Thottal Thodarum

Dec 24, 2010

மன்மதன் அம்பு

manmadhan சென்ற வருட வெற்றிப் படமான உன்னைப் போல் ஒருவனுக்கு பிறகு கமலின் அடுத்த படம். மன்மதன் அம்பு. மன்னார், மதன், அம்புஜாக்‌ஷி எனும் மூன்று பேரை குறிக்கும் பெயர் தான் என்றாலும் மன்மதனின் அம்பு பாய்ந்ததில் காதலர்களுக்கிடையே நடக்கும் ஊடலையும், பிரிவையும் பற்றிய  நகைச்சுவை படம் தான்.

அம்புஜாக்‌ஷி என்கிற நிஷா ஒரு வெற்றி பட நடிகை. அவளுடய காதலனும், வருங்கால கணவனுமாகிய மதன கோபாலுக்கு அவள் மற்ற நடிகர்களிடம் நெருக்கமாய் பழகுவது பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அவனுடய அம்மா. அவளுக்கு ஒரு நடிகை தன் மருமகளாய் வருவது பிடிக்கவில்லை. மதன கோபாலின் சந்தேகப் புத்தியினால் அம்புஜாக்‌ஷி என்கிற நிஷா அவனை விட்டு பிரிகிறாள்.

manmadhan1
மூன்று வருடங்களுக்கு பிறகு தன் பள்ளித் தோழியான தீபாவுடன் ஒரு ஹாலிடே டூருக்காக வெனீஸ் வருகிறாள். தீபா ரெண்டு குழந்தைகளுடன் வாழும் டைவர்ஸி.  அம்புஜாக்‌ஷியை பற்றி டிடெக்டிவ் வேலை செய்யச் சொல்லி மன்னார் என்கிற மேஜர் ராஜ மன்னாரை அனுப்புகிறான் மதன கோபால். மன்னார் அவளை பற்றி நல்ல தகவலாய் கொடுக்கிறான். நல்லவளை நல்லவள் என்று சொல்வதற்கு நான் எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மதன் பணம் தர மறுக்க, தன் நண்பனின் கான்ஸர் ஆப்பரேஷனுக்காக இந்த ப்ராஜெக்டை எடுத்தவன் வேறு வழியில்லாமல் அம்புஜாக்‌ஷியை பற்றி மதனிடம் பொய் சொல்கிறான்.  அம்புஜாக்‌ஷிக்கும் மதனுக்குமான காதல் என்ன ஆனது? மன்னாருக்கும் அம்புஜாக்‌ஷிக்குமான உறவு என்ன? என்பதை காமெடியாய் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்ப காட்சிகளை பார்த்ததும் அப்படியே மெய்மறந்து போய் விட்டேன். நான் பார்பது என்ன தமிழ் படமா? இல்லை ஆங்கில படமா என்று?. அவ்வளவு பர்பெக்டான ஒரு மேக்கிங்கும், காட்சியமைப்புகளும்.  ஆரம்ப காட்சியிலிருந்து படத்தின் பலம் டயலாக்குகள். கதையே கொஞ்சம் ஹைக்ளாஸாக இருப்பதால் அவர்கள் பேஷிக் கொள்ளும் தமிழும், கொஞ்சம் பாலீஷாகவே இருப்பது தவிர்க்க முடியவில்லை.  மிக அருமையான டயலாக்குகள்.  ஸ்மார்ட் ஒன்லைனர்கள். முக்கியமாய் அம்புஜாக்‌ஷியும் மதனும் விவாதம் செய்து கொண்டே வண்டி ஓட்டும் காட்சி, விஷுவலாகட்டும் நடிப்பாகட்டும், மேக்கிங்காட்டும் அட்டகாசம். அந்த காட்சியில் ஐஸ்ட் லைக்தட்டாக நடக்கும் விபத்து படத்தின் முக்கிய விஷயமாய் உருவெடுப்பது இண்ட்ரஸ்டிங்.

