Thottal Thodarum

Jun 27, 2011

கொத்து பரோட்டா-27/06/11

டீசல், கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றி விட்டது மத்திய அரசு. அந்த அறிவிப்பு எப்போது வந்ததோ அப்போதிலிருந்து, திமுக தலைவர் வரியை குறையுங்கள், இந்த வரியை குறையுங்கள், நான் என் ஆட்சியில் அப்படித்தான் செய்தேன். என்று அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வது சரிதான் என்றாலும், அய்யா போட்ட எந்த சட்டத்தையும், அய்யா ஆட்சியில் செய்த எதையும் தான் செய்வதில்லை என்ற முடிவில் இருக்கும் அம்மா இதைக் கேட்பார்களா?. தலைவர் தெரிஞ்சுதான் சொல்றாரோ..?
##################################################
இனி தமிழ் சினிமாவின் பெயர்கள் ஆங்கிலத்தில் வர ஆரம்பிக்கலாம். ஏனென்றால் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற சட்டத்தை அமல் படுத்தும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் கமிட்டி சமீப காலமாய் கூடுவதேயில்லை. அதனால் வரி விலக்கு லெட்டர் இல்லாத தமிழ் படங்களுக்கு, வரி வசூலித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இனி தமிழிலேயே அர்த்தம் சொல்லி புரிய வைக்கக்கூடிய பெயர்கள் இல்லாமல் தமிழ் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். வாழ்க மம்மி.
#############################
பிரபல எழுத்தாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றிய கட்டுரைகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தன்னை ஒரு ப்ளேபாய் என்று சொல்லிக் கொள்வதில் ஆர்வமிருப்பவருக்கு இது அல்வா என்று தோன்றுகிறது. ஆனால் அந்த சேட்டிங் கண்டெண்ட்டை படித்து பார்த்தால் யாரோ வேண்டுமென்றே.. தூண்டிவிட்டு பேச வைத்தது போல் இருக்கிறது. அவர் அப்படி பட்டவரா? இல்லையா? என்று சப்போர்ட் செய்யவதற்காக சொல்லவில்லை. எந்த ஒரு ஆணாவது இப்படி தங்களுக்கு பிடிக்காத முறையில் பேசினால் அடுத்த நாளிலிருந்து  பேசாமல் இக்னோர் செய்வதை விட்டுவிட்டு, இப்படி தொடர்ந்து  பேசினால் என்ன நினைப்பான் அந்தப் பக்கம் இருக்கும் ஆண்? இந்த விஷயத்தில் இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது. ஸோ.. கட்டுரை எழுதினால் அப்பெண்ணைப் பற்றியும் தான் எழுத வேண்டும். ஆம்பளைக்கு பொம்பளையும், பொம்பளைக்கு ஆம்பளையும் இடம் கொடுக்காம தப்பு நடக்கவே நடக்காது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வருகிற ஜூலை 1ஆம் தேதி நான் நிர்வாகத் தயாரிப்பாளராய் பணியாற்றி வரும் “அரும்பு மீசை குறும்பு பார்வை” படம் வெளி வருகிறது.  முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு சீரியஸ் சப்ஜெக்ட்டை ஜாலியாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும். விரைவில் நம் பதிவர்களுக்கான அழைப்பு அறிவிக்கப்படும்.
###############################
சென்ற வாரம் டிசி மேனர் கரோக்கேவில் “எங்கேயும் காதல்” பாடலை பாடிக் கொண்டிருந்தேன். கடைசி பாடல். மேடையின் ஓரத்தின் இருளில் நின்றபடி, கண் மூடி பாடிக் கொண்டிருக்க, கண் திறந்து பார்த்தால் நிறைய இளைஞர், இளைஞிகள். பாட்டு முடியவும், கரோக்கேவின் டைம் முடிந்து லைட் போடவும் சரியாக இருக்க, என்னை பார்த்த இளைஞர்களின் முகத்தில் ஆச்சர்யம்.  “நான் யாரோ எங்கள் வயது ஆள் பாடிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். அமேசிங் என்று பாராட்டினார்கள். பெயர் கேட்டார்கள். ”யூத்” என்றேன் நான்.:))
##################################
படித்ததில் பிடித்தது.
பட வேலைகள் காரணமாய் படிக்க நேரம் கிடைக்கவில்லை. இருந்தும் தூங்குவதற்கு முன் கிடைத்த இடைவெளியில் படிக்க ஆரம்பித்திருக்கும் புத்தகம் “சீனா விலகும் திரை” பல்லவி ஐயர் எழுதிய புத்தகத்தின் தமிழ் பதிப்பு. ஆங்கிலத்தில் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. தமிழில் அட்டகாசம். நன்றி ராமன் ராஜா. படு சுவாரஸ்யமாய் செல்கிறது. முழுவதும் படித்துவிட்டு சொல்கிறேன்.
################################
இனி வரும் காலங்களில் சன், ரெட்ஜெயண்ட், க்ளவுட் நைன் பெயர்கள் தயாரிப்பில் இருக்கும் படங்களைத் தவிர அவர்கள் பெயரில் ப்டங்கள் வராது என்று தெரிகிறது. ஆட்டம் தேவையேயில்லை என்று தலைவர் கூப்பிட்டு சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள். சொன்னதின் இம்பாக்ட் தான் வேங்கையிலிருந்து சன்னின் விலகல் என்கிறார்கள்.
################################
தத்துவம்
மாற்றம் தான் வாழ்கையின் நிதர்சனம். சவால் வாழ்க்கையின் குறிக்கோள். எனவே மாற்றத்தை சவலோடு எதிர் கொள்ளூங்கள்.

