Thottal Thodarum

Sep 16, 2010

பின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி?

பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோசிச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதறவங்க, பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை. 

ஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து.

பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை.

சரி அவங்க நாமளாவது பின்னூட்டமிடுவோம்னு அவங்க பதிவ படிச்சிட்டு ஏதோ நாம அப்ரண்டீஸாக இருப்பதினால்.. சூப்பர்.. நல்ல பதிவுன்னு போட்டா.. டெம்ப்ளேட் பின்னூட்டம்னு   பதிவெழுதி நம்ம மானத்தை வாங்குறாங்க..

பதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவதற்காகவே முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு, லேப்டாப்பில் இண்டர்வெலிலேயே விமர்சனமெழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.  சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கு வாசகர்களிடம் பெரிய வரவேற்ப்பை வைத்து ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி.

செக்ஸ் சம்மந்தமாய் எதாவது பதிவிட்டாலும் வெகுவாக மக்களிடம் போய் சேருகிறது.. ஆனால் பார்த்துவிட்டு பின்னூட்டம் தான் இடமாட்டார்கள். கிட்டத்தட்ட பிட் படம் பார்க்க போய்விட்டு உள்ளுக்குள் கிளுகிளுப்பதை போல், படித்துவிட்டு போய்விடுகிறார்கள்.. பின்னூட்டமிட்டால் வந்து படிச்சது தெரிஞ்சிருமோ..?

சரி எதையாவது எழுதி தொலைத்தோம்னு வச்சிக்க்கங்க.. அதுக்கு தலைப்பை பிடிக்கறதுக்குள்ளே அவனவன் படற அவஸ்தை இருக்கே.. ஸ்...அப்பா.. நினைச்சாலே கண்ணைகட்டும்.. பரங்கிமலை பத்தி எழுதணும்னா “பரங்கிமலை போல நிற்கும் ஜோதின்னு” தலைப்பை போட்டாதான் உள்ளேயே வராங்க..

அப்புறம் ஒரு முக்கிய விஷயம். புதுசு புதுசா வர்ற எல்லா திரட்டிகள்ளேயும் இணைச்சுட்டு, சகட்டு மேனிக்கு பதிவை விட பெருசா பக்கம் புல்லா ஓட்டுப் பெட்டியை மட்டுமே போட்டிருக்காங்க. அது அத்தனைக்கும் நீங்க ஒரு அக்கவுண்டை ஓப்பன் பண்ணி சிரத்தையா ஓட்டுப் போட்டா.. உங்களுக்கு வந்து ஓட்டு போடுவாங்க.

இப்படி கஷ்டப்பட்டு , வேதனைப்பட்டு பதிவெழுதறவங்களை பத்தி நான் என்னனு சொல்ல.. அதெல்லாம் ஓரு தவம்ன்னு தெரிய வருது.. அதனால நான் சொல்ல வரது என்ன்னனா..? நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்னு ஐன்ஸ்டைன் ரேஞ்சுக்கு, சிந்தனையை சிதறவிட்ட்டா ஒண்ணும் பேராது. நிதம் குறைஞ்சது 30 பதிவுகள் படிச்சி, டெம்ப்ளேட் பின்னூட்டமாவது போட்டாத்தான் ஒரு பத்து பர்சண்ட் திரும்ப நமக்கு ஓட்டும் பின்னூட்டமும் கிடைக்கும். ஆமா ஞாபகம் வச்சிக்கங்க.

கொஞ்சம் பிரபலமவனும்னா ஒண்ணும் பெரிய விஷயமில்லை.. ஆணாதிக்கம், பதிவரசியல், போபால், என்று இந்திய பிரதமருக்கு கூட விளங்காத ஒரு சில விஷயங்களையெல்லாம் தினம் ஒரு கட்டுரை எழுதினா.. நாமளும் பிரபல பதிவராவது உறுதி. என்ன சீ..தூ.னுஎல்லாம் பதிவுல திட்டு வாஙக் வேண்டியிருக்கும்

அப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி பாத்தப்போ.. தான் புரிஞ்சுது தினம் எதையாவது எழுதறது எவ்வளவு கஷ்டம்னு.. எதோ என்னோட இன்னைய கடமை முடிஞ்சது. ஓரு மொக்கை பதிவை ரி எடிட் பண்ணி பப்ளிஷ் பண்ணிட்டேன். எவ்வளவு கஷ்டம்டா சாமி...படிக்கிறவங்க எல்லோரும் தயவு செஞ்சு பின்னூட்டம் போட்டுறுங்க.. இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க..
கேபிள் சங்கர்
Post a Comment

60 comments:

க ரா said...