manmadhan-ambu-desktop-wallpapers022
இவ்வளவெல்லாம் இருந்தும் வெனீசில் கமல் அறிமுகமானதும் இன்னும் சூடு பிடிக்க வேண்டிய படம் கொஞ்சம் ஸ்லோவாகத்தான் போகிறது. படத்தின் மிக முக்கிய கேரக்டர் தீபாவாக வரும் சங்கீதாவின் கேரக்டர். மிக லைவ்லியான இரண்டு குழந்தைகள் பெற்ற டைவர்ஸியாய் இருந்தாலும், மற்றொரு வாழ்க்கைக்காக தயாராக இருக்கும் அவரது கேரக்டர் அட்டகாசம். மனுஷி செம பர்மாமென்ஸ். நிச்சயம் இவரது லைவ்வான பர்பாமென்ஸுக்காகவே பார்கலாம்.  தன் பையன் தூங்கிட்டான இல்லையான்னு கண்டுபிடிக்க தூங்கும்போது கால் கட்டைவிரல் ஆடும் சொல்லும் சீன் இம்ப்ரசிவ். தன் கல்யாணத்தை பற்றி சொல்லும் போது “matrimony may not be good but alimony is good”, என்பது போன்ற வசனங்கள் படம் பூராவும் நச் நச்சென விழுந்து கொண்டேயிருக்கிறது.
 
த்ரிஷாவை விட சங்கீதாவிற்கு செம கேரக்டர். கமலும் த்ரிஷாவும் ஒருவரை ஒருவர் தங்களை பற்றிய உண்மைகளை சொல்ல விழையும் காட்சிகள் மிக இயல்பு. கமல் நன்றாக நடித்தார் என்று சொல்வது சூரியனுக்கே.. சரி விடுங்கள். மாதவனின் இயல்பான உருவம் மல்டி மில்லியனர் கேரக்டரில் சரியாக சூட் ஆகிறது. மனுஷன் பாரில் குழறியபடி பேசும் பேச்சு சரி காமெடி. அதே போல க்ளைமாக்ஸில் வரும் ஆள் மாறாட்ட மேட்டர் நடக்கும் காட்சிகளில் கமல், சங்கீதா, அந்த சின்னப் பையன், மாதவன் எல்லோரும் கலகலப்பூட்டுகிறார்கள். கமலின் முன்னாள் வாழ்கையை ஒரு பாடலில் ரிவர்ஸிலேயே சொன்னதில் ஒரு சிறந்த திரைக்கதையாசிரியன் தெரிகிறான்.  அந்த முனைப்பை படத்தின் முதல் பாதியில் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது பாதியில் தான் படம் வேகமெடுக்கிறது.