நாம் எப்போது என்ன நடந்தது என்று யோசிப்பதை விட, இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே வெற்றிக்கான வழி.
###################################
ப்ளாஷ்பேக்
உத்தமப்புத்திரன். புதிய படமில்லை, சிவாஜி நடித்த பழைய படம். இப்படமும், பாடல்களும் சூப்பர் ஹிட்டானவை.  மேன் வித் எ அயர்ன் மாஸ்க் என்ற அந்த ஆங்கில படத்தின் மூலத்திலிருந்து,முதலில் பி.யு.சின்னப்பா என்று நினைக்கிறேன். அவர் நடித்து வெளிவந்தது. அடுத்து அதே ப்டத்திற்கு இயக்குனர் ஸ்ரீதரின் திரைக்கதையில் , நடிகர் திலகம் சிவாஜி நடித்த படம். அதில் வரும் ‘யாரடி நீ மோகினி” அந்நாளைய ராக் அண்ட் ரோல். பாடலும் அதை பாடிய டி.எம்.எஸும், துள்ளாட்டம் போட்டிருப்பார்கள். பாடலுக்கு நடனம் அமைத்திருக்கும் விதமும் அட்டகாசமாய் இருக்கும்.
####################################
மை கார்னர்
கோலங்கள் சீரியலில் நடித்த காட்சி. தமிழ் சினிமாவில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்று ஆசையோடு வருபவர்களை, ஏ.வி.எம் எட்டாவது ப்ளோரில் இருக்கும் இந்த கோர்ட்டு செட்டுக்குள், நல்ல ஏப்ரல் மாத வெய்யிலில் கோட்டைக் கழட்டக்கூடாது என்று சொல்லி, உள்ளேயே இருக்க வேண்டும் வெளியே போகக்கூடாது என்று சொல்லிவிட்டால் போதும். ஜென்மத்திற்கும் திருமப் மாட்டார்.:)
#####################################
அடல்ட் கார்னர்
கோபமாய் வீட்டிற்குள் வந்த புருஷனை பார்த்து 'ஏன் ரொம்ப கோபமா இருக்கீங்க?' என்று கேட்டாள்.

புருஷன்: 'நம்ம அப்பார்ட்மென்ட் வாட்ச்மேன் சொல்றான், இந்த அப்பார்ட்மென்ட்டுல இருக்கிற எல்லாருடய பொண்டாட்டியையும் மேட்டர் பண்ணிட்டானாம். ஒரே ஒருத்தியை தவிர..கேட்டதும் செம கோபம் வந்துடுச்சி.. என்ன ஜென்மம் அவன்?' என்றான்.

பொண்டாட்டி, 'எனக்கு அது யாருன்னு தெரியும்ங்க, நம்ம எதிர் வீட்டு பேங்க் மேனேஜர் பொண்டாட்டியா தான் இருக்கும்..'
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்



Post a Comment

29 comments:

எல் கே said...

