Thottal Thodarum

Sep 4, 2009

இசையெனும் “ராஜ” வெள்ளம்-3

இளையராஜா, மணிரத்னம்


நாயகன்
ilayaraja thumb



இந்த படம் ராஜா- மணி காம்பினேஷனில் வந்த ஒரு முக்கியமான படம். மணி ராஜாவுக்காகவே எடுத்தார் போல் சில காட்சிகளை எடுத்திருப்பார். படம் முழுவதும் ராஜாவுக்கும் மணிக்கும் யாருடையது பெஸ்ட் என்று ஒரு போட்டி இருந்து கொண்டேயிருக்கும். இப்படத்தின் வெற்றியில் மணி, கமலுக்கு எவ்வளவு பங்கிருக்கிறாதோ, அதே அளவு பங்கு ராஜாவுக்கு உண்டு.



தென்பாண்டி சீமையிலே என்கிற பாடலை படம் முழுவதும் ஒரு பின்ணனி இசையாகவே படத்தின் மூட்டுக்கு ஏற்றார் போல் உபயோகபடுத்தியிருப்பார். அதே போல் படத்தில் வ்ரும் டிரான்ஸிசன் காட்சிகளுக்கு எல்லாம் ஒரு வயலின் வைத்து நகர்த்துவார். பிண்ணனி இசை என்பது வெறும் வாத்தியங்களின் ஒசை மட்டுமல்ல, எங்கெங்கே ஓசையில்லாம் இருக்க வேண்டும் என்றும் சொல்லி கொடுத்த படம். நிறைய இடஙக்ளில் எபக்டுகளிலேயே படத்தை நகர்த்தியிருப்பார்.



இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி. நாயக்கர் ஏ.சியை பார்க்க அவரது ப்ளாட்டுக்கு போய், வேலைக்காரியிடம் போய் ஏசியை கூப்பிடு என்று சொல்லிவிட்டு காத்திருப்பார். அந்த நேரத்தில் வீட்டை சுற்றி பார்வையை ஓட்ட, ஒரு இடத்தில் பார்வை நிலைத்து நிற்கும், அப்போது கமல் தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு மேலும் உற்று பார்ப்பார். அவரது பார்வையிலிருந்து கேமரா பயணித்து, அங்கேயிருக்கு ஒரு போட்டோவில் போய் நிற்க, அந்த இடைபட்ட நேரத்தில் “டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று ஒரு ஒலியை எழுப்பி, கமலுக்கு ஏற்பட்ட குறுகுறுப்பை நமக்கும் ஏற்படுத்தி, படத்தில் முடிக்கும் போது, அது அவருடய பெண் ஏசியுடன் இருக்கு ப்டம் இருக்க, தென்பாண்டி சீமையிலே டூயூனை இம்முறை ஷெனாயில் தோய்த்தெடுக்க, கமல உருகி நிற்கும் காட்சி என்னால் மறக்கவே முடியாத காட்சி. கமல், மணி, ராஜா மூவரும் தங்களுடய சிறநத பங்களிப்பை அளித்திருப்பார்கள்





இன்னொரு காட்சியில் கமலின் மகள், ஜனகராஜ் ஒரு ஆளை அடிப்பதை பார்த்து விட்டு வீட்டிற்கு வ்ந்து கமலிடம் கேட்பார். அதற்கு கமல் அவன் தப்பு செஞ்சான், அதுனால அடிச்சேன் என்று சொல்ல, மகள் ஜனகராஜ் செய்வது தனக்கு தவறாக பட்டதால் அவரை நான் அடிக்கிறேன் என்று அடிக்க, மிக அருமையாக நடிக்கபட்டு, வசனம் எழுதப்பட்டு, திறமையாய் இயக்கப்பட்ட காட்சி, இந்த காட்சியை சவுண்ட் ம்யூட் வைத்து பாருங்கள், பின்னர் அதே காட்சியை பிண்ணனி இசையோடு பாருங்கள் அப்போது தெரியும் ராஜாவின் வீர்யம். .






அதே போல் கமல், சரண்யா கோவிலுக்கு போய் சாமி கும்பிடும் காட்சியில், சரண்யா மணியடிக்கும் காட்சியில் அவர் எகிறி அடிக்கும் போது, மணி சத்தத்துடன், ‘டொய்ங்’ என்று சிதார் ஒலியை கூடவே ஒலிக்க செய்து, அவளீன் துறுதுறுப்பையும், வெகுளிதனத்தையும் வெளிகாட்டுவார்.