manmadhan-ambu-movie-press-meet-stills_3_054036123
படம் பெரும்பாலும், ரோம், பார்சிலோனா, ஸ்டார் க்ரூஸில் எடுக்கபட்டிருக்கிறது. ரெட் ஒன் டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்பட்டிருக்கிறது. அருமையான ஒளிப்பதிவு. முக்கியமாய் அந்த க்ரூய்ஸின் டாப் ஆங்கிள் ஷாட்டுகளும், கடலின் பின்புறத்தில் பேசும் காட்சிகள், ரோம், பர்சிலோனா காட்சிகள் எல்லாம் நச். வாழ்த்துக்கள் மனுஷ் நந்தன்.  இன்னொரு விஷேசம் லைவ் சிங்க் சவுண்டும், ஷானின் எடிட்டிங்கும்.
சூரியா ஒரு கேமியோ செய்திருக்கிறார். படம் பூராவும் வரும் அந்த மலையாள தம்பதிகள் குஞ்சனும், மஞ்சு பிள்ளையும் ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல சமயங்களில் எரிச்சல் படுத்துகிறார்கள். மாதவனின் அம்மாவாக வரும் உஷா உதூப் சரியான செலக்‌ஷன்.  கேன்சரால் பாதிக்கப்பட்ட கமலின் நண்பரான மொட்டை தலை ரமேஷ் அரவிந்தும், அவர் மனைவி ஊர்வசியை பற்றி  கொடுத்த வேலையை சரிவர செய்திருக்கிறார்கள். ஊர்வசியுடன் கமல் போனில் பேசும் காட்சியில் அவர் இங்கு ஒரு பக்கம் அழுவதை வெளிக்காட்டாமல் பேச முயல, இன்னொரு பக்கம் ஊர்வசி பேசுமிடமும் நெகிழ்ச்சி. இவர்கள் எல்லோருடனும் சிறப்பாக நடித்த செல்போன்களுக்கு வாழ்த்து.  தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஓகே. பின்னணியிசையில் பாடல்களின் பி.ஜி.எம்மையும், மற்ற பாடல்களை மாண்டேஜுகளாகவும், கதைய்னை நகர்த்திச் செல்லவே  பெரும்பாலும் பயன்படுத்தியிருப்பது நன்று.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் செல்போனில் பேசியபடியே நகர்வதால், முதல் பாதியின் தொய்வை தவிர்க்க காட்சிகள் இல்லாததாலும், கொஞ்சம் சலிப்பாகவே இருக்கிறது. கமலுக்கும், த்ரிஷாவுக்குமிடையே காதல் என்ற விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். என்ன தான் க்ளாஸான மேக்கிங், ஷார்ப்பான வசனங்கள், சங்கீதா, மாதவன், கமல் ஆகியோரின் சிறந்த நடிப்பு, உறுத்தாத ஒளிப்பதிவு, தொந்தரவு செய்யாத பாடல்கள்,  லாஜிக்கில்லாத மேஜிக்காய் க்ளைமாக்ஸ் பட்டாசு காமெடி என்று பல Positive விஷயங்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவான உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

மன்மதன் அம்பு – இலக்கையடைந்தும் தைக்கவில்லை.
கேபிள் சங்கர்
Post a Comment

39 comments:

RAJA (செ. இராசமாணிக்கம்) said...

sorry sir.film very bore.1st half ok.Second half amd climax very worst.
flap film.

Krubhakaran said...

அப்ப படம் அவுட்டா? Anyway விமர்சனம் அருமை.

RAJA (செ. இராசமாணிக்கம்) said...

அட போங்க பாஸ்....பொதுவா இங்க கத்தாரில குறிப்பிட்ட தமிழ் படம் தான் வரும்.வழக்கம்போல ஆர்வத்துல தான் போனோம்.........முடியல.கமல் நல்ல நடிகர் ஆனா சிறந்த கதை ஆசிரியர் அல்லது வசன கர்த்தா அல்ல.
இடைவேளை வரை படம் பார்க்கலாம்.பிற்பகுதி காமெடி என்கிற பெயரில் சரியான கொத்து.இப்படம் படு தோல்வி என்பதை கதையின் முடிவே சொல்லிவிடும்.யாராலும் ஜீரணிக்க முடியாது.

பொன்கார்த்திக் said...

:)

கத்தார் சீனு said...

கேபிள்ஜி, பட விமர்சனம் சும்மா நச்சுன்னு இருக்கு.
same feelings here too.....
நேரம் இருந்தால் இதையும் கொஞ்சம் வாசிக்கவும்.
http://qatarseenu.blogspot.com/2010/12/blog-post.html

Unknown said...

விமர்சனம் அருமை

மாணவன் said...

விமர்சன பகிர்வுக்கு நன்றி சார்

pichaikaaran said...

நீங்கள் ரசித்த ஆங்கில வசனம் எனக்கு புரியவில்லை . ஜனரஞ்சக இயக்குனரை வைத்து , ஜனங்களுக்கு புரியாத படம் எடுக்க கமலால் மட்டுமே முடியும்

பிரபல பதிவர் said...

மொக்க படம் தல....

தமிழ் (இந்திய) சினிமால ஒரே ஒரு ஜாம்பவான் மட்டும்தான்.....