அண்ணே இவர் அந்த வீணாப்போன அரசில்தான இருக்கார். சண்டைப் போட சொல்லுங்க அதெல்லாம் மாட்டார். இங்க மட்டும் வாய்க் கிழிய அறிக்கை விடுவார். எனக்குத் தெரிந்து இவர் ஒருமுறைதான் வரியைக் குறைத்தார். அவ்ளோதான் வயசான காலத்தில் வீட்ல சும்மா இருக்க சொல்லுங்க

Cable சங்கர் said...

அதைத்தான் நானும் சொல்றேன். இவரு வரிய கொறைக்க சொல்ராருன்னு இந்தம்மா.. முடியாதுன்னு சொல்லிட்டா லாஸு நமக்குத்தானே.. அதைத்தான் தெரிஞ்சு சொல்றாரான்னு கேட்டிருக்கேன்.

shan said...

Kothu super...

'பரிவை' சே.குமார் said...

Koththu kalakkal...

bandhu said...

//ஆனால் அந்த சேட்டிங் கண்டெண்ட்டை படித்து பார்த்தால் யாரோ வேண்டுமென்றே.. தூண்டிவிட்டு பேச வைத்தது போல் இருக்கிறது. //
ஓ! தூண்டிவிட்டால் என்னவேண்டுமானாலும் பேசலாமா? ஒரு வரை முறையே இல்லையா? யார் கொடுத்தது அவருக்கு அப்படி பேசும் அதிகாரம்?

Cable சங்கர் said...

bandhu.. இதோ நீங்கள் இப்படி கேட்கிறீர்களே இந்த கேள்வியை கேட்க தூண்டிவிட்டது யார்? நான் தானே.. ஒரு வேளை இந்த தர்கங்கள் பெரிய அளவில் போய் நீங்கள் என்னையோ, அல்லது நான் உங்களையோ திட்டிவிட்டால் அதற்கு காரணம் யார்? கொஞ்சம் உணர்ச்சி வசப்படாமல் யோசியுங்கள்.

அவிய்ங்க ராசா said...

////////////////////
எந்த ஒரு ஆணாவது இப்படி தங்களுக்கு பிடிக்காத முறையில் பேசினால் அடுத்த நாளிலிருந்து பேசாமல் இக்னோர் செய்வதை விட்டுவிட்டு, இப்படி தொடர்ந்து பேசினால் என்ன நினைப்பான் அந்தப் பக்கம் இருக்கும் ஆண்? இந்த விஷயத்தில் இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது. ஸோ.. கட்டுரை எழுதினால் அப்பெண்ணைப் பற்றியும் தான் எழுத வேண்டும். ஆம்பளைக்கு பொம்பளையும், பொம்பளைக்கு ஆம்பளையும் இடம் கொடுக்காம தப்பு நடக்கவே நடக்காது.
////////////////////////////////
கரெக்டா சொன்னீங்க..இந்த பொண்ணுங்க பஸ்ஸுல வர்றதுனாலதானே ஆம்பிளைங்க சபலப்பட்டு இடிக்கிறாய்ங்க..அதனாலேயே, பொண்ணுங்கள்ளெல்லாம் பஸ்ஸுலயே வரக்கூடாதுன்னு சொல்லணும்..அப்புறம், சேலை, சுடிதார் போட்டு ஆண்க்ள் மனசை கெடுக்குறாங்க..அதனால, போர்வை மாதிரி முழுசா போர்த்திக்கிட்டு வந்தா, எந்த பிரச்சனையும் வராது..ஆங்க்..அப்புறம், பொம்பளை புள்ளைகளுக்கு எதுக்கு இண்டர்நெட்டு..வீட்டுல உக்கார்ந்து ஒழுங்கா, டி.வி பார்க்க வேண்டியதுதான..இப்படி எல்லாத் தப்பையும் அவர்கள் பக்கம் வைச்சுக்கிட்டு நம்ம மேல குத்தம் சொன்னா எப்படி..

கொடுமையான கருத்து..இது எப்படி தெரியுமா இருக்கு..நீ ஏன் அப்படி டிரெஸ்சு போட்டுருக்க..அதுதான் என்னை டிஸ்டர்ப் பண்ணுச்சு..அதனால நான் என்ன வேணுமின்னாலும் பண்ணுவேன்..சோ..தப்பு ரெண்டுபேரு பக்கம் தான் இருக்குன்னு சொல்லுற மாதிரி இருக்கு..நம்ம இருக்கிறது கற்காலத்திலோ...??

Cable சங்கர் said...