பிண்ணனி இசையில், அதிலும் குறிப்பாக சண்டைகாட்சிகளில், நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டு வரும் ஆற்றல் எனக்கு தெரிந்து இளையராஜாவை தவிர வேறு ஒருவரை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. கமலுக்கும், ப்ரதீப் சக்திக்க்கும் நடக்கும் சண்டை காட்சியை ஒரு பாருங்கள், அந்த காட்சியில் அவர்களுக்குள் காட்சியில் வெளி கொணரமுடியாத வெறியையும், கோபத்தையும் இளையராஜா தன்னுடய பிண்ணனி இசையில் கொண்டு வந்திருப்பார்.



பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.



இப்படி நாயகன் படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் சொல்லி கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது. அதற்கு நாயகன் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் புதிதாய் இருக்கும்.





உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

42 comments:

Mahesh said...

ஆஹா... இன்னுங் கூட காதுக்குள்ளயே....

Venkatesh Kumaravel said...

எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் சரண்யாவை முதன்முதலாக சந்திக்கும் காட்சி. அற்புதமான சினமட்டோக்ராஃபி வேறு. பி.சி.ஸ்ரீராம், இளையராஜா, கமல் மூவரும் அதகளம் பண்ணியிருப்பாங்க. கண்ணாடியில் கமல் சரண்யாவைப் பார்க்கும் போது ஒழுகும் இசையில் பாறைகளே கசிந்துருகும். இன்ஸ்பெக்டர் கேல்கரை துரத்தும் போதும், முதலில் தூத்துக்குடி காட்சிகளிலும் திசைகளைத் தெறிக்கும் இசை. தென்பாண்டிச் சீமையிலே.. மாஸ்டர்பீஸ்!

ஷங்கி said...

சரியான நோட்டைப் பிடிச்சிருக்கீங்க தலைவரே! தென்பாண்டிச் சீமையில பிட்டை எடுத்துட்டா நாயகன் ஒரு மாத்து கம்மிதான்.

Venkatesh Kumaravel said...

http://www.youtube.com/watch?v=496RlEZFjro
இதையும் சேர்த்துருங்க சார்... இல்ல அடுத்த பகுதியிலயாவது எம்பெட் பண்ணிருங்க!

Cable சங்கர் said...

/http://www.youtube.com/watch?v=496RlEZFjro
இதையும் சேர்த்துருங்க சார்... இல்ல அடுத்த பகுதியிலயாவது எம்பெட் பண்ணிருங்க//

இதைத்தான் இந்த கட்டுரையின்மூலம் எதிர்பார்த்தேன் வெங்கி.. இந்த கட்டுரையிலேயே ஆட் செய்துவிட்டேன்.

கலையரசன் said...

ராஜா.. ராஜாதான்!!

க.பாலாசி said...

//இப்படி நாயகன் படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் சொல்லி கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது. அதற்கு நாயகன் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் புதிதாய் இருக்கும்.//

மிகவும் உள்ளார்ந்து ரசித்திருக்கிறீர்கள்..இ.ராஜாவின் இசையை...எனக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும்...பலமுறை ரசித்திருக்கிறேன்...இன்றும் ரசித்துக்கொண்டிருக்கிறேன்...மறுபடியும் அனுபவம் உங்களின் பதிவின் மூலம்...

thamizhparavai said...

பதிவு ஒருநாள் தாமதமா வந்ததைத்தவிர எந்தக் குறையுமில்லை...
நாயக்கர், ஏ.சியைப் பார்க்க அவர் வீட்டிற்குப் போகும் காட்சியும், சரண்யா மணியடிக்கும் காட்சியும் இசையோடு எனக்கும் மிகப் பிடித்த காட்சிகள்...
நல்ல பதிவுக்கு நன்றி...

வந்தியத்தேவன் said...

அண்ணாச்சி நாயகனை விமர்சிக்க தொடங்கினால் தொல்காப்பியனின் கோலங்கள் போல் நீண்டுகொண்டே போகும் ராஜா கம்பீரமாக பின்னணி இசை அமைத்த படங்களில் நாயகனும் ஒன்று. நீங்கள் போட்டிருக்கின்ற காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. நன்றிகள்

வால்பையன் said...

//இங்கே விளம்பரம் செய்ய.. Rs.100/ Month only
sankara4@gmail.com//


நிஜமா தானே!
காமெடி கீமெடி பண்ணலையே!

Cable சங்கர் said...

/நிஜமா தானே!
காமெடி கீமெடி பண்ணலையே!
/

serious val..

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள்

kumar said...

