Thottal Thodarum

Jun 25, 2010

திட்டக்குடி

thittakudi movie latest stills (2) அழுக்கடைந்த டவுசர் தெரிய கட்டிய லுங்கி, மூணு மாச தாடி, வாயில் பீடி, மிச்ச நேரத்தில் சாராயம், ஊரோர இடிந்த வீட்டில் போகிற வருகிற பெண்களையெல்லாம் நொட்டிக் கொண்டிருந்தால்,சட்டை காலரை மேலே தூக்கி விட்டபடி, கொஞ்சம் கால் அகட்டி பின் பக்கமாய் சாய்ந்தபடி “ஏய்.. என்ன மாப்ள்..?” என்று பேசிவிட்டால் பருத்திவீரன் டைப்பில் ஒருகதை ரெடி..

வேலு சின்ன வயதிலேயே தறுதலையாய் ரஜினி, கமல் குருப் போட்டுசினிமா பார்த்து கெட்டொழிந்து, படிப்பை விட்டவன். கொளுத்து வேலைக்கு போக ஆரம்பிக்கிறான். கையில் காசு பார்க்க ஆரம்பித்தவுடன், குடி, கூத்தி என்று பார்க்கிற சித்தாள்கள், ஐயிட்டங்களையெல்லாம் ஊரோரமாகவும், அவர்ரவ்ர் வீட்டில் போயும், கட்டிட இடிபாடுகிடையேவும் நொட்டிக் கொண்டு அலைகிறான். தனக்கு தொழில் கற்றுக் கொடுத்த குருவான மேஸ்திரியின் பெண் வயதுக்கு வந்ததும், அவளை காதலிப்பதாய் சொல்லி, மிகவும் முயற்சி செய்து, ஒரு நாள் மேட்டர் முடித்துவிட்டு, கையில் காசை திணிக்கிறான். அனுபவித்துவிட்டு காசு கொடுத்தவனை கல்யானம் செய்ய மாட்டேன் என்கிறாள் அவள். ஒரு கட்டத்தில் திடீரென திருந்தி வாழ ஆரமித்து அவளை கல்யாணம் செய்ய இருக்க, திடீரென குடும்ப பிரச்சனையில் கல்யாணத்துகு போக முடியாமல், அவளை வேறு ஓருவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒருவனுக்கு தகுந்த நீதி எழவு சொல்லியிருக்கிறார்கள்.

thittakudi-wallpaper-03
படம்  பூராவும், சாராய வாசனையும், விந்து வாசனையும் மூச்சடைக்கிறது. படம் நெடுக கதாநாயகனும், அவனது நண்பனும், யாராவது ஒரு அயிட்டத்தையோ, அல்லது சித்தாளையோ, அல்லது கதாநாயகியை மேட்டர் செய்ய முயற்சியோ செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கதாநாயகியின் அப்பா அவர் வயதிற்கு ஒரு மிடில் ஏஜ், சித்தாளுடன் தொடுப்பு வைத்திருக்கிறார். ஊரில் இருக்கும் அயிட்டம் சுஜிபாலாவுக்கு ஊர் சிறு வயது பெண்கள் எல்லாம் சேர்ந்து எவ்வளவுநாள் தான் இப்படியே இருக்கிறதுன்னு யோசிச்சு ஒருத்தனை கல்யாணம் செய்து வைக்க கிளம்புகிறார்கள். கதாநாயகி முதல் காட்சியில் எட்டி உதைக்கப்பட்ட ஒருவனுக்கு மனைவியாக்கப் படுகிறாள், அவன் குடிக்காக அவளை விபச்சாரியாக்கி விடுகிறான். கதாநாயகனின் அண்ணி, சோளக்காட்டில், கதாநாயகியின் முறைப் பையனுடன், மேட்டர் செய்து கொண்டிருக்கிறாள், அதை பார்த்துவிட்டதால் பொம்பளை பொறுக்கி கதாநாயகன் மேல் பழி போட, உச்சபட்ச கொடுமையாய், பெற்ற தாயே தன் முந்தானையை மூடிக் கொண்டு 
சோறு போடுகிறாள்.

