Thottal Thodarum

Mar 16, 2011

நான் – ஷர்மி -வைரம்

cade_walker_by_fleech_hunter-d33zcw0 முத்தமிடுகையில் பன்னிரெண்டு வோல்ட் மின்சாரம் நரம்பெல்லாம் ஊடுருவி, பளிச்சென விளக்கெறிந்தது போல் ஆகுமா? ஷர்மி முத்தமிட்டால் ஆகும். அப்படி ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு “எனக்காக இந்தச் சின்னத் திருட்டைக்கூட செய்ய மாட்டாயா?” என்று மடியின் மேல் உட்கார்ந்தபடி கேட்பவளுக்கு மாட்டேன் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால்.. நீங்கள் பெரிய ஆள் தான் சார். ஆனால் நான் சாதாரணன். “உனக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்” என்று ஷாக்கடித்த கிக்கிலிருந்து வெளியே வராமல் சொன்னதன் விளைவுதான் சென்னையின் மிக முக்கியமான, பெரும் பணக்காரர்களுக்கான வைரக் கடை வாசலில் நிற்கிறேன்.
ஷர்மியை நான் முதன் முதலில் பார்த்தது, ஈசிஆரில் நடந்த ஒரு ப்ரைவேட் பார்ட்டியில்தான் அது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மிக சுவாரஸ்யமான பார்ட்டி. எங்களைப் போன்றவர்களைத் தவிர மற்ற ஆண்களுக்கு அனுமதி கிடையாது. நாங்கள் சென்னையின் பிரபல கால்பாய் நெட்வொர்க்கிலிருந்து அனுப்பப்பட்டவர்கள். நான், ராகுல், கந்தசாமி ஆனால் அவனை இம்மாதிரி அசைன்மெண்டுகளின் போது ராகேஷ் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்.

எங்களில் சிலரை நீங்கள் அடையாளம் கண்டிருக்கலாம். ஈசிஆரின் முக்கிய முக்குகளில், கேஃப், போன்ற காபி ஷாப்புகளின் வாசலில், சென்னையின் நட்சத்திர ஓட்டல் டிஸ்கோதேக்களில், டிஸ்கோ முடிந்து ஹோட்டல்களின் வெளியே கார் திரும்பும் இடத்தில், இரண்டு மூன்று பேராய் நின்றிருப்போம். நீங்கள் ஆணாக இருந்தால் நிச்சயம் ஏதோ குடித்துவிட்டு நின்றிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டோ, அல்லது உங்களது கேர்ள் ப்ரெண்டுகளை சப்பிக் கொண்டோ கிளம்பியிருப்பீர்கள். ஆனால் எங்களை சரியாக அடையாளம் காண அவர்களுக்குத் தெரியும்.

பெரும்பாலும் நடுத்தர வயது பெண்கள். முப்பதிற்கும் நாற்பதுக்கு நடுவே ஊஞ்சலாடும் இளமையானவர்கள். அந்த நடு ராத்திரியிலும், டிஸ்கோவிலிருந்து கிள்மபும் போது ரெஸ்ட் ரூம் போய் உதடு சிவக்க, லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு வருபவர்கள். இவர்களுக்கு நாங்கள் தான் டார்கெட். நான் இதனுள் வந்ததே ஒரு ஆக்ஸிடெண்ட் தான்.