ஹாட் ஸ்பாட் பொண்ணோட கண்ணு ரொம்ப்ப்ப பெருசு.(கூட்டத்துலேர்ந்து தனிச்சு நில்லுடா மவனே)

மணிஜி said...

///இங்கே விளம்பரம் செய்ய.. Rs.100/ Month only
sankara4@gmail.com////

என் பதிவுக்கு ஆள் பிடிக்கனும்..விளம்பரம் பண்ணிடலாமா?

Raju said...

பதிவு,நல்லாபோகுது அண்ணே..
ஹை பிச்.

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

அருமையான பதிவு... நாயகன் படத்தை மேலும் ஒரு முறை பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது உங்கள் பதிவு. நன்றி கேபிள் சங்கர்... :)

GHOST said...

உங்ஙக பதிவை படிச்ச அப்புறம் இன்னும் ஒருக்கா படம் பாக்கணும் போல இருக்கு, அதுவும் அந்த பாட்டு நீ ஒரு காதல் சங்கீதம் காதுல ஒலிச்சுகிட்டே இருக்கு நன்றி

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகையைப் படித்த பிறகு படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது.

ஒரு படத்தின் இசையைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுடுச்சு... நானெல்லாம் படம் பார்ப்பது வேஸ்ட்...

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகையைப் படித்த பிறகு படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது.

ஒரு படத்தின் இசையைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுடுச்சு... நானெல்லாம் படம் பார்ப்பது வேஸ்ட்...

இது நம்ம ஆளு said...

பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.


இப்படி நாயகன் படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் சொல்லி கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது. அதற்கு நாயகன் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் புதிதாய் இருக்கும்.

உண்மை :)

Ashok D said...

நுட்பமா செதுக்கிட்டிங்க நாயகனை... அடுத்து எங்க தலைவர் படம் ‘தளபதி’யும் இதே போல் வரனும்.

கார்த்திக் பிரபு said...

Arumiayana padhivu idhuku munnadi bala karai bala ipadi than tamil classic parri eludhuvaru keep the good work

wishes

:)

http://gkpstar.googlepages.com/

am a follower of u

Cable சங்கர் said...

enjoy மகேஷ்

Cable சங்கர் said...

/சரியான நோட்டைப் பிடிச்சிருக்கீங்க தலைவரே! தென்பாண்டிச் சீமையில பிட்டை எடுத்துட்டா நாயகன் ஒரு மாத்து கம்மிதான்//

இளையராஜா இல்லையென்றால் என்று சொல்லுங்கள் சங்கா..

நன்றி நாஞ்சில் நாதம்.

Cable சங்கர் said...

/எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் சரண்யாவை முதன்முதலாக சந்திக்கும் காட்சி. அற்புதமான சினமட்டோக்ராஃபி வேறு. பி.சி.ஸ்ரீராம், இளையராஜா, கமல் மூவரும் அதகளம் பண்ணியிருப்பாங்க. கண்ணாடியில் கமல் சரண்யாவைப் பார்க்கும் போது ஒழுகும் இசையில் பாறைகளே கசிந்துருகும். இன்ஸ்பெக்டர் கேல்கரை துரத்தும் போதும், முதலில் தூத்துக்குடி காட்சிகளிலும் திசைகளைத் தெறிக்கும் இசை. தென்பாண்டிச் சீமையிலே.. மாஸ்டர்பீஸ்!
//

இப்படி சொல்லி கொண்டே போகலாம் வெங்கி..

Cable சங்கர் said...

/மிகவும் உள்ளார்ந்து ரசித்திருக்கிறீர்கள்..இ.ராஜாவின் இசையை...எனக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும்...பலமுறை ரசித்திருக்கிறேன்...இன்றும் ரசித்துக்கொண்டிருக்கிறேன்...மறுபடியும் அனுபவம் உங்களின் பதிவின் மூலம்..//

ஆமாம் பாலாஜி.. ஒரு படத்தின் பிண்ணனி இசையை வைத்தே அது என்ன படம் என்று சொல்லிவிடுவேன். அது இளையராஜாவின் இசையாக இருந்தால்.

Cable சங்கர் said...

/பதிவு ஒருநாள் தாமதமா வந்ததைத்தவிர எந்தக் குறையுமில்லை...
நாயக்கர், ஏ.சியைப் பார்க்க அவர் வீட்டிற்குப் போகும் காட்சியும், சரண்யா மணியடிக்கும் காட்சியும் இசையோடு எனக்கும் மிகப் பிடித்த காட்சிகள்...
நல்ல பதிவுக்கு நன்றி.//

மன்னிக்கவும் தமிழ் நெஞ்சம்.. கொஞ்சம் வேலையாகிவிட்டது. அதனால் எழுத முடியவில்லை.. அத்தோடு இந்த வீடியோகளை தேர்ந்தெடுக்க கொஞ்சம் நேரம் தேவைபட்டது. உஙக்ள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி

Cable சங்கர் said...