thittakudi-wallpaper-02
ராவாக படம் எடுக்கிறோம் என்றோ, இல்லை லைவாக படம் எடுக்கிறோம் என்றோ, மிகவும் பீல் செய்து எடுக்குறோம் என்று எடுத்து முடியல…… ஒரு காமுக, பொறுப்பில்லாத ஒருவனால், ஒரு அப்பாவி பெண் வாழ்விழக்கிறாள், தன்னை கெடுத்து காசு கொடுத்தவனை என்னால் திருமணம் செய்ய முடியாது என்று சொல்லும் பெண்ணை பற்றிய கதை என்றால் அதுவும் இல்லை. அப்படி வீராப்பாய் பேசிய பெண் சம்மந்தமேயில்லாமல் ஒரு ஊரறிந்த குடிகாரனை கல்யாணம் செய்து, விபச்சாரியாவது படு சினிமாத்தனம். ஏனென்றால் வீட்டை விட்டு ஓடிப் போய் தனியாய் வேலை செய்து சம்பாதிக்கும் அளவுக்கு மனதிடம் உள்ள ஒரு பெண், இதற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டாள். கதாநாயகன் எவளோ ஒரு விலைமகள் இனிமே காசு எடுத்துட்டு இங்கே வராதே என்று சொன்னதாலேயே, மனம் திருந்துவது, கதாநாயகிக்கு கல்யாணம் ஆனதும், குடிகாரனாய் அலைவதும், தன் க்ண்முன்னே அவளை ஒரு க்ளாஸ் சாராயத்துக்காக விலை பேசுவதை பார்த்துக் கொண்டிருப்பதும், தேவையில்லாமல் அண்ணிக்கு கள்ளத்தொடர்பு மேட்டர், அம்மா சந்தேகப்படுவது என்று திரைக்கதை அபத்த உச்சங்கள் ஏராளம்,, ஏராளம்.  அதிலும் கதாநாயகனின் அப்பா கேரக்டருக்கும், மேஸ்திரிக்கு ஏதோ பல வருட பகை ஓடுகிறது என்று பில்டப் செய்துவிட்டு என்னவென்று பார்த்தால் சீட்டாடும் போது தோற்கிறவர்கள் பணமில்லை என்றால் எல்லா உடைகளையும், அவிழ்த்துவைத்து விட்டு போக வேண்டும் என்று சொன்னதை அவர் செயல் படுத்தியதால் தானாமாம் கிரகக் கொடுமைடா சாமி.. இருக்குற கொடுமையிலேயே பெரிய கொடுமை, பெற்ற தாயின் கண்களூக்கு மகன் காமுகனாய் தெரியவதற்காக, முழு மாராப்பு விளக்கி, தனியாய் ஒரு அம்மாவின் முலைகளூக்கு க்ளோஸ் கட் செய்த கொடுமையை என்னவென்று சொல்வது.
Thittakudi130510_1 ஒரு தாய் தன் மகனை காமுகனாய் சந்தேகப்பட்டால், அதை ஒரே ஷாட்டில் எழுந்து சாப்பாடு போடும் போதே, இழுத்து போர்த்திக் சொருகிக் கொண்டு வந்து நின்றாளே போதாதா.. ம்ஹும் இப்படி புலம்பிக் கொண்டேயிருக்க, கோபப்பட நிறைய இருக்கிறது.

பாராட்டக்கூடிய விஷயங்கள் என்றால், இயல்பான கிராமத்து பெண்ணை கண் முன்னே வளையவிட்டதும், அவரது வெட்கமும், விரகமும், கூடிய காதல் காட்சிகள்.  இன்னொருவர் ஒளிப்பதிவாளர் கருப்பையா..  அந்த கிராமத்துக் குளம், பகல், இரவு நேரக் காட்சிகள், சோளக்காட்டுக்குள் வரும் பாடல் காட்சிகள். என்று படத்தை சினிமாவாக பார்க்க வைத்த அவருக்கு பாராட்டுக்கள்.
திட்டக்குடி - எரிச்சல்
கேபிள் சங்கர்
Post a Comment

37 comments:

பிரபல பதிவர் said...

ஆனாலும் ரொம்ப ரசிச்சி விமர்சனம் எழுதி இருக்கீங்களே

படம் சூப்பர் போல‌

கா.கி said...

indha padamellaam paakkareengalaa thala... en anudhaabangal :)

Cable சங்கர் said...

alloo.. மாப்பிள்ளை.. வெறுப்பேத்தாதீங்க...

அபி அப்பா said...

இப்படித்தான் இருக்கும்ன்னு நினைச்சேன். நல்லவேளை நான் திருட்டு சிடி மட்டுமல்ல காசு கொடுத்து வாங்கின சிடில கூட பார்க்க மாட்டேன் போ......

தனி காட்டு ராஜா said...

