Thottal Thodarum

Dec 15, 2009

எண்டர் கவிதைகள் -2

Dave_loves_Sonia_Love

கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.

பழகினால் புரியும் என்றாள்

பழகினேன் அவள் பேச்சே

கவிதையாய் இருந்தது

ஓ.. இது தான் கவிதையா என்றேன்

இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு

இது வெண்பா என்றாள்

அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்

சீர், தளை, விருத்தம் என்றாள்

கவிதையை முழுதாய் புரிந்தேன்

இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.



தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Post a Comment

91 comments:

Paleo God said...

படம் நல்லா கவித்துவமா இருக்கு.... (என்ட்டர் கவிதை, கட் அண்ட் பேஸ்ட் படம் கலக்கறீங்க சங்கர்) :-)

மணிஜி said...

கவிதையை கற்று தந்தவருக்கு ”தூரம்” போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

Cable சங்கர் said...

/கவிதையை கற்று தந்தவருக்கு ”தூரம்” போயிருக்கும் என்று நினைக்கிறேன்.//

haa..haa..haa..

நையாண்டி நைனா said...

நான் சொல்ல நினைத்ததை அண்ணன் தண்டோரா கூறி விட்டார்.

நையாண்டி நைனா said...

நான் சொல்ல நினைத்ததை அண்ணன் தண்டோரா கூறி விட்டார்.

அண்ணாமலையான் said...

கவிதைய விடுங்க, படம் பாத்து இன்னும் எத்தன பேருக்கு தூரம் தூரம் போப்போதோ?

geethappriyan said...

அடடா,
தல நீங்களுமா?

பிரபாகர் said...

//இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.//
பின்னே இப்படியெல்லாம் சொல்லித்தந்தால் நாம யாருங்கறதே மறந்துடும்...
நல்லாருக்குண்ணே!

பிரபாகர்.

அன்பேசிவம் said...

கவிதையை முழுதாய் புரிந்தேன்

இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.
//

எண்டர் கவிஞர் சங்கரநாராயணனுக்கு வாழ்த்துக்கள்.

geethappriyan said...

தல,
நீங்களுமா?கலக்குங்க ஜி

ஜெட்லி... said...

படம் சூப்பர்...

அகநாழிகை said...

//தண்டோரா ...... said...
கவிதையை கற்று தந்தவருக்கு ”தூரம்” போயிருக்கும் என்று நினைக்கிறேன்.//

:)))))

அகநாழிகை said...

கவிதையாகவே
இருக்கிறது
கேபிள்
வாழ்த்துகள்
வாழ்க
வளமுடன்

(என்டர்
பின்னூட்டம்
அல்ல)

Prathap Kumar S. said...

அண்ணே படம் ஜூப்பரு.... கவுஜையுந்தான் சாரி..கவிதையும்தான்...

பாலா said...

ஐயோ... கொல்றாங்களே... கொல்றாங்களே....

பிரபாகர் said...

கவிதைக்கும் எனக்கும்
காததூரம் காதலி என்றேன்.
கற்றுத்தருகிறேன் கண்ணே என்றாள்.

பேசும் பேச்சே கவிதை
பேசு போதும் பைங்கிளி என்றேன்.
பேசுதலினும் பிற உண்டு என்றாள்.

முத்தமிட்டு வெண்பா தொடங்கி
முழுதாய் விளக்க
முழுதாய் புரிந்தது அவள்தான்...

கவிதை மீண்டும் எனக்கு காத தூரம்...

வரதராஜலு .பூ said...

கவிதை எனக்கு பழக்கமில்லை. சோ, நோ கமெண்ட்ஸ்

ஆனா, படம் சூப்பர்.

மேவி... said...

ithu thaan kavithai....

super chinna paiya

புலவன் புலிகேசி said...

கவிதையில் காமம் சொட்டுகிறது...ஒரு பைனல் டச்..."கற்று தர அவளிருப்பதால்"...எப்பூடி???

க.பாலாசி said...

//கவிதையை முழுதாய் புரிந்தேன்
இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது. //

கவிதை மட்டும்தானே....பரவாயில்ல விடுங்க...

Muthusamy Palaniappan said...

Good one...go on...try changing the subject you write on...then you will become one among the many writers

congrats...ini engalukku engu ponaalum "velai kaali illai" bord thaan :-(

Raju said...

போதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.பருகினால் புரியும்
என்றாள் பருகினேன் ,
அளவில்லா போதையாய்
இருந்தது.
ஓ.. இது தான் போதையா என்றேன்
இல்லை இன்னும் அடித்துப்பார் என்று
ஊற்றி சியர்ஸ் என்றாள்
அடுத்தாய் பருகிய‌
ஒவ்வொரு சரக்கையும்
பீர், விஸ்கி, பிராந்தி என்றாள்
போதையை முழுதாய் புரிந்தேன்
இப்போது என் வேட்டி முழுவதும் அவிழ்ந்துவிட்டது.

by

கேபிள் சங்கர் கொலைவெறிப் படை
(அரசு அங்கீ"காரம்" பெற்றது..ஸ்வீட் இல்லை.)

தமிழினியன் said...

///ஹாலிவுட் பாலா said...

ஐயோ... கொல்றாங்களே... கொல்றாங்களே....///

அதேதான்...

Sanjai Gandhi said...

//இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது. //
விடுங்க பாஸ்.. இன்னொருத்தர் வந்து கவிதை கத்துக் குடுக்காமலா போய்டுவாங்க.. :)

shortfilmindia.com said...

@நையாண்டி நைனா

நைனா.. இது சூப்பரா இருக்கே..

Raju said...

வெற்றிக்கும் எனக்கும் தூரம் என்றேன்.
போராடினால் கிடைக்கும் என்றாள்
போராடினேன் ,அளவில்லா
இன்பமாய் இருந்தது
ஓ.. இது தான் வெற்றியா என்றேன்
இல்லை, இன்னும் போராடிப்பார் என்று நெற்றி முத்தம் தந்தாள்
அடுத்தாய் கிடைத்த‌ஒவ்வொரு வெற்றியையும்
தூசு, துரும்பு, வீண் என்றாள்.
வெற்றியை முழுதாய் புரிந்தேன்.
இப்போது எனக்கு தோல்வி
அரிதாகிவிட்டது.

by

கேபிள் சங்கர் கொலைவெறிப் படை
(அரசு அங்கீ"காரம்" பெற்றது..ஸ்வீட் இல்லை.)

Kabi said...

கவிதா...கவிதா...அருவிய கொட்டுது...

shortfilmindia.com said...

@நையாண்டி நைனா
அடப்போங்கப்பா.. இது கூட நலலருக்கு

கேபிள் சங்கர்

க‌ரிச‌ல்கார‌ன் said...

எப்பா சாமிக‌ளா‌ ஒரு மெகா ப‌திவ‌ர் ச‌ந்திப்பு போட்டு த‌ல‌ய‌ யூத்து தான் ஒத்துக்க‌ங்ப்பா.முடிய‌ல‌

நாடோடி இலக்கியன் said...

காமம் சார்ந்த கவிதைகள் என்றாலே அழகுதான். அழகு அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

Raju said...

ஃபிகருக்கும் எனக்கும் தூரம் என்றேன்.
சைட்ட‌டித்தால் மடியும் என்றாள்
அடித்தேன் ,அளவில்லா
குஜாலாய் இருந்தது
ஓ.. இது தான் சைட்டடிக்கிறதா..? என்றேன்
இல்லை, இன்னும் அடித்துப்பார் என்றாள்
அடுத்தாய் கரெக்ட் செய்த ஒவ்வொரு ஃபிகரையும்
சப்பை, மொக்கை, வெட்டி என்றாள். சூப்பர்
ஃபிகர் ஒன்றை மடித்தேன்.
இப்போது எனக்கு எய்ட்ஸ்
வந்துவிட்டது.


by

கேபிள் சங்கர் கொலைவெறிப் படை
(அரசு அங்கீ"காரம்" பெற்றது..ஸ்வீட் இல்லை.)

தர்ஷன் said...

கேபிள் சாரின்
என்ட்டர் கவிதையும் அதை செப்பனிட்ட பிரபாகரின் கவிதையும் சூப்பர். கேபிள் சார் நீங்கள் எடுக்கும் படத்தில் நீங்கள் போட்டிருக்கும் படம் போன்ற காட்சிகள் வரும்தானே?

Prabhu said...