/அண்ணாச்சி நாயகனை விமர்சிக்க தொடங்கினால் தொல்காப்பியனின் கோலங்கள் போல் நீண்டுகொண்டே போகும் ராஜா கம்பீரமாக பின்னணி இசை அமைத்த படங்களில் நாயகனும் ஒன்று. நீங்கள் போட்டிருக்கின்ற காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. நன்றிகள்
//

மிக்க நன்றி வந்தியத்தேவன். கோலங்கள் கூட முடிந்துவிடும்.

Cable சங்கர் said...

நன்றி யோவாய்ஸ்
நன்றி கலையரசன்

Cable சங்கர் said...

/ஹாட் ஸ்பாட் பொண்ணோட கண்ணு ரொம்ப்ப்ப பெருசு.(கூட்டத்துலேர்ந்து தனிச்சு நில்லுடா மவனே)

11:59 AM//

பின்னூட்டத்திலேயே தனிச்சு நிக்கிறீஙக் தறுதலை..

Cable சங்கர் said...

/என் பதிவுக்கு ஆள் பிடிக்கனும்..விளம்பரம் பண்ணிடலாமா?
//

உஙக்ளுக்குன்னா டிஸ்கவுண்ட் போட்டுறலாம்

Cable சங்கர் said...

/உங்ஙக பதிவை படிச்ச அப்புறம் இன்னும் ஒருக்கா படம் பாக்கணும் போல இருக்கு, அதுவும் அந்த பாட்டு நீ ஒரு காதல் சங்கீதம் காதுல ஒலிச்சுகிட்டே இருக்கு நன்றி
//

நன்றி கோஸ்ட்
நன்றி அச்சிலீஸ்

Cable சங்கர் said...

/இந்த இடுகையைப் படித்த பிறகு படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது.

ஒரு படத்தின் இசையைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுடுச்சு... நானெல்லாம் படம் பார்ப்பது வேஸ்ட்...
//

என்னன்னே அப்படி சொல்லிட்டீங்க.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொருமாதிரியான ரசனை..

Cable சங்கர் said...

/நுட்பமா செதுக்கிட்டிங்க நாயகனை... அடுத்து எங்க தலைவர் படம் ‘தளபதி’யும் இதே போல் வரனும்//

மிரட்டல் மாதிரி தெரியுதே அசோக்..:)

Cable சங்கர் said...

/Arumiayana padhivu idhuku munnadi bala karai bala ipadi than tamil classic parri eludhuvaru keep the good work

wishes

:)//

நன்றி கார்த்திக் பிரபு..

நன்றி இது நம்ம ஆளூ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nallaa irukku anna

Cable சங்கர் said...

நன்றி ரமேஷ்.

hari raj said...

அருமை கேபிள்!!! நன்றி

ஹரி ராஜகோபாலன்

கோபிநாத் said...

என்டா தேதி ஆகிடுச்சி இன்னும் பதிவு வரலியேன்னு பார்த்தேன்....அட்டகாசமாக வந்திருக்கு அதுவும் முதல் வீடியோவை பற்றி சொல்லியிருப்பாது அப்படியே நான் மனசுக்குள்ள நினைச்சது.

கலக்கல் தல ;)

சி.வேல் said...

வணக்கம் Cable Sankar

அருமை, ராஜா பத்திப்பேச வார்த்தையில்ல்லை, ”பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.”

சத்தியமான உண்மை, பல பக்கங்கள் வசனம் பேசினாலும் உணர்த்த முடியாத காட்சியை, ராஜா இசைமட்டுமே நம்மை உருக்குமளவிற்கு கொண்டுசெல்லும்

ம்ம், ராஜா ஒரு இசை கடவுள்,

சி.வேல் said...

வணக்கம் Cable Sankar

அருமை, ராஜா பத்திப்பேச வார்த்தையில்ல்லை, ”பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.”

சத்தியமான உண்மை, பல பக்கங்கள் வசனம் பேசினாலும் உணர்த்த முடியாத காட்சியை, ராஜா இசைமட்டுமே நம்மை உருக்குமளவிற்கு கொண்டுசெல்லும்

ம்ம், ராஜா ஒரு இசை கடவுள்,

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.

/

பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.
/
கண்டிப்பாக