//கொடுமையான கருத்து..இது எப்படி தெரியுமா இருக்கு..நீ ஏன் அப்படி டிரெஸ்சு போட்டுருக்க..அதுதான் என்னை டிஸ்டர்ப் பண்ணுச்சு..அதனால நான் என்ன வேணுமின்னாலும் பண்ணுவேன்..சோ..தப்பு ரெண்டுபேரு பக்கம் தான் இருக்குன்னு சொல்லுற மாதிரி இருக்கு..நம்ம இருக்கிறது கற்காலத்திலோ...??
//

அவிங்க ராசா.. இது வெறும் வாதம். இங்கு சொன்னது.. வெறும் டிரெஸ் பற்றியல்ல.. தொட்ர்ந்து அந்தப் பெண் அவரை ஸ்டிமுலேட் செய்யும் விதமாய் என்கரேஜ் செய்திருக்கிறாள்.எனவே என்னைப் பொறுத்த வரை இருவருமே அயோக்கிய சிகாமணிகள் தான்.

THOPPITHOPPI said...

கேபிள் அண்ணே இந்த மாதிரி கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி ஏன் நேரத்த வீணாக்கணும் நானே பதில் சொல்லுறேன்.

//இந்த பொண்ணுங்க பஸ்ஸுல வர்றதுனாலதானே ஆம்பிளைங்க சபலப்பட்டு இடிக்கிறாய்ங்க..அதனாலேயே, பொண்ணுங்கள்ளெல்லாம் பஸ்ஸுலயே வரக்கூடாதுன்னு சொல்லணும்.//

பஸ்சுல வர்றது தப்பு இல்லை பாஸ், பஸ்சுல பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கும் சீட்டில் உட்காராம ஆம்பளைங்க உட்க்கார்ந்து இருந்த சீட்டுல ஒரு ஆம்பளைக்கு பக்கத்துல போய் உட்க்கார்ந்ததுனாலதான் இவ்வளவு பிரச்சனை.

//அப்புறம், சேலை, சுடிதார் போட்டு ஆண்க்ள் மனசை கெடுக்குறாங்க..அதனால, போர்வை மாதிரி முழுசா போர்த்திக்கிட்டு வந்தா, எந்த பிரச்சனையும் வராது..//

தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தால். இருந்தால் எதுக்கு இப்படி போர்வை போட்டு முக்காடு போடணும்?

//ஆங்க்..அப்புறம், பொம்பளை புள்ளைகளுக்கு எதுக்கு இண்டர்நெட்டு..வீட்டுல உக்கார்ந்து ஒழுங்கா, டி.வி பார்க்க வேண்டியதுதான..//

பைக் ஓட்டுறது தப்பு இல்லை, ஓட்டுபவர்கள் எல்லாரையும் இங்கே குத்தம் சொல்லல. ரேஷ் டிரைவிங் செய்து முட்டி மோதியதால்தான் இவ்வளவு பிரச்சனை. ரேஷ் டிரைவிங் செய்யக்கூடாதுன்னு சொன்னா பைக்கே ஓட்டக்கூடாதுனு சொன்னமாதிரில இருக்கு உங்க கருத்து?

//ு..நீ ஏன் அப்படி டிரெஸ்சு போட்டுருக்க..அதுதான் என்னை டிஸ்டர்ப் பண்ணுச்சு..அதனால நான் என்ன வேணுமின்னாலும் பண்ணுவேன்..//

ஆமாம் நீ மறைக்க வேண்டியத எல்லாம் மறைக்காம டிரெஸ்சு போட்டா என்ன டிஸ்டர்ப் பண்ணத்தான் செய்யும். இதுலயும் "நியுட்டனின் மூன்றாம் விதி" இருக்கு பாஸ். ஏன் மதுரை பொண்ணுக்கு நடந்த கொடுமை தஞ்சாவூரு பொண்ணுக்கு நடக்கல?

THOPPITHOPPI said...

//சோ..தப்பு ரெண்டுபேரு பக்கம் தான் இருக்குன்னு சொல்லுற மாதிரி இருக்கு..நம்ம இருக்கிறது கற்காலத்திலோ...?? //

கர்காலமோ கிர்காலமோ குழந்தைன்னு பிறந்தா ஒது பொம்பள வைத்துள்ள இருந்துதான். இதில் எந்த மாற்றம் நடக்கப்போவது இல்லை.

Nat Sriram said...