போங்க பாஸ், நேத்து ஆசுகவி மாதிரி இண்ஸ்டண்ட்டா ஒரு கவித ஆதி ப்ளாக்ல எழுதிட்டு உங்க பேர ரெஃபர் பண்ணிருந்தேன். நீங்க பிஸி ஆயிட்டீங்க போல. இருந்தாலும் இங்க வந்து உங்கள கொல பண்ணாம விடுவதில்லைனு வந்துட்டேன்... படிங்க அதை. அதுவே பெரிய தண்டனைங்கிறதால மேற் கொண்டு அபராதம் எதுவும் தேவையில்லை.

டாவென அழைத்த அவள்
க்ளோரோஃபார்ம் குரலில்
மயங்கிய
என்னை,
எட்டிப் பார்க்கத் திமிரும்
லோகட் முலைகளைப்
போல சிறிதாக எட்டிச்
சிதறும் அவள் தோழியின்
சிரிப்பின் வெக்கம்
சிறிதாக கொல்ல...
இருவரின் ஒற்றுமை
திருமணத்தில் தொடருமா எனக் கேட்க
சடுதியில் சென்றேன்.

Prabhu said...

படம் நல்லா கவித்துவமா இருக்கு.... ///

அவித்துவமா இருக்குப்பா :)

Raju said...

சும்மா இருக்காதே
என்டர் கவிதை எழுது என்றார் கேபிள்.
உரையாடல் கவிதை போட்டியை
மேற்கோள் காட்டினார்
கவிதை எழுது கவிதை எழுது
என்ற சங்கரின் கவிதையைச் சொன்னார்
கவிதை எழுதுவ‌தற்கும் எதிர்கவிதை எழுதுவதற்குமான‌
பின்னூட்ட‌க் குழப்பத்தில்
செய்திருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை

ஜ்யோவ்ராம் , எதிக்கவிதை எழுதியிருந்தால் இப்படித்தான் இருக்கும்.
:-)

by

கேபிள் சங்கர் கொலைவெறிப் படை
(அரசு அங்கீ"காரம்" பெற்றது..ஸ்வீட் இல்லை.)

எறும்பு said...

வேணாம் விட்டுருங்க :-)))

தராசு said...

அய்யோ, அய்யோ,

இந்த கேபிள் அண்ணன், ராஜுப் பையன் எல்லாருமா சேர்ந்து கொல்றாங்களே

vanila said...

உண்மையை சொல்லிவிடுங்கள் கேபிள்.. பதினஞ்சு வருஷம் முன்னாடி நான் எழுதுன கவிதயத்தான் நீங்க திரும்ப எழுதிருக்கீங்கன்னுட்டு..

ஈரோடு கதிர் said...

//கவிதையை முழுதாய் புரிந்தேன்//

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளு நீங்க

butterfly Surya said...

கேபிள் ஜீ .. இந்த கவிதையை அண்ணன் உ.த விற்கு dedicate செய்யவும். Please..

Thamira said...

மீண்டும் ஒரு அழகிய கவிதை ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது. :-(

Unknown said...

கவிதா சூப்பர்,,,, சீ.., கவித சூப்பர்..,

S.A. நவாஸுதீன் said...

எழுத்து
அசை
சீர்
தலை
அடி
தொடை

எல்லாமே புரிஞ்சிருக்குமே

நாடோடி இலக்கியன் said...

//ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது//

எனக்கும் அப்படித்தான் தோணுச்சு சங்கர் அண்ணே.

Ashok D said...

அடக்கடவுளே... இந்த அநியாயத்த தட்டி கேக்க ஆளே இல்லையா...

போட்டோ மட்டுமே கவிதை.. ஹாட்ஸ்பாட்டும் நன்று

வழக்கம்போல் ராஜுவின் கவிதைகள் அருமை.

ஸ்ரீநி said...

இந்த அக்ரமத்த கேக்க ஆளே இல்லையா ??????
இப்படி ஒரு படத்த போட்டு கீழ கவிதைய படின்னா எப்படி ?????

அப்படின்னு ..........

கவிதைக்குள்ள போனா படத்த விட கவிதை நல்ல இருக்கு

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு தலைவரே.

Ashok D said...

கவியல்ல என பகர்ந்தேன்;
பழகு புரியுமென்றால்;
மெல்லிடையாளின் பேச்சே
கவிதையாய் – முத்தமிட்டு
வெண்பா என்றாள்;
சீர், தளை, விருத்தம்
என முன்னேறி கவிதை
முழுவதுமாய் புரிந்த க்‌ஷ்னத்தில்
விட்டுவிலகியது கவிதை
-D.R.Ashok

கார்க்கிபவா said...