ஏன்னா எந்திரன் இங்க மும்பை பிவிர் ல தமிழ் வெர்ஷன் எட்டு ஷோ, தெலுங்கு வெர்ஷன் நாலு ஷோ, ஹிந்தி வெர்ஷன் ஆறு ஷோன்னு அமர்க்களமா ரிலீஸ் ஆகி சும்மா அதிர வச்சிது,,,, (இது சும்மா சாம்பிள்)... எல்லா தியேட்ட‌ர் லிஸ்ட்ட‌ போட்டா தாங்க‌ மாட்டீங்க‌.... நொந்துருவீங்க‌....

ஆனா மன்னாரு அம்பு ரென்டே ஷோ.... மொத்தம் இருபது பேர்தான் அதுவும் ஈவ்னிங் ஷோவுக்கு.....


மொத்த‌த்துல‌ க‌ம‌ல் ஊரான் காசுல‌ க‌ள்ள‌க்காத‌லியோட‌ ஊர்சுத்த‌ போன‌ ப‌ட‌ம்... அவ்ளோதான்....

உத‌ய‌நிதி த‌ப்பிச்சாச்சி.... ஜெமினி செத்தானுங்க‌....

தியேட்ட‌ர்கார‌ன் த‌ல‌யில‌ துண்டுதான்.....

பிரபல பதிவர் said...

//படத்தின் ஆரம்ப காட்சிகளை பார்த்ததும் அப்படியே மெய்மறந்து போய் விட்டேன்.///


சும்மா கமலுக்காக பில்டப் கொடுக்காதீங்க தல.... ஒரு புண்ணாக்கும் இல்லை... கிரேஸி மோகன் வசனம் எழுதாத குறை எல்லா சீன்லயும் தெரிஞ்சுது....

உதயகுமார் சூர்யா வர்ற பாட்ட மட்டும்தான் டைரக்ட் செஞ்சார் போல.... மத்த சீன்லாம் கமலே பண்ணிருகார்னு நினைக்கிறேன்...

செங்கோவி said...

படத்தின் முதல் இருபது நிமிடம் பேச்சு தெளிவே இல்லை..ஆங்கிலம் வேறு..மக்கள் புலம்பினார்கள்..
செல்போனுக்கு பாராட்டு சொன்னதுதான் கேபிளாரின் டச்!

----செங்கோவி
மன்மதன் அம்பு-விமர்சனம்

KANA VARO said...

ஃஃஏதோ ஒன்று குறைவான உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லைஃஃ

அருண் said...

விமர்சனம் அருமை,படத்தோட முடிவை பத்தி 2010 தமிழ் சினிமாவில எழுதுங்க.
-அருண்-

Rishoban said...

இது எனது கருத்து!

படம் எனக்கு பிடித்திருந்தது...சமீபத்தில் வெளியான உலக சினிமாவுக்கு சவாலான ”150 கோடி” குப்பையை விட இந்தப் படம் எனனை பொறுத்தவரை பரவாயில்லை.

நான் பொதுவாக மசாலா படங்களை பார்ப்பதில்லை..யதார்த்த சினிமா மட்டுமே! பொழுது போக்கிற்காக நகைச்சுவை படங்களை பார்ப்பதுண்டு!

படம் வெற்றியோ..தோல்வியோ..அது எனக்கு தேவை இல்லாதது!

Vijay Vasu said...

என்னை பொருத்தவரை படம் பாடு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

மொத்ததில் மன்மதன் அம்பு... நொந்து போன சொம்பு... மொக்கை படம்.. கலைஞர் டீவீயில் பார்க்க வேண்டிய படம்.. தியேடர் சென்று காசை செலவு செய்வது முட்டாள் தனம்... மேலும்.. இந்த கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிக்க கூடாது...

கானகம் said...