//கையில் காசை திணிக்கிறான். அனுபவித்துவிட்டு காசு கொடுத்தவனை கல்யானம் செய்ய மாட்டேன் என்கிறாள் அவள்.//
காசு(வரதட்சனை ) வாங்கிட்டு அனுபவிப்பது தானே தமிழ் கலாச்சாரம் ....கலாச்சாரத்தை மதிக்கலைனா கோவம் வரும் தானே?

KarthikeyanManickam said...

Thala,

Idhu ennoda native.
Nannaga roomba expect panni irundha padam, ippadi ezudhi irukkenga.
Music patthi onnum sollavea illa.
3 songs were good.

VADA POCHHEAA...

மங்களூர் சிவா said...

ஸ்ஸப்பா
தமிழ் சினிமாவுக்கு விடிவே கிடையாதா??

எம்.எம்.அப்துல்லா said...

//படம் பூராவும், சாராய வாசனையும், விந்து வாசனையும் மூச்சடைக்கிறது.

//

ஏய்யா இப்படி பட்டவர்தனமா எழுதுற??

கொஞ்சம் நாசூக்கா திட்டக்கூடாதா??

Romeoboy said...

என்ன தல பிட் படம் ஸ்டில் போல போட்டு இருக்கீங்க !!!

பிரபல பதிவர் said...

தல‌
நெஞ்ச தொட்டு சொல்லுங்க‌
எந்த படத்தையாவது இப்படி டீடெய்லா விவரித்திருக்கீங்களா?

உ.த. மாதிரி ரசிச்சி எழுதியிக்கீங்களே????

Anbu said...

அண்ணே..சென்சார்ல எந்த சீனும் கட் பண்ணலையே...நாளைக்கு போகணும் அண்ணே..

தராசு said...

இதைத்தான் நான் அப்பவே சொன்னேன், எல்லாரும் திட்டனீங்க, இப்ப....... இதப் படிங்க

http://tharaasu.blogspot.com/2009/04/blog-post_16.html

பெசொவி said...

//திட்டக்குடி - எரிச்சல்//

ஆனா நீங்க போட்டிருக்கிற ஸ்டில் குளுமை
:)

திருநெல்வேலி ஜங்ஷன் said...

ஆனாலும் ரொம்ப ரசிச்சி விமர்சனம் எழுதி இருக்கீங்களே
படம் சூப்பர் போல‌
அண்ணே..சென்சார்ல எந்த சீனும் கட் பண்ணலையே...நாளைக்கு போகணும் அண்ணே..
ஆனா நீங்க போட்டிருக்கிற ஸ்டில் குளுமை
------------------------------------
அண்ணா கண்டிப்பா உங்க வமர்ச்னம்
படம் பார்க்க வைக்கும் .ஸ்டில் படம் பற்றிய வெளக்கம் எல்லாம் கலக்கிடிங்க???
என்ன கொடுமை அண்ணா edu ???????????

திருநெல்வேலி ஜங்ஷன் said...

ஆனாலும் ரொம்ப ரசிச்சி விமர்சனம் எழுதி இருக்கீங்களே
படம் சூப்பர் போல‌
அண்ணே..சென்சார்ல எந்த சீனும் கட் பண்ணலையே...நாளைக்கு போகணும் அண்ணே..
ஆனா நீங்க போட்டிருக்கிற ஸ்டில் குளுமை
------------------------------------
அண்ணா கண்டிப்பா உங்க வமர்ச்னம்
படம் பார்க்க வைக்கும் .ஸ்டில் படம் பற்றிய வெளக்கம் எல்லாம் கலக்கிடிங்க???
என்ன கொடுமை அண்ணா edu ???????????

செல்வா said...

அருமையா சொல்லிருக்கீங்க .. நான் அந்த படம் பார்க்கலை .. ஆனா இந்த மாதிரி படங்கள ஏன் எடுக்கறாங்கன்னே தெரியல.. இவங்களுக்கு ஒரு நல்லா கதையே கிடைக்காதா ...? ஏன் இப்படி படம் எடுக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு கொடுமை பண்ணுறாங்க ...??
அடிதடி , சாராயம் , விபச்சாரம் இல்லாம கதையே இவங்களுக்கு கிடைக்காதா ...??? கடவுள் தான் காப்பாத்தணும் ...

Unknown said...

மொக்கை படத்துக்கு இவ்வளவு பெரிய விமர்சனமா

ராம்ஜி_யாஹூ said...

திட்டக்குடி ன்னு ஊர் கோவில்பட்டி எட்டயாபுரம் சாலையில் உள்ளது, அங்குதான் பாரதி பள்ளி பருவத்தில் சுற்றினார் என்று சொல்வார்கள்.
நானே சைக்கிளில் பலமுறை சென்று உள்ளேன் அங்கு. ஊர் பேர் கேட்டதும் பார்க்க ஒரு ஆசை இருந்தது.