நானா இருந்தா கவிதையெல்லாம் வேண்டாம். உண்மைத்தமிழன் அண்னாச்சீயின் பதிவு எப்படின்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டிருப்பேன்.. இல்ல இல்ல தெரிஞ்சிக்கிட்டே இருந்துக் கொண்டேயிருப்பேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

Rajan said...

கைய வெச்சு மறைக்க வேணாம்னு சொல்லுங்க தல !

Vetri said...

இதுதான் எண்டர் கவிதையா? ஆனாலும் சூப்பர்....

பெசொவி said...

கேபிள் அண்ணனின் கவிதை சூப்பர் என்றால் பின்னூட்டங்கள் சூப்பரோ சூப்பர்!

Unknown said...

இப்போ தானே மரபுக்கவிதை படிச்சிருக்கிருங்க, இன்னும் அடுத்தடுத்து புதுகவிதை, நவீனகவிதை, பின்’நவீனகவிதையெல்லாம் படிக்க வாழ்த்துகள் ;-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

சாமியோவ் .... அப்பப்ப இப்படி தரிசனம் கிடைக்குமா ...

VISA said...

KAVITHAI எனக்கு தூரம் என்றேன்.
படுத்தால் புரியும் என்றாள்
படுத்தேன்.
அவள் அணைப்பே கவிதையாய் இருந்Tஹது.
ஓ...இது தான் கவிதையா என்றேன்.....
இல்லை இன்னும் சொல்லித் தருகிறேன்
என்று கைகளை பற்றி இழுத்தாள்.
இது வெண்பா என்றாள்.
அதென்ன இரண்டு இருக்குது என்று துள்ளினேன்.
அடுத்ததாய் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்
புரிந்து பதினெண் கீழ் கணக்கு வரை
தெளிவுற்றேன்.
கவிதையை முழுதாய் புரிந்தேன்.

இப்போது எனக்கு கவிதை பக்கத்தில் தான் இருக்கிறது.
காசு தான் இல்லை....போக....


BY

கேபிள் சங்கர் கொலைவெறிப் படை
(அரசு அங்கீ"காரம்" பெற்றது..ஸ்வீட் இல்லை.)

shortfilmindia.com said...

/கவியல்ல என பகர்ந்தேன்;
பழகு புரியுமென்றால்;
மெல்லிடையாளின் பேச்சே
கவிதையாய் – முத்தமிட்டு
வெண்பா என்றாள்;
சீர், தளை, விருத்தம்
என முன்னேறி கவிதை
முழுவதுமாய் புரிந்த க்‌ஷ்னத்தில்
விட்டுவிலகியது கவிதை//

அலோ.. இது பேர் கவிதையா.. என்னை போல புரியிற மாதிரி எய்துப்பா.. ஏதோ 60 வ்ருஷ் சினிமா பாட்டு மாதிரி.. மெல்லிடையாள், துள்ளிடையாள்னுட்டு..

கேபிள் சங்கர்

பூங்குன்றன்.வே said...

படம் மட்டும் அருமை...

என்னண்ணா...கவிதையா?

அதை யார்னே படிப்பாங்க இந்த படத்தை பார்த்தப்புறம்..ஹி ஹி

சிவகுமார் said...

Kavithaaa ..., Kavithaaaa ...,

Superraaappuuuuuuuuu

Beski said...

படம் சூப்பர்.

ஹாட் ஸ்பாட்ட க்ளிக் பண்ணா சூப்பரோ சூப்பர்.

Keddavan said...

அடுத்து நடந்த விடயங்களையும் விளக்கிசொல்லியிருக்கலாம்..ஹிஹி....

Unknown said...

சீர் எழ்த்து வெண்பா அடி தொடை என் தொட்டு பாடம் நடத்துகிறார்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. நல்ல ரசனை உங்களுக்கு.


வாழ்த்துக்கள்

Romeoboy said...

\\பழகினேன் அவள் பேச்சே

கவிதையாய் இருந்தது //



சூப்பர் வரி தல ..

நிலாரசிகன் said...

தலைப்பை தவிர கவிதை நன்றாகவே இருக்கிறது ஜி..

அத்திரி said...