சீக்கிரம் இண்ட்லில சப்மிட் பன்னுங்க.. ஒட்டு போடனுமா இல்லயா :)

க ரா said...

எதாவது எழுதனுன்னு என்னய மாதிரி சின்ன பையன்/பதிவருங்க நினைக்கலாம்.. நீங்க ஏன் ? :)

கார்க்கிபவா said...

என் கடமையை செய்றேன். அவ்ளோதான்

எறும்பு said...

ராமசாமி அண்ணே, நேத்து எங்க போனீங்க?

க ரா said...

நேத்திக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்னா.. நீங்க என்னய தேடினதா உ.த.அண்ணாச்சி சொன்னாரு :)

எறும்பு said...

//நேத்திக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்னா.. //
Officelaiyum தூக்கமா?
ஏன் அண்ணே,கேபிள்ஜி இவ்வளவு அறிவுரை சொல்றதுக்கு பதிலா ஒரு புனைவு எழுதினா கூட்டம் அப்படியே அம்மாது?!

பித்தன் said...

naangalaum prabala pathivar aaganumilla

க ரா said...

எறும்பு said...

//நேத்திக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்னா.. //
Officelaiyum தூக்கமா?
---
என்ன பண்ண சொல்றீங்க... ஆபிஸ்லதான் தூக்கம் வருது :)

King Viswa said...

//பதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவதற்காகவே முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு, லேப்டாப்பில் இண்டர்வெலிலேயே விமர்சனமெழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கு வாசகர்களிடம் பெரிய வரவேற்ப்பை வைத்து ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்//

என்னுடைய நெருங்கிய நபரும் யூத் பதிவருமாகிய அவரை நீங்கள் இப்படி எழுதி இருப்பதை கண்டித்து உடனடியாக கொய்யா சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்.

எறும்பு said...

கேபிள்ஜி, உங்கள் பதிவை முழுதும் படித்தேன். என் பங்குக்கு வோட்டும் போட்டேன். ஆனால் எனக்கு புரியாத விஷயம்,Labelsla ஏன் நகைச்சுவைன்னு போட்ருகீங்க?!!இது எவ்வளவு சீரியசான பதிவு, இதுல போயா விளையாடுவீங்க?

என்னது நானு யாரா? said...

என்னை போன்ற புதிய பதிவாளர்களுக்கு, நீங்க நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி தலைவரே!

Kiruthigan said...

என் கடன் பணிசெய்து கிடப்பதே!!!

http://tamilpp.blogspot.com/2010/09/blog-post_16.html#

அன்புடன் பிரசன்னா said...

நல்ல ஒரு பிரயோசமான பதிவு, புதிதாக பதிவாளர்களாக வந்திருப்பவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யு, என்னுடைய பங்குக்கு ஒரு ஓட்டு, செல்லாத ஓட்டெல்லாம் இல்லீங்க...

பெசொவி said...

:)
இப்ப என் பதிவுக்கு எல்லாம் பின்னூட்டம் போடுவீங்க தானே?

ம.தி.சுதா said...

சகோதர இந்தப் பதிவிற்கு 100ற்கு 100 மதிப்பெண்கள் காரணம் நீங்க சொன்னத போல இன்ற எனக்கு நடந்தது. பதிவுலகிற்க அறிமகமாகம் நான் ஒரு சினிமா விடயத்தை கொஞ்சம் ஆபாசத் தலைப்புடன் இட்டேன். 8 மணித்தியாலத்தில் 1200 மேட்பட்ட வருகையாளர்கள் (பக்கப் பார்வையாளர் இன்னும் அதிகம்). கேள்வி நெட்ல் ஒரெ பாச்சலில் 20 இடம் முன்னேற்றம் ஆனால் தாங்கள் சொன்னத போல் ஒரு சில பின் ஊட்டங்கள் தான் இத தான் அந்தப் பதிவு
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_16.html

மங்களூர் சிவா said...

புனைவு சூப்பர்!

Ŝ₤Ω..™ said...

அண்ணே.. யாரையோ திட்டற நீ.. ஆனா அது யாருன்னு தான் புரியல.. எது எப்படியோ, கமெண்டு போட்டுட்டேன்.. ஒழுங்கா என் என் கடைக்கும் வந்து 2 வார்த்தை பேசிட்டு போகனும்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்ம்..

ஞே...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோசிச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்..////

ஆமாம்பாபாபாபா.......ஆமா ......