கொத்து சூப்பர்..ஐ லைக் ஆல் தி செக்ஷன்ஸ் :)
1 . ஏவிஎம் ஏசி ஃப்ளோர் அப்படின்னு பத்திரிகைல போடுவாங்களே? எல்லா ஃப்ளோரும் ஏசி இல்லையா?
2 . உங்களுக்கு பாடக்கூடிய வாய்ஸ் இருக்கும்போது ஏன் சீரியல்ல எல்லாம் டப்பிங் வாய்ஸ் கொடுக்குறாங்க? டைம் constraints ?
3 . 2 . 10 ல இருந்து வீடியோ முடியற வரைக்கும் லென்க்தி டயலாக் உங்களுக்கு. உங்கள் முகத்துக்கு ஒரே ஷாட் வேறு. எப்படி பேசினீர்கள்? ப்ரோம்ப்டிங்?
4 . இப்போ தான் "ஊசி இடம் கொடுத்திருக்கிறது. அஜெண்டாவோடு" அப்படின்னு ட்வீட்டிட்டு வரேன். நீங்களும் அதே சொல்றீங்க. எப்போ அந்த "பொண்ணு" பேஸ்புக் பாஸ்வர்ட் கேட்டுச்சோ, அப்போவே the story broke down into pieces for me...இவரும் உடனே கொடுக்க சொல்லோ, சார்(உ) நிஜமாவே அப்பாவியா இருக்கணும், இல்ல இதுல அவருக்கும் பங்கிருக்கனும்ன்னு தோணிச்சு..

அகமது சுபைர் said...

தலைவரே,

இந்த வீடியோல நீங்க ரொம்ப கண்ணை சிமிட்டுறீங்க...

கண்ணை அடிக்கடி சிமிட்டுற பாடி லாங்குவேஜ் வக்கீல்களுக்கு ஆகாது :))

#எதிலும் குறை சொல்வோர் சங்கம் :)

பிரபல பதிவர் said...

கொத்து நல்லாருக்கு....

அப்புறம் சாரு மேட்டர்ல உங்க கருத்த அப்படியே வழிமொழிகிறேன்... இவ்ளோ நெருக்கமா பெண் அனுமதிக்காம பேச முடியாது....

பிரபல பதிவர் said...

எல்லா கொத்துலயும் அம்மாவை கொத்தனுமா...

பெட்ரோல் உயர்வை கண்டிச்சு சோனியாவை பாத்து பேச அய்யா அட்லீஸ்ட் டெல்லி போவாரா??

ஷர்புதீன் said...

கேபிள் பாஸ் உங்களுக்கு தெரியாததில்லே, "அரசியல்," "மதம்", இப்ப "சாரு" , இந்த சப்ஜெக்ட் பற்றி பேசினால் எழுதினால் எதிரிகளைத்தான் உருவாக்கும், நண்பர்களை அல்ல...

Thamira said...

ஹைய்யா.. வக்கீலு.. வக்கீலு.!

D. Chandramouli said...

The song 'Yaradi Mohini' in 'Uthama Puthiran' was unique in every respect - Sivaji's facial reaction and the stylish steps, Helen's entry, Nambiar's expressions along with the other villain Sivaji's, the beautiful verse and the tune, TMS's booming voice, all will have to be enjoyed shot by shot. That song was one of a kind, no doubt.

D. Chandramouli said...

The song 'Yaradi Mohini' in 'Uthama Puthiran' was unique in every respect - Sivaji's facial reaction and the stylish steps, Helen's entry, Nambiar's expressions along with the other villain Sivaji's, the beautiful verse and the tune, TMS's booming voice, all will have to be enjoyed shot by shot. That song was one of a kind, no doubt.

அப்பாவி முரு said...

ஓ, வக்கீலா?

நான் கூட அந்த மீசை வச்ச போலீஸோன்னு நினைச்சேன். ஏன்னா, அவருதான் வக்கீலைவிட யூத்தாக இருக்கார்.
:)

Muthukumara Rajan said...

Sir,

Mr. MK redused the tax in the last month before election. That is election politics.

He is always like that. I dont know are you trying to become DMK pro in blogs and misusing you popolarity on the blog.

I dont worry even if removed my comments .

Note I am person follows any parties/groups.

By
Muthukumar

N.H. Narasimma Prasad said...

அடல்ட் கார்னரில் இருக்கும் இந்த ஜோக், ஏற்கனவே பாலச்சந்தரின் 'மன்மத லீலை' படத்தில் பார்த்திருக்கிறேன். மற்றபடி இந்த வார 'கொத்து பரோட்டா' சூப்பர் அண்ணே.