ஏன் ஏன் இப்படி கொலைவெறி????
ரைட்டு

பா.ராஜாராம் said...

:-)))))

தண்டோரா!

ச.முத்துவேல் said...

கவிதைக்குக் கிட்ட வரும்போது, தூரம் போயிட்டேங்கறீங்க. சரி விடுங்க. மூனு நாள்தான்.

படம் சூப்பரோ சூப்பர்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

படத்தை பார்த்து கவிதையை படிக்க வந்தேன்.ஆனா இந்த "கேபிள் சங்கர் கொலைவெறிப் படை"யோட தாக்குதல்ல வந்த வழியே திரும்பி கூட பாக்காம ஓடிக்கிட்டிருக்கேன். கேபிளண்ணே கொஞ்சம் கவனமா இருங்க.உயிர் பொழைச்சா எங்கிட்டாவது பாப்போம்.

சங்கர் said...

கவிதை தூரம் போகுதோ இல்லையோ,
படம் பார்த்தா
தூக்கம் வெகு தூரம் போய்விட்டது

(எண்டர் சரியா இருக்கா?)

Cable சங்கர் said...

@பலாபட்டறை

உங்க இடது வலது கவிதைய பாத்துட்டு நீஙக் என்னை பாராட்டுறத பார்த்தா.. ரொம்பத்தான் வெக்கமா இருக்கு

@நையாண்டி நைனா..
:)

@அண்ணாமலையான்
ஹா..ஹா

Cable சங்கர் said...

@கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
ஏன்..????

@பிரபாகர்
அது சரி..

@முரளிகுமார் பத்மநாபன்
ஹி..ஹி. நன்றிங்கோ

@ஜெட்லி
அப்ப கவிதை..?:(((

Cable சங்கர் said...

@அகநாழிகை..

அட நீங்களே நலலருக்குங்குற மாதிரி சொல்லிட்டீங்க ஓகே..:)

@நாஞ்சில் பிரதாப்
ஏதோ ஒன்ணு நலலருந்தா சரி

@ஹாலிவுட்பாலா
யார் அது..யார் அது.. சொல்லுங்க இன்னொரு கவிதை அனுப்பறேன்

@பிரபாகர்
பாருங்கய்யா ஒரு கவிதை நல்லாயில்லைன்னு ஒரு மனுச்ன கோவிச்சிட்டு சிங்கபூர்லேர்ந்து கவிதை எழுதி அனுப்ப்புறாரு.. என்னவோ போங்க.. என்னால மக்களுக்கு நல்ல கவிதை கிடைச்சா சரி

@

Cable சங்கர் said...

@வரதராஜுலு
கவிதை பழக்கமில்லைன்னா என்ன பழகிக்கறதுதானே.?:)

@டம்பிமேவி
ஆனாலும் என் வயசை ரொம்பத்தான் குறைச்சிட்டீங்க

@புலவன் புலிகேசி
அட இது கூட நல்லாத்தானே இருக்கு.. சேத்து படிச்சிக்கிங்கப்பா..

@க.பாலாசி
என்னவோ சொல்றீங்கன்னு புரியுது...

@முத்துசாமி பழனியப்பன்
நிச்சயம் நான் ட்ரை பண்ணிறேன்.

shortfilmindia.com said...

@சுப.தமிழினியன்

என்ன அதேதான் அப்ப அடுத்த கவிதை உங்களுக்குதான்..:)

@கபி
ஹி..ஹி ரொம்பத்தான் பாராட்டுறீங்க

@கரிசல் காரன்
அப்படி சொன்னா மட்டும் விட்டுறுவோமா..?

@நாடோடி இலக்கியன்
நீங்களே சொல்லிட்டீங்க..நன்றி

கேபிள் சங்கர்

Cable சங்கர் said...

@ராஜு
பின்னுறியே நண்பா..

@தர்ஷன்
பாருங்க நம்ம கவிதைய படிச்சா எவ்வளவு பேருக்கு கவிதை வருதுன்னு..:)

@பப்பு
நம்ம யூத்துக்களை இவங்களால புரிஞ்சிக்க முடியாது.. எனக்கு புரியுது உன் கவிதை

Cable சங்கர் said...

@ராஜகோபால்
எதை..?

@தராசு..

ரெண்டு கவிதை பார்சல்.. ராஜு

@வனிலா
எப்ப எழுதினா என்ன கவிதை கவித தானே..?