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///திவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள்....////

Adress pls sir

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை ///

அண்ணே ,
அது நீ தான் அண்ணே ...,நான் ப்ளாக் ஆரம்பிச்சு எவ்ளோ நாள் ஆச்சு ..,ஒரு தரம் வந்து பார்த்துட்டு நல்லயில்லாடா இன்னும் நீ நிறைய கத்துக்கணும் சொன்னியா அண்ணே ...,அப்துல்லா அண்ணாச்சி எல்லாம் வந்து எப்படி பிளாக்கர் use பண்றதுன்னு எப்படின்னு பின்னூட்டம் போட்டாரு...,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மற்றபடி ரொம்ப பிரயோசமான பதிவு அண்ணே

நேசமித்ரன் said...

ம்ம் ரைட்டு விளங்கிருச்சு :)

ப.கந்தசாமி said...

தம்பி, நான் எப்படியாச்சும் என் ஆயுசுக்குள்ள பிரபலமாகணும்னு துடிச்சிக்கிட்டு இருக்கறப்ப, உங்க பதிவு வந்து காப்பாத்தீட்டதுங்க. ரொம்ப நன்றீங்க.

karthic said...

present sir......

PB Raj said...

என்னே சார் இப்படி பண்ணிடிங்க ? ரொம்ப எதிர்பார்த்தேன் நல்ல விஷயம் எழுதுவீர்கள் என ..

கோவி.கண்ணன் said...

நாலு நாளைக்கு முன்பு பரிசலுக்கு எழுத மேட்டர் கிடைக்கலை. இப்போ உங்களுக்குமா ?

அவ்வ்வ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

பிரபலம்....பிரபலம்.....பிரபலம்....

(சச்சின் படத்து காதல்....காதல்...காதல்....மாதிரி படிங்க)

vinthaimanithan said...

ம்ம்ம்... நல்லாவே புரியுது. நாளுக்கு நாற்பது பதிவ படிக்கணும்.... அதுவும் புதுசா கடை தொறக்கறவங்ககிட்ட போயி 'ஊக்கு'விக்கணும். பதிவுல என்ன எளவு மேட்டர் எளுதியிருக்கான்னுகூட பாக்காம, சூப்பரு, நல்லாருக்கு, உருக்கிட்டீங்க, கிழிச்சிட்டீங்கன்னு அப்டீன்னெல்லாம் கூசாம பொய் சொல்லணும்.

நல்லா இருக்குய்யா ஐடியா!

Jackiesekar said...

என்னுடைய நெருங்கிய நபரும் யூத் பதிவருமாகிய அவரை நீங்கள் இப்படி எழுதி இருப்பதை கண்டித்து உடனடியாக கொய்யா சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன். //

கேபிள் இதுதான் அப்பு எங்க இருக்குன்னு தேடி போய் உட்காருவது.....

Jackiesekar said...

//// சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை ///

அண்ணே ,
அது நீ தான் அண்ணே ...,நான் ப்ளாக் ஆரம்பிச்சு எவ்ளோ நாள் ஆச்சு ..,ஒரு தரம் வந்து பார்த்துட்டு நல்லயில்லாடா இன்னும் நீ நிறைய கத்துக்கணும் சொன்னியா அண்ணே ...,அப்துல்லா அண்ணாச்சி எல்லாம் வந்து எப்படி பிளாக்கர் use பண்றதுன்னு எப்படின்னு பின்னூட்டம் போட்டாரு..., ///

நரி தம்பி.. சபையில இப்படியெல்லாம் உண்மைய போட்டு உடைக்ககூடாது சொல்லிபுட்டேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பட் உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்குண்ணே!

Anonymous said...

//
அப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி//

அதான் எல்லாத்தையும் சொல்லீட்டீங்களே...எவ்வளவு நாளானதுங்க இதையெல்லாம் கண்டுபிடிக்க....ஹ்ஹஹஹ்ஹா

deen_uk said...

pathivulagathila pirabalam aagurathum,niraya pinnootam vaangurathum romba sulabam nanbare..!! rajini sir patri thittiyo,enthiran thalaippu eluthi,athai ethirttho oru pathivu eluthinaal,neenga periya hit..!!! ithu thaan ippo nadanthuttu irukku..!! rajini poga rahman sir ai kooda thitti eluthalaam..!! its 100 % guaranteed 2 become famous!!

சிவராம்குமார் said...

இந்த மாதிரி தில்லாலங்கடி வேலையெல்லாம் பாக்கனும்கிறீங்க!...பாத்துருவோம்...

CS. Mohan Kumar said...

இந்த பதிவை நான் மிக ரசித்தேன். முன்பே எழுதினீர்களா? அப்போ படிக்கலை . எழுதியுள்ளதில் பல விஷயம் பதிவுலகில் நடப்பது தான்

Sen22 said...

