
தனக்கு என்ன வரும் என்று தெரியாமல் நவரசங்களையும் பிழிய தயாராய் இருக்கும் புதுமுக இயக்குன நடிகர்கள் மத்தியில் தனக்கென்ன வரும் என்பதை ஓரளவுக்கு புரிந்து கொண்டு பாட்டுப் பாடாமல், பறந்து பறந்து சண்டைப் போடாமல் இருந்ததற்கே இயக்குனர் நடிகர் கிருஷ்ணாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நடிப்பு என்று பார்த்தால் ஓரளவுக்கு ஓகே தான். அடிக்கடி கிருஷ்ணா கண்ணாடியில் பார்த்து பேசுவது ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போகப் போக போர் அடிக்கிறது. திரும்பத் திரும்ப ஹீரோ, ஹீரோயின், ஒரு காமெடியன் என்று வருவதாலும், சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதனாலும் ஜவ்வாய் இழுக்கத்தான் செய்கிறது.

இம்மாதிரி குறையெல்லாம் மீறி, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட, இத்திரைப்படத்தில் நல்ல விஷயங்களை சொலும் சிறந்த காட்சிகள் இருக்கவே செய்கிறது. ஆனால் அவை சரியாய் முன்வைக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். முக்கியமாய் நண்பனின் மனைவி துரோகம் செய்வதை கண்டு பிடித்து, அதற்கு காரணமான விஷயத்தை சொல்லி, திருத்தும் இடம். அனாதை பிணங்களை தன் உறவாய் நினைத்து ஈடுகாட்டு செலவையும், காரியத்தையும் செய்வதற்கான காரணம் போன்ற காட்சிகளை சொல்லலாம். ஒளிப்பதிவும், இசை எல்லாமே படத்திற்கு பலமாய் இருந்திருக்கிறது. இரண்டாவது பாதியில் வரும் கணவன் மனைவிக்கான ப்ரச்சனைகளை வைத்து வரும் பாடல் நன்றாக இருக்கிறது.
யாரிடமும் உதவியாளராய் இல்லாமல் தனக்கு தெரிந்ததை வைத்து படத்தை எழுதி தயாரித்து இயக்கியிருக்கும் கிருஷ்ணாவிற்கு அடுத்தடுத்த படங்களில் சினிமாவின் நான்சென்ஸுகளை தெரிந்து கொண்டுவிடுவார் என்றே தோன்றுகிறது. திரும்பத்திரும்ப நான்கு பேரை மட்டுமே வைத்துக் கொண்டு காட்சிகள் நகர்வதால் சலிப்புத் தட்டுவதும், பெரிய ட்விஸ்டு ஏதுமில்லாத திரைக்கதையால் இரண்டு மணி நேரப்படம் நிரம்ப நேரம் ஓடுவதாய் ஃபீல் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. கொஞ்சம் திரைக்கதையில் பட்டி பார்த்து டிங்கரிங் செய்து செப்பனிடப்பட்டிருந்தால் பழைய பாக்யராஜ் படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.

கேபிள் சங்கர்
Post a Comment
3 comments:
கணவன் மனைவி பிரச்னையை உளவியல் ரீதியா அணுகும் படங்கள் வர்றதில்லை...அப்படியே வந்தாலும் நீங்க சொல்றமாதிரி கொஞ்சம் கவனமில்லாம எடுத்துர்றாங்க!
//,, இயக்கியிருக்கும் கிருஷ்ணாவிற்கு அடுத்தடுத்த படங்களில் சினிமாவின் நான்சென்ஸுகளை தெரிந்து கொண்டுவிடுவார் என்றே..// சொல்ல வந்தது ‘nuances' என்று நினைக்கிறேன்! இல்லை ஏதேனும் உள்குத்தா? - ஜெ.
//,, இயக்கியிருக்கும் கிருஷ்ணாவிற்கு அடுத்தடுத்த படங்களில் சினிமாவின் நான்சென்ஸுகளை தெரிந்து கொண்டுவிடுவார் என்றே..// சொல்ல வந்தது ‘nuances' என்று நினைக்கிறேன்! இல்லை ஏதேனும் உள்குத்தா? - ஜெ.
Post a Comment