Village வின்ஞானி said...

Ada ada ada..kolangal seriala..unga nadippu, dialogue delivery and body language attagaasam..kaka ga po

sriram said...

சக பதிவர் என்றும் பாராமல் அபி அப்பாவை (தொல்ஸை) இப்படி வண்டை வண்டையாக பேசியதற்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். :)))))))))))))))
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ராஜரத்தினம் said...

உங்க வழக்கமான கூவலை ஆரம்பிச்சாச்சா? ஜெயலலிதா மத்திய அரசு வரியை குறைக்க சொன்ன உடனே கருணாநிதியால கனவிலும் கூட சொல்ல பயப்படும் கருத்தை மத்திய அரசுக்கு எதிராக தெரிவித்தார். இதன் மூலம் இவர் குறைக்க மாட்டார் என்று தெரிந்த பிறகு தாத்தன் கிட்ட இருந்து இப்படி ஒரு அறிக்கை. அப்புறம் பாருங்கள் இன்னொரு அறிக்கை வரும். எப்படி தெரியுமா?
”நான் கேட்டதற்காக இந்த அம்மையார் வரியை குறைக்கவிரும்பவில்லை. தமிழர் நலனுக்காக அந்த கோரிக்கையை நான் வாபஸ் வாங்கிகொள்கிறேன். இப்போதாவது தருவார்கள் என்றால் எனக்கு சந்தோஷமே. இப்படியாவது தமிழக மக்களூக்கு நன்மை நடந்தால் சரி என்று.” அவரின் starategy என்னை போன்ற சின்ன பசங்களுக்கே தெரிந்த ஒன்று. அவருக்கு இனி தேவை நீண்ட ஓய்வு. அதை தர வேண்டுகிறேன். ஆண்டவனிடம்.

shortfilmindia.com said...

ர்ராஜரத்னம் அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்.

bandhu said...

////ு..நீ ஏன் அப்படி டிரெஸ்சு போட்டுருக்க..அதுதான் என்னை டிஸ்டர்ப் பண்ணுச்சு..அதனால நான் என்ன வேணுமின்னாலும் பண்ணுவேன்..//

ஆமாம் நீ மறைக்க வேண்டியத எல்லாம் மறைக்காம டிரெஸ்சு போட்டா என்ன டிஸ்டர்ப் பண்ணத்தான் செய்யும். இதுலயும் "நியுட்டனின் மூன்றாம் விதி" இருக்கு பாஸ். ஏன் மதுரை பொண்ணுக்கு நடந்த கொடுமை தஞ்சாவூரு பொண்ணுக்கு நடக்கல//
இது போல ஒரு கருத்தை கனடாவில் ஒரு போலிஸ் அதிகாரி சொல்லப்போக, உலக அளவில் Slutwalk என்னும் போராட்டங்கள் நடக்கின்றன. மற்றவர் உடையை பார்த்து நாம் கட்டுப்படுத்த முடியாமல் டிஸ்டர்ப் ஆனோமேன்றால், ஒன்று நாம் இன்னும் கற்காலத்திலேயே இருக்க வேண்டும். இல்லையென்றால் நம்மிடம் ஏதோ கோளாறு இருக்கவேண்டும்!

foreignkaran said...

//மற்றவர் உடையை பார்த்து நாம் கட்டுப்படுத்த முடியாமல் டிஸ்டர்ப் ஆனோமேன்றால், ஒன்று நாம் இன்னும் கற்காலத்திலேயே இருக்க வேண்டும். இல்லையென்றால் நம்மிடம் ஏதோ கோளாறு இருக்கவேண்டும்!
//

I dont know why showing skin is so important to girls. Talking about "karkalam" , everybody was nude those period I guess. So does it mean,ladies want to goback to "karkalam"?

foreignkaran said...

See the evolution of Ladies dresses:

Fully covered
Maxi
Midi
Mini
Micro
Sleeveless
Strapless
..
...
soon bare body

I appreciate their FREEDOM thoughts. By going towards zero dress,if they feel they are freed so it be, I welcome that. :-)

v.vinoth said...

கேபிள் ஒரு ஸ்மால் மேட்டர்.the man in the iron mask படம் 1998ல வந்தது.இத எப்படி உத்தமபுத்திரன் சுட்டு இருக்க முடியும்.விளக்கம் ப்ளீஸ்