திட்டக்குடி ஊர் பற்றி ஏதும் கட்டி இருக்கிறார்களா.

ILLUMINATI said...

வாழ்க்கைக் கதை,கிராமத்து கதை னு இவனுங்க என்னைக்கு கிளம்புனானுங்களோ அன்னைக்கே இந்த மாதிரி இளவ எல்லாம் பாக்கணும்னு நம்ம தலையில எழுதியாச்சு.
இவனுங்க இனிமேவாவது ஒரு மாறுதலுக்கு நல்ல படம் கொடுக்கட்டும்.

அன்புடன் நான் said...

திட்டகுடி... மக்கள் திட்டும்படி?

க ரா said...

அண்ணா உங்களுக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி. தில்லும்தான்.

KANA VARO said...

ரொம்பவே கொடுமை போல!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாங்கிட்டு அனுபவிப்பது தானே தமிழ் கலாச்சாரம் ....கலாச்சாரத்தை மதிக்கலைனா கோவம் வரும் தானே?

repeattuuuuu

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உவ்வ்வ்வே !!

Sukumar said...

நீங்க படம் சரியில்லைனு எழுதியும்... உங்க பதிவை பார்த்துட்டுதான் பலபேர் படத்துக்கே போவாங்கன்னு நெனக்கிறேன்...

Swengnr said...

படத்துல நிறைய காடு மேடுன்னு இயற்கை காட்சி இருக்குன்னு சொல்லுங்க. அதுக்கே கூட்டம் வருமே!

Unknown said...

:-)

முடிவிலி said...

அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள் ... வார்த்தைகளின் வேகதிலயே தெரிகிறது திரைப்படத்தின் கொலைகளம் ....

படத்துல நிறைய '''காடு மேடு'''ன்னு இயற்கை காட்சி ///

ஹி..ஹி... ஆமா ல்ல........

Athisha said...

படத்தில் பிட் உண்டா பாஸ்! ஏதாவது ஒன்னு ரெண்டு சுமாரா..!

நெல்லை எக்ஸ்பிரஸ் said...

//திட்டக்குடி ஊர் பற்றி ஏதும் கட்டி இருக்கிறார்களா?


நல்லா "காட்டி" இருப்பார்கள் போல :)

ஜெய்லானி said...

ஒரு வேளை லோ பட்ஜட் படமோ என்னவோ ? ]
பேசாம மலையாளதில தலைப்பு வச்சிருந்தா இந்த திட்டுதிட்டி இருக்க மாட்டீங்க பாஸ்..

R. Jagannathan said...

மற்ற பின்னூட்டங்களைப் படிக்காமல் எழுதுகிறேன். (பிறகு செக் செய்துகொள்கிறேன் - யாராவது என்னை மாதிரியே நினைக்கிறார்களா என்று!)

ஆமாம், இது கடுமையான பட விமர்சனமா அல்லது பட விளம்பரமா?

ஒரு வேளை, பிட் படங்கள் இணைக்கும் தியேட்டர்களில் பார்க்க வேண்டிய படமோ?

-ஜகன்னாதன்

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இரவுக்காட்சி, சோழக்காடு படத்தை பார்க்காலமுன்னு சொல்லுங்க கேபிள் சார்,..
-ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//திட்டக்குடி ன்னு ஊர் கோவில்பட்டி எட்டயாபுரம் சாலையில் உள்ளது, //

இந்த திட்டக்குடி விருதாசலம் அருகே
உள்ளது..படம் எடுத்தவர், நடித்தவர் என பலரும் அப்பகுதியை சார்ந்தவர்கள் என ஒரு புத்தகத்தில் படித்தாய் நினைவு

R.Gopi said...

தல

திட்டக்குடி
களவாணி

போன்ற படங்களையும் விடாமல் பார்த்து விமர்சனம் செய்யும் நீர்தான் மெய்யாலுமே

தில்லுதுர

R.Gopi said...

தல

திட்டக்குடி
களவாணி

போன்ற படங்களையும் விடாமல் பார்த்து விமர்சனம் செய்யும் நீர்தான் மெய்யாலுமே

தில்லுதுர

Mokkaraasu said...

padathula tamilnattu janangalukku solrathukkenne neraya matter vachirukkaar pola irukku Director....irunthalum ovoru katchiyayum rasithu eluthiya vimarsanan arumai....