நல்ல படம்தான்..ஆனா நல்லா இல்லை. முதலில் கமல் யாருக்காக படம் எடுக்கிறார் என்ற தெளிவிருந்திருந்தால் இந்தக் குழப்பமெல்லாம் வந்திருக்காது என நினைக்கிறேன். சங்கீதாவும், மாதவனும் மட்டும் செஞ்சுரி போடுகிறார்கள் நடிப்பில்..த்ரிஷாவுக்கு அந்த டீன் ஏஜ் முகக் களையெல்லாம் போக ஆரம்பித்துவிட்டது. சரி, விடுங்க.. அடுத்தவாட்டி கிரேஸி மோகன், கே.எஸ்.ரவி கூட்டணியில் இன்னொரு அதிரடி நகைச்சுவை படம் தரட்டும்

taaru said...

கொஞ்ச நாள் மின்னாடி,திரிஷாவ பிடிக்க ஆரம்பிச்சு இருக்குன்னு சொன்னிங்க... நல்லவேளை ...இங்க அத correct பண்ணிடீங்க... நான் பயந்துட்டேன்..[ஏன்னா எனக்கும் திரிஷா பிடிக்காது...]

taaru said...

spelling mistake - திரிஷாவைப் பிடிக்காது..

Anonymous said...

கொல வெறி கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சா, சினிமா ரசிகர்கள் மாதிரி தெரியல...

Sudhar said...

Shankar,

Please give a analysis of Kamal's career from 2000-2010.

Either he himself directs or dummy director or KS Ravikumar. No chance for any upcoming or joing hands with any good director.

Once Kamal told we wasted Sivaji during later part of his career. Kamal is doing the same for himself.

Sudhar said...

Director KS Ravikumar recently told in an Interview that Kamal used to tell 5 story in 5 hrs (or minutes ?). But he always copy or take a lead of Hollywood movies.

Why *** he is not using his original story ?

Sudhar said...

Twitts are saying it is a inspiration of 'Romance on the high seas' and 'There is something about Mary'. But if you ask Kamal he will 2000 year before Kambar said or Mahabharatham have story line like this.

Unknown said...

Postives:
Engaging script with laudable screenplay. The best aspect of the movie being dialogues penned by Kamal himself.Excellent cinematography with innovative narration especially Neela vaanam song. Saama dhaana songs placement in the movie needs appreciation.

Maddy , Sangee and Trisha have all performed well.

Negatives:

Oviya and her slang.

The way the story migrates from first half to second is not well received by audience though I never felt that.

Verdict : Engaging movie
3.5 on 5 I would say.

Unknown said...

enthiran mathiri kuppai "logic " illaatha padangkaluku manmathan ambu 1000 times better....athilthaan kosu kooda pesa mudiyum 12V car current moolam robo recharge pannum......
ennathan padiththaalum thaan innum appatiththaan enbathu pol ullathu silarin comments

Unknown said...

50 varusam cinimavil ullavarukku theriyaatha ....ethu nalla cinema...ethu summa makkal banaththai pudunkra cinema enru....etho "SUN pissarsin karuppu banaththai veliye kondu vara oodatha badaththai oorayiram theattaril rilis banni vasool 500 kodi enbarkal...kekkiravan kenayanaka irunthaal ..R.Rasa ..kaanthi amaithi prize vankinaar enru solvaanka

செல்வா said...

//மன்மதன் அம்பு – இலக்கையடைந்தும் தைக்கவில்லை./

அட பாவமே ..! நான் கண்டிப்பா பார்க்கணும் அண்ணா .. கமலுக்காக .!

Unknown said...

படம் நன்றாக போகிறதென்று சொல்கிறார்களே கேபில்ஜி ...

Aruna said...

கேபிள்ஜி!

'கமல் ரசிகன்'ன்னு பச்ச குத்தாத குறையா சுத்தற எனக்கே இந்த படம் பிடிக்கலை.

மேக்கிங்க், கேமரா போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் எல்லாம் இவ்வளவு பெரிய ஆளுங்க எடுக்கற படத்துல நல்லாத்தான் இருக்கும். சினிமா ரசிகனுக்கு அதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான். சொல்ல வந்த கதையை தொய்வில்லாம, ரசிக்கும்படியாகவும் சொல்வது ரொம்ப முக்கியம்.படம் ஓடும் போதே கதை இப்படித்தான் போகும்னு அவனுக்குள்ளே ஒரு ஐடியா இருக்கும், ஆனால் அதையும் மீறி சில இடங்களிலே 'அட' அப்படின்னு தோணனும். முக்கியமா க்ளைமேக்ஸ் 'நச்'சுன்னு இருக்கணும். இப்படி எதுவுமே இல்லாம, சவ சவன்னு படம் போகுது.