பெரிதாய் படிப்பில்லை. ஆனால் பார்த்தால் தெரியாது. நுனி நாக்கு ஆங்கிலம் எனக்கு அத்துப்படி. காலேஜ் படிக்கும் நாட்களில் பெண்களின் பின்னால் காபிடேக்களிலும், சத்யம், ஐநாக்ஸுகளில் சுற்றி அலைந்தலைந்து ஃபிலிம் காட்டியே ஒரு மாதிரி செட்டாகிவிட்டது. எனக்கென பெரிய பேக்ரவுண்ட் கிடையாது. அக்கா ஒருத்தியிருக்கிறாள். அவ்வளவுதான். அவளும் ஏதோ ஒரு ஹாஸ்பிட்டலில் நர்சாக இருக்கிறாள் என்பது வரை மட்டுமே தெரியும். ராத்திரி படுக்க மட்டுமே வீட்டுக்கு போவது பல சமயம் அவளுக்கு வசதியாகவே இருந்தது. கடந்த மூன்று மாதமாய் ஒரு மாமா வந்திருக்கிறார். எத்தனை மாதத்திற்கு என்று தெரியாது.

இந்த மாமா வந்ததிலிருந்து கைச் செலவுக்கு காசு வாங்குவது கொஞ்சம் சிரமமாகவேயிருந்தது. எல்லாவற்றிக்கும் அக்காவையே எதிர்பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகவேயிருந்தது. வேலைக்கு போகலாம் என்றால் பெரும்பாலும் ஏதாவது கால் செண்டரில் நைட் ஷிப்ட்க்குத்தான் கூப்பிட்டார்கள். ராத்திரி பூராவும் முழித்துவிட்டு, காலையில் தூங்கும் வேலை எனக்கு பிடிக்கவில்லை. இரவைத் தவிர வேறேதும் தெரியாமல் போய்விடும் என்று நினைத்திருந்தேன்.

அப்போதுதான் அந்த விளம்பரத்தை தினசரியில் பார்த்தேன். “Get New Friendship, and New life” அணுகவும் என்று போன் செய்யச் சொல்லி ஒரு நம்பரை கொடுத்திருந்தார்கள். மனசுக்குள் ஆர்வ அரிப்பு ஆரம்பமாகியது. அது ஒரு டெல்லி நம்பர்.

ரீசார்ஜ் செய்து கொண்டு பேசிய போது, தெளிவாக ஆங்கிலத்தில் மாலின் என்பவள் பேசினாள். என்னைப் பற்றி விவரங்களை எல்லாம் கேட்டுவிட்டு, ”உங்களுக்கு என்ன மாதிரியான பேக்கேஜ் வேண்டும்? என்ஜாய்மெண்டா? அல்லது கேஷ்+என்ஜாய்மெண்டா?” என்று கேட்டாள்.. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை இப்படியெல்லாம் கூட சாத்தியமா? என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்முனைக் குரல் மீண்டும் “என்ன யோசிக்கிறீர்கள்?” என்று கேட்க, “கேஷ்+என்ஜாய்மெண்ட்” என்றேன்.

(தொடரும்)
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

28 comments:

CS. Mohan Kumar said...

நான் தான் பஸ்ட்டா?

CS. Mohan Kumar said...

என்ன இது சொல்லாம கொள்ளாம திடீர்னு தொடர் எல்லாம்?

Cable சங்கர் said...

ஒரு அதிரடித் தொடர்.. மோகன்.:)

vinthaimanithan said...

போடு தாளம் போடு.. நாங்க பாடாத தெம்மாங்கு ஏது...

கேபிள் ராக்ஸ்!

Ponchandar said...

ஆரம்பமே அட்டகாசம்..... தொடருங்கள்...

பிரபல பதிவர் said...

ஆரம்பமே ஸ்பீடு

'பரிவை' சே.குமார் said...

அதிரடித் தொடர்... அட்டகாசம்...
தொடருங்கள்.

Sathish said...

superb sir.. stunning start ups...

ஸ்ரீ அப்பா said...

சங்கர், ரொம்ப நாலா உங்க பக்கத்தை பாத்துகிட்டு இருக்கேன்...தொடர் சூப்பர்..ப்ளீஸ் continue..கொஞ்சம் அன்பு மிரட்டலா...இப்ப மூணு தொடர் கேப் விடாம வரணும்..ஒண்ணு..கேபிள் கதை, ரெண்டு சினிமா வியாபாரம்..இப்ப இது..so..responsibility…ஜாஸ்தி..

