உயர்திரு 420
இம்மாதிரியான கதைகளில் ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் இருந்தால் தான் சுவாரஸ்யம் மிகும். ஆனால் இயக்குனர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சிநேகனின் புத்திசாலித்தனத்தை அவ்வளவு டீடெயிலாக காதல் காட்சிகளில் காட்டியவர். வசீகரனின் தொழிலை எப்படி புத்திசாலித்தனமாய் விரிவு படுத்தினார் என்பதை காட்டவில்லை. தீடீரென ஒரு அம்மா.. சார் வந்ததிலேர்ண்டு முப்பது பர்செண்ட் பிஸினெஸ் ஏறியிருக்கிறது என்று சொல்வது செம காமெடி. அது மட்டுமில்லாம எதற்காக சிநேகன், வசீகரனின் ஹோட்டலுக்கு வந்து சரி செய்ய வேண்டும்?. அவருக்கும் வசீகரனுக்கு எந்த விதத்தில் நட்பு?. எதற்காக அவர் வசீகரனுக்கு நேர்மையாக இருக்க வேண்டும்?. வசீகரனுக்கும் நடிகைக்குமான காதல்?. ஜெயபிரகாஷுக்கும் வசீகரனுக்கும் வெறும் தேர்தலில் நின்றதினால் தான் ரைவலரியா? அது போதாமல் இருக்கிறது. தீடீரென வரும் ஒலக பிஸினெஸ்மேன் சந்திரசேகர் கேரக்டர் எதற்கு?. அந்த மலேசிய அரண்மனையை வாங்கி கொடுத்துவிட்டால் வசீகரனின் கனவு முடிந்துவிடுமா?. சிநேகன் ஏன் சந்திரசேகருடன் போக வேண்டும். இப்படி பல கேள்விகள் துரத்துகிறது.
எழுதி இயக்கியவர் பிரேம்நாத். கண்களால் கைது செய் திரைபடத்தின் கதாசிரியர். சுவாரஸ்யமான நாட் தான். ஆனால் இலக்கில்லாம புது புது கேரக்டர்கள் வந்து படத்தை திசை திருப்பி, குழப்படித்து பேசி பேசி மாய்ந்து முடிந்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்கு திரைக்கதை டீவியேஷன்கள் சுவாரஸ்யத்தை கொடுபப்தற்கு பதிலாய் ஆயாசத்தை கொடுத்துவிடுவதுதான் பெரிய மைனஸ்
உயர்திரு420 - 210
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
Good review..!!
Nalla kani.. Nalla kani..!!!
அவங்க பெயர் மேக்னா நாயுடு இல்ல கேபிள்... மேக்னா சுந்தர்... இரண்டாவது நாயகியின் பெயர் அக்ஷயா...
ம்ஹூம்... ஹீரோ பெயரில் தப்பு செய்திருந்தால் கூட இவ்வளவு ஃபீல் பண்ணியிருக்க மாட்டேன்...
'மன்னன்' கவுண்டமணி டயலாக்: "இருந்தாலும் இந்த ஓட்ட கூலிங் கிளாசை போட்டுக்கிட்டு எப்படித்தான் துணிஞ்சி முன்னால நிக்கிறியோ?"
மத்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க?
ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்
உங்க கமெண்டும் ஓட்டும் அவசியம் சார்…