:(
Present sir..

துளசி கோபால் said...

சொந்தமாய் கணினி, இண்ட்டர்நெட் கனெக்ஷன் எல்லாம் வச்சுருக்கும் நான் வார இறுதியில் பொதுவாய் பதிவுகள் வெளியிடுவதில்லை.

அது குடும்பத்துக்கு உரிய நாள்னு ஒதுக்கி வச்சுருக்கு.

அன்னிக்கு மேட்டர் தேத்தினால்தான் வாரநாட்களில் எதாவது எழுதமுடியும் என்பது (பரம) ரகசியம்:-)))))

Vidhoosh said...

////labels நகைசுவைன்னு போட்ருகீங்க. நீங்க எழுதுற எல்லாமே காமெடிதான். இத label போட்டு விளக்க வேற செய்யணுமா!!!!! //////

இது எனக்கு "குறுமுனி" அப்டிங்கற மொகமூடி ப்ளாகன் எழுதியது . இங்கே பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றுவதால்.... :))

Philosophy Prabhakaran said...

சூப்பர்... நல்ல பதிவு...

நாங்களும் டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவம்ல...

DR said...

"மனதை நிறைய வைக்கும் கருத்து செறிவு கொண்ட ஒரு சிறந்த பதிவு. இந்த சமுதாயம் முன்னேற இது போன்ற சிறந்த எழுத்து நடை கொண்ட பதிவுகள் மக்களை சென்று அடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்."

இதையும் டெம்ப்ளேட் பின்னூட்டம் என்றால் நா ஒண்ணும் பண்ண முடியாது.

Anonymous said...

மொய்க்க்ய் மொய் தானா பின்னூட்டத்திலும்.அடேங்கப்பா

rajeshkannan said...
This comment has been removed by the author.
rajeshkannan said...

visayamaa.... illai visamaa....

2nd line in first paragraph :-)

Anna unga ella pathivukkum pinutam pottu prebalamanavanga palaper...

rajeshkannan said...

visayamaa.... illai visamaa....

2nd line in first paragraph :-)

Anna unga ella pathivukkum pinutam pottu prebalamanavanga palaper...

Jana said...

பின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி??
அடுத்த புத்தகமா தலை! வெளியீடு எப்ப?

Thamira said...

பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. //

தமிழ் தவறில்லாமல் எப்படி எழுதுவது என்பதையும் உங்களிடம்தான் கற்க வேண்டும் கேபிள்.

suneel krishnan said...

பதிவு பிரபலமாக ,பின்னூட்டம் வாங்க இதுவும் ஒரு வழி போல இருக்கு :)

Sundararajan P said...

குருவே நமஹ!!

அருண் பிரசாத் said...

50 போட்டாச்சு

அருண் பிரசாத் said...

இதுவும் ஒரு வித பிரபலம் ஆகுற வழி பாஸ்

இளங்கோ said...

// இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க.. //
:D

அணில் said...

//தயவு செஞ்சு பின்னூட்டம் போட்டுறுங்க.. இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க..

ஹி.ஹீ.ஹி....

N.Parthiban said...

voted for first time :-)

endrum anbudan,
N.Parthiban
www.parthichezhian.com

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவதற்காகவே முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு, லேப்டாப்பில் இண்டர்வெலிலேயே விமர்சனமெழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.

wonderfull lines.sema comedy.(ennaiththaan nakkal adikkariingalo,irundhaalum paravaayillai.

Unknown said...

hahaha

Sami said...

பின்னுட்டமிடறதும் சும்மா இல்லை இப்படி மொக்கைய போட்டுட்டு பின்னுட்டமிடுனு சொன்ன எப்படி முடியும்

Unknown said...

"சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கு வாசகர்களிடம் பெரிய வரவேற்ப்பை வைத்து ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி.""


மிக ரசித்தேன்.

குமரன் said...

மொக்கை பதிவு. வினவு எழுதுகிற மாதிரி சமூக, பொருளாதார, அரசியல் விசயங்களை எழுத தெரியவில்லையென்றால்...அமைதியாகவாவது இருக்கலாம். தேவையில்லாமல் போகிற போக்கில் எழுதி... இருக்கிற பெயரையும் கெடுத்து கொள்ளவேண்டாம் கேபிள்.

சசிகுமார் பாலகிருஸ்ணன் said...

ரொம்ப ஆராய்ச்சியெல்லாம் செய்து எழுதியிருக்கீங்க...
ரொம்ப பயனுள்ளதா இருக்கு.

சரி சரி சீக்கிரமா என்னொட வலைப்பதிவுல பின்னூட்டமிடுங்க.