கும்பேஸ்வரர் கோயிலுக்கு போகும் நடையில் இரண்டு பக்கமும், கடைகளாய் இருக்க, அதில் ஒன்றாய் இருந்தது இந்த ஓட்டல். டிபிக்கல் மெஸ் போன்ற டேபிள் சேர் வகையறாக்கள். டூரிஸ்டுகள் நிறைய பேர் வருமிடமாகையால் பிஸ்லரி பாட்டில்கள் கல்லாப் பெட்டியின் மீது நிரம்பி வழிந்தது. உட்கார்ந்தவுடன் வாழை இலையை போட்டார்கள். “அப்புறம் என்ன சாப்பிடறேள்?’ என்று கணீர் குரலில் ஒரு நாகேஷ் வந்து கேட்டார். இட்லி என்றேன். சொல்லும் போதே “வேற.. ரவா.. ஸ்பெஷல் ரவா?” என்று கேட்டவர், நகர்ந்து இட்லி கொண்டு வந்து வைத்துவிட்டு, சாம்பார், சட்னி, காரசட்னி வகையராக்களை வைத்துவிட்டு, நகர்ந்தார். இட்லி வழக்கமான ரவையாய் அரைத்து கரைத்ததுதான். ஆனால் அந்த சாம்பார்.. வா..வா..வாவ். என்ன ஒரு டேஸ்டுடா சாமி. அரைத்துவிடப்பட்ட, சாம்பார், தேங்காய் சட்னியுடன் இட்லியை சாப்பிட ஆரம்பித்த அடுத்த வினாடி சாம்பாரின் சுவையால் அடுத்த வாய்க்கு கை போனது. அதற்குள் ரவா தோசை வந்தது. சும்மா சொல்லக்கூடாது எனது வாழ்நாளில் இப்படி ஒரு மெல்லீசான ரவா தோசையை கடைசி கடைசியாய் திருவல்லிக்கேணி முரளி கபேயில் பார்த்தது. அதற்கு பிறகு இப்படி ஒரு ரவா தோசையை பார்க்கவேயில்லை.
நல்ல பொன் கலரில், நடுவே மொத்தை மாவாய் இல்லாமல் சீரான பரவலோடு, நல்ல முறுவலுடம் கொடுத்தார்கள். அதன் மேல் டிப்பிக்கல் ஊர் ஸ்டைலில் கொஞ்சம் கெட்டிச் சட்னி வேறு. கேட்கவே வேண்டும் அட்டகாசமான சாம்பார், கார சட்னி. ஒரு விள்ளல் தோசையை வைத்து சாம்பார், சட்னியோடு, வாயில் வைத்த அடுத்த நிமிடம் கரைந்து வழுக்கிக் கொண்டு சென்றது. ஒரு முழு தோசையை இவ்வளவு ஆசையாய் சாப்பிட்டு ரொம்ப வருஷமாகிறது. அப்படி ஒரு சுவை. எனக்கு மிகவும் பிடித்து போனதால் அடுத்த நாள் குடுமப்த்துடன் அங்கேதான் காலை டிபன்.
சுமார் இருபது வருடங்களும் மேலாக இந்த உணவகம் அங்கே இயங்கி வருகிறதாம். சாதா மாவு, ஸ்பெஷல் மாவு, அடை அவியல் எல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். பூரிக்கு கொடுக்கும் மசால் நன்றாக இருக்கிறது. அதிக உருளைகிழக்கில்லாமல் கொஞ்சம் நீர்க்க, வெங்காயம், கடலப் பருப்போடு வாவ்.. அதுவும் அட்டகாசம். பொடி தோசை என்றதும் வழக்கம் போல காரமில்லாத தோசையாய் இருக்கும் என்று நினைத்தால் நல்ல சுள்ளென்ற கார பொடியுடன் மினுமினுவென எண்ணெய் மினுமினுக்க ஒரு ஸ்பெஷல் மாவு தோசை வந்தது. பொங்கலில் லேசாய் இன்னும் கொஞ்சம் உப்பு வேண்டும் என்றாலும் வழுக்கிக் கொண்டு போனது உத்தமம். Don't Miss This Place.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நல்ல பகிர்வு.