க .

Romeoboy said...

தல அந்த படத்த பார்த்து எவள்ளவு நொந்து போனேன் தெரியுமா .
அதும் நகுல் பேசுற தமிழ் இருக்கே யபா முடியல. என் பொண்டாட்டி என்ன அடிக்காத குறைய படம் முடிஞ்சி வீடு வரைக்கும் திட்டின. . தயவு செய்து யாரும் அந்த படத்துக்கு காசு வேஸ்ட் பண்ணி போய் பார்த்து தொலைகதிங்க .

butterfly Surya said...

பாவம் ராஜராஜன்.. சகோதரி அதை விட பாவம். எவ்வ்ளவு நொந்து போயிருந்தா இப்படி எழுதுவார்.

Vidhya Chandrasekaran said...

துவைச்சு காயப் போட்டிருக்கீங்க:)

VISA said...

நான் பார்த்தவரை தமிழில் நிறைய பணம் வச்சுகிட்டு சினிமா எடுக்க நிறைய பேரு இருக்காங்க. சரக்கு இல்ல. கூடவே சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருவேன் என்று ஒரு கும்பல் சினிமாவிலேயே அரசியல் பண்ற ஒரு கும்பல் இப்படி தமிழ் சினிமா தூள் பண்ணுது. இதுல உங்கள மாதிரி ஆட்களோட விமர்சனம் சினிமா காரங்களோட கண்ண தெறக்கலேன்னா கூட நம்ம ரசிக பெருமக்கள் முளிச்சுகிட்ட கூட நல்ல சினிமா வர வாய்ப்பிருக்கு. பார்ப்போம். ஆமாம் உங்கள் சினிமா எப்போது.

சுரேந்திரா said...

கேபிள் அண்ணா! விமர்சனம் வெளுத்து வாங்கிடீங்க! உச்ச கட்ட கொடுமை என்னன்னா "சன் ந்யூஸ்" ல இந்த படம் ரிலீஸ் பத்தி ஒரு பெரிய கவரேஜ் போட்டாங்க! தரமான படங்களை (???!) தந்து கொண்டிருக்கும் சன் பிக்சர் நிறுவனத்தின் அடுத்த மாபெரும் வெற்றி னு பொளந்து கட்டிட்டு இருக்காங்க! என்ன கொடும கேபிள் அண்ணா இது ??

Punnakku Moottai said...

சாமி,

சிங்கபூர்ல சினிமா பாக்க ரூ.350 ஆகும். போகலாம்முன்னு இருந்தேன். தப்பிச்சேன்.

'அயன்' படம் தயாரிப்பு AVM. Sun இல்லை. Sun Pitures only distribution. சும்மா பேர போட்டுக்கிட்டு ஏமாத்து வேல பண்ணுறான். யாரு கேக்கறது. பாவம் AVM.

காலம் கெட்டவனுக்குத் தான் போல.

இப்படிக்கு,

Thamira said...

அட கெரகம் புடிச்சவனுங்களா.? ஏன் இப்படி சாவடிக்கிறானுவோ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

www.sirippupolice.blogspot.com

குமுதம்: ரசிகர்களை எல்லாம் அழைத்து என்ன பேசினீர்கள்?
SA Chandrasekar: தமிழகம் முழுக்க உள்ள விஜயின் ரசிகர்கலியா அழைத்து அவர்களின் விருபத்தை கேட்டிருக்கிறோம். எல்லோரும் அவர்களின் ஆதரவை தெரிவித்தார்கள். வரும் ஜனவரியில் சென்னையில் மாநாடு நடக்கும் பொது மீதியை அறிவிப்போம்.

குமுதம்: விஜயகாந்த் கூட கட்சி ஆரமித்து இப்போது கணிசமான ஓட்டுவங்கியை உருவாகியிருக்கிறார். உங்களுக்கும் ஓட்டு கிடைக்குமா?
SAC: ஏன் இல்லை. தமிழ் நாட்டில் யாரை கேட்டலும் பெண்களின் அதிக செல்வாக்கை பெற்றவர் விஜய். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அவ்வளவு ஏன் விஜயகாந்தே விஜய் அரசியலுக்கு வருவதை எண்ணி பயப்படுகிறாரே?

குமுதம்: அவர் பயப்படுகிறார் என்று எப்படி சொல்கிறீர்கள்?
SAC: அவரது நண்பர்கள் வட்டாரத்தில் தனது அச்சத்தை வெளிபடுத்தினார் என்று எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இது சும்மா இல்லைங்க. SAC கொடுத்த பெட்டிதான். வேணும்னா இன்னிக்கு குமுதம் வாங்கி இத படிங்க. இப்பவே கண்ணா கேட்டுதே.

ரமேஷ் வைத்யா said...

தன்னை வருத்திக்கொண்டு பிறருக்கு நல்லது செய்யும் தியாகி கேபிள் சங்கர் வாழ்க.

பிரசன்னா கண்ணன் said...

சங்கர், உண்மையிலேயே சுனைனா நல்ல இல்லையா??
எனக்கென்னமோ அவள ரொம்ப பிடிச்சுருக்கு..