எனக்கு இந்த படத்தில் மொக்கையாக தோன்றிய விஷயங்கள் சில:

1. பல காட்சிகளும், கதாபாத்திரங்களும், சம்பவங்களும் ஏற்கனவே பல படங்களில், முக்கியமாக கமல் படங்களில் பார்த்ததாகவவே இருப்பது. உ.தா. கமல் மனைவி இறந்து போனது, தாலி சென்டிமென்ட், பிராமண பாஷை, கமல் தெலுங்கு பேசி சமாளிப்பது, ஆள் மாறாட்ட குழப்பம்

2. கமலுக்கும், த்ரிஷாவுக்கும் காதல் எப்படி வந்ததென்று சொல்லாதது

3. க்ளைமேக்சில் எல்லோரும் குழப்பமாக பேசி கடைசியில் சுபமாக முடிப்பது

4. தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுவது

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் மன்மதன் அம்பு ஒரு மொக்கை அம்பு

pichaikaaran said...

மன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் வாட்டர்லூ ?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கேபிள்ஜி,

கமலின் நகைச்சுவைப் படங்கள் எல்லாவற்றிற்கும், ரிலீஸ் ஆனவுடன் இது போன்ற கருத்துகளே வந்துள்ளன. பி.கே.எஸ், பஞ்சதந்திரம் என பல படங்கல் இது போல தான். ஆனால் போகப் போக அதிகம் பார்த்து சிரிக்கும் படங்கள் இவை தான்.

சில இடங்களில் இழுத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இருந்தாலும் சுத்தமாக ஒதுக்கும் அளவிற்கு மோசமில்லை.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் கண்டிப்பாகப் படம் பார்க்கலாம்.

நன்றி. வழக்கம் போல் அக்மார்க் கேபிள் விமர்சனம் ;)

R.Gopi said...

டாட்.........

R.Gopi said...

//மன்மதன் அம்பு – இலக்கையடைந்தும் தைக்கவில்லை//

*******

ஷங்கர் ஜி...

இலக்கை அடையவில்லை... அடைந்திருந்தால் நிச்சயம் தைத்திருக்கும்...

டாட்ட்ட்.............

ரோகிணிசிவா said...

ur narration creates a tempatation to see the movie , let me see how far i can go with u

Gopi said...

Hi Cable

I saw this at Satyam yesterday (25th). Despite being a Kamal Fan this film does not inspire me at all including my Friends who are all Kamal Fans. One good reason, not a single scene with Kamal speciality.

We went to Satyam after having lunch at Matsya, T Nagar. Where you there? If you were the person present there with your family, we were sitting just next to your Table.

Gopi.

தீ said...

ஏன்தா சொல்லறது ... நல்லவங்க ஜெய்குறது இல்ல

தீ (9710110460)

MANOHARAN1980 said...

cable sir: Kamal FLASH BACK song is an English album "THE SCIENTIST" by band "COLD PLAY". Watch it in You tube....

Don't get excited now a days legends doing COPY just like that....

கிருஷ்ணா said...

Manoharan,

There are hundreds of years passed since the first movie in this world.

So every scene can be compared with any one of the idea used in the past.

Bringing a very brand new idea is very very difficult hereafter.

If so, all the makers should wind up the show.

Krishna

Unknown said...

Kamal fans dont take it personally..... inspiration should not be spelt as plagiarism.

but but when matrix or inception came no body said it was ripped from some other movie!

Unknown said...

enthiran mathiri kuppai "logic " illaatha padangkaluku >>>

Kai gal nalla irukumbodhu balti adichu sandai podrathum, ella aadi adanginappuram 'Anbe Sivam' appadingarathu kuppai logic thaan!