@ஈரோடு கதிர்

எதூதூதூதூல..?
@சூர்யா
நிச்ச்யமாக

@ஆதீமுலகிருஷ்ணன்
ஜஸ்ட்டுதானே அடுத்ததுல சரி பண்ணீரலாம்

@பேநாமூடி
ஹி..ஹி..சாரி

@

Cable சங்கர் said...

@நவாஸுதீன்
ஹி..ஹி.. நீஙக் என்னைவிட ஸமார்டா யோசிக்கீறீங்க.

@நாடோடி இலக்கியன்
சரி பண்ணிடலாம்

@அசோக்
பொறாமை..பொறாமை..

@ஸ்ரீநி
ரொம்ப நன்றிங்க

Cable சங்கர் said...

@ஸ்ரீ
நன்றி

@கார்க்கி
அங்க போய் உண்மைதமிழனை பத்தியா..?

அவ்வ்வ்வ்வ்

@ராஜன் ராதா மணாளன்
அடுத்த படத்துல சொல்லிர்ரேன்

@வெற்றி
ஆமா.. நன்றி

Cable சங்கர் said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றிண்ணே

@கேவிஆர்
ஏதேதோ சொல்றீங்க..

@ஸ்டார்ஜான்
எட்டி பாருங்க

@விசா
உங்களுக்கும் வந்திருச்சா இந்த வியாதி

@

Cable சங்கர் said...

@பூங்குன்றன்
நம்மபதிவுக்கு வந்தவஙக் ஏமாத்ததோட திரும்ப போகக்கூடாது

@சிவகுமார்
நன்றிண்ணே

@அதிபிரதாபன்
நன்றி.

@ராஜீபன்
அது செக்ஸா இருககாது..?:))))

2மோகன்
அப்ப்டித்தான் இலக்கணம் கத்துகிடனுமோ

வெற்றி said...

அந்த பொண்ண தலைமுடிய முன்னால போட வேணாம்னு சொல்லுங்க தல....

Cable சங்கர் said...

@ஆரூரன் விசுவநாதன்
நன்றி

@ரோமிபாய்
நன்றி

@நிலாரசிகன்
அப்படியா சொறீங்க

@அத்திரி
ஏன்

@பா.ராஜாராம்
எதுக்கு சிரிப்பு.. தண்டோராவுக்கா..:(((

Cable சங்கர் said...

@ச.முத்துவேல்
அப்ப மூணு நாள் கழிச்சு வேற் கவிதை எழுத சொல்றீங்க..

@சிவா
நில்லுங்க..நில்லுங.. அடுத்த கவிதை பின்னாடியே வருது.. அலோ சார்.. நில்லுங்க

@சங்கர்
எப்படியோஒண்னு நடந்தா சரி..

கார்க்கிபவா said...

ஹலோ, பதிவுல இருக்கிற படம் ஹாட் ஸ்பாட்ட விட நல்லாவே இருக்கு. ஐ மீன் ஹாட்டா இருக்கு

Cable சங்கர் said...

@கார்க்கி
சகா, தூக்கம் வராம பின்னூட்டம் போட்டீங்களா..? இல்ல படம் பார்த்து தூக்கம் வரலையா..?

Unknown said...

மெய்யாலுமே நல்லாருக்கு கேபிள் சார்...

shortfilmindia.com said...

@அன்பரசன்
நன்றிங்க..

கேபிள் சங்கர்

Unknown said...

தல மறந்துடீங்களே... திருப்பூர் வந்தப்ப போட்டோவெல்லாம் , எடுத்தீங்களே....

பேரரசன்...

ஒரு ரேப் சீன்...

Cable சங்கர் said...

ada நீங்களா.. கொடுத்திடலாம் ரெடியா. ?/ நல்லா ப்ராக்டீஸ் பண்ணிக்கங்க..

தமிழினியன் said...

//

@சுப.தமிழினியன்

என்ன அதேதான் அப்ப அடுத்த கவிதை உங்களுக்குதான்..:)

//

முதல்ல சொன்னது பாலா தான் பஃர்ஸ்டு அவருக்கு நெக்ஸ்டுதான் எனக்கு...
சீனியாரிட்டிபடி செய்யல அவ்ளோதான் அப்புறம் நான் அவுட்டர் கவிதை போட்டுடுவேன். அதான் எதிர் கவுஜ