ரதியழகன் said...

The Man From Nowhere.
இப்படத்தின் விமர்சனத்தை உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.
http://nasthenka.blogspot.com/2011/03/man-from-nowhere.html

Unknown said...

பிரமாதமான துவக்கம்..

Anonymous said...

super starting...

பா.ராஜாராம் said...

நன்று. ஆயினும், பதினெட்டின் கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி உண்டா அய்யா?

- தண்டோரா (எ) மணிஜீ

Suthershan said...

சூப்பரான சஸ்பெண்ஸ் + த்ரில்லர் தொடர் சுடசுட ஆரம்பம்... டம் டம் டம்....

Vetri said...

உங்க விளையாட்டை ஆரம்பிசுட்டேளா!

shortfilmindia.com said...

@பா.ராஜாராம்
நம்ம சைட்க்கு எல்லாம் சின்ன பசங்க வர்றதேயில்லை

அருண் said...

ஆர்வத்தை தூண்டுது,அடுத்தது எப்போ?
-அருண்-

Gnanaputhran said...

Is this a translation of the Jeffery Archer Story?

pichaikaaran said...

@சிவகாசி மாப்பிள்ளை
போன வாரம் எங்கே போனீங்க ? நீதியை நிலை நாட்ட தன்னந்தனியா போராட வேண்டியதா போச்சு

Raman Kutty said...

ஜிக்காலோவ் என்ற வார்த்தை ஈரோடு பகுதியில் 2005 ல் பிரபலம்.. call boy :-))

செ.சரவணக்குமார் said...

//ஒரு அதிரடித் தொடர்//

ரைட்டு தல..

raghul said...

இந்த தொடர் நிச்சயம் புதிய அனுபவம் கொடுக்கும் என்று நம்புகிறேன்.அதிர்ச்சியான விசயங்களும் இருக்கும் .வாழ்த்துக்கள் .

sugi said...

youthful story..gud..

shortfilmindia.com said...

@parvaiyalan
அவர் உங்களைப்போல் முட்டாளில்லை..

Cable சங்கர் said...

மிஸ்டர் பார்வையாளன்.. நீங்கள் முட்டாள் என்று இன்னும் அழுத்தமாக ஃப்ரூவ் செய்து கொண்டு வருகிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு ரஜினியைத் தவிர உலகத்தில் யாரும் சிறந்தவரில்லை என்று நினைத்துக் கொண்டு அலைபவர். முதலில் டால்பிக்கும் டிடிஎஸ்சுக்குமே வித்யாசம் தெரியாமல் பதிவு போட்டவர். எனவே உங்களுக்கான பட்டம் உங்களுகு மட்டுமே. தேவையில்லாமல் இன்னொருவரையும் அந்த கும்பலில் சேர்க்க வேண்டாம். தகுதியில்லாத நபர்களின் பேச்சை கேட்க வேண்டாமென்றும் ஒரு குறள் உள்ளது அதை ஃபாலோ செய்பவன்நான். இனி..ப்திலும் சொல்ல மாட்டேன்.

R.Mohanbalu said...

நல்ல துவக்கம் சங்கர்.
”கேஷ்+என்ஜாய்மெண்ட்” புது character. இதை வைத்து வேறு கதையோ நாவலோ வந்ததாக நினைவில்லை. By the way,
auto-fiction... ;-) ம்... ம்... வெளுத்து வாங்குங்க...

shortfilmindia.com said...

@mohanbalu
சார்.. மிக்க் நன்றி.. முடிந்தவரை நன்றாக வர முயற்சிக்கிறேன். அது சரி ஆட்டோ பிக்‌ஷன் என்று இந்தகதையை பற்றியா எழுதியிருக்கிறீர்கள்..அவ்வ்வ்வ்:)

ரோகிணிசிவா said...

mm ,comments reserved