Thottal Thodarum

Apr 9, 2012

கொத்து பரோட்டா - 9/04/12

பெப்ஸிக்க்காரர்களின் ஸ்ட்ரைக் அவர்களே அவர்களின் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது. ஏற்கனவே புதிய யூனியனை அமைத்தே தீருவோம் என்றிருப்பவர்களை இன்னும் வேகமாய் தூண்டிவிடக்கூடிய விஷயமாகவே படுகிறது. இவர்கள் இல்லாவிட்டால் படமெடுக்க முடியாது என்று இவர்கள் நினைப்பது பூனை - கண் உதாரணத்தைத்தான் சொல்ல தூண்டுகிறது. யாரும் யாரையும் நம்பி இருப்பதில்லை என்பதுதான் உலக விதி. அதிலும் பணம் போட்டு படமெடுக்கும் ஆட்களை பகைத்துக் கொண்டு என்ன சாதித்துவிட முடியும்?. ஏற்கனவே டிஜிட்டல் யுகத்தில் லைட் இல்லாமல், பெரிய யூனிட் இல்லாமல், தரமான படம் தயாரிக்க முடியும் என்பதை நிருபித்து வரும் காலத்தில் மேலும் இப்படி இம்சையை ஆரம்பித்தால் நிச்சயம் ப்ரச்சனைதான். இரண்டு படப்பிடிப்பை நடத்தி காட்டிவிட்டார்கள். குறும்படங்களில் வேலை செய்யும் பல கேமராமேன்களும், லைட்மேன்களும் பெப்ஸிபோன்ற அமைப்புகளில் பணம் கட்டி மெம்பர் ஆகாதவர்கள்தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். யோசித்து பேசி சுமூகமாய் முடித்தால் எல்லோரும் நல்லது. ஆனால் நிச்சயம் இன்னொரு தொழிலாளர் அமைப்பு அமைவது எல்லோருக்கும் நல்லது என்பதே என் தரப்பு வாதம்.
#####################################



தயாரிப்பாளர் ஒருவரை பார்ப்பதற்காக பெங்களூருக்கு சென்றிருந்தேன். ஒரு நாள் விசிட். கே.எஸ்.ஆர்.டி.சியில் ஸ்லீப்பர் ஏஸி பஸ் விட்டிருந்தார்கள். எழுநூறு ரூபாய்க்கு அருமையான பயணம். நம்மூர் பஸ்கள் இவ்வளவு வசதியாக, சுத்தமாக இருப்பதாய் தெரியவில்லை. அதிகாலையில் இறங்கியவுடன் ஆட்டோக்காரர்கள் சுற்றிக் கொண்டார்கள். ஆனால் பெரும்பாலும் மீட்டர் கட்டணமே வாங்கினார்கள். மாலை நேரங்களில் அருகில் உள்ள இடங்களுக்கு மீட்டர் கட்டணம் வாஙக் மாட்டேன் என்கிறார்கள். முக்கியமாய் தமிழில் கேட்டால் மீட்டர் போடாமல் பேரம் பேசுகிறார்கள். எல்லா மால்களின் வாசலில் ஒரு போலீஸ் பூத் போட்டு. ஆட்டோக்களுக்கு ப்ரீபெய்ட் தொகையை பிக்ஸ் செய்து ஏற்றி விடுகிறார்கள். இம்மாதிரி நம்மூரில் ஒவ்வொரு மாலின் வாசலிலும் செய்தார்கள் என்றால் நம்மூர் ஆட்டோ கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்கலாம். ரெண்டு நாள் முன்னதாகத்தான் ராஜ்குமார் அடியாள் என்று அழைக்கப்பட்ட வட்டாள் நாகராஜ் ஆட்டோ கேஸ் விலை ஏறிவிட்டதற்காக மாடுகளை ஆட்டோவில் பூட்டி இழுத்து போராட்டம் நடத்தியிருந்தார். நம்மூரில் மட்டுமே செய்யப்படும் ஆட்டோ கொள்ளைகளை எந்த ஆட்சியும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறது என்பது வருத்தமே. எங்களை அழைத்துச் செல்ல கார் வருவதாக இருந்ததால் ஒரு சின்ன வாக் மெஜஸ்டிக் சர்க்கிளில் நடந்தோம்.. கொஞ்சம் நேரமிருந்ததால் மெஜெஸ்டிக் சர்க்கிளில் ஒரு நடை நடந்தேன். டீக்கடையில் டீ எவ்வளவு என்று கேட்டோம். எட்டு ரூபாய் என்றார். பக்கத்தில் கன்னடத்தில் பேசிக் கொண்டிருந்தவர் அதே டீக்கு ஏழு ரூபாய் கொடுத்தார். ஏன் என்று கேட்டதற்கு பதிலாய் கன்னடத்திலேயே பதில் சொன்னார். அவருக்கு தமிழ் நன்றாக தெரிகிறது. ட்ராபிக் கண் முழி பிதுங்குகிறது.
#####################################
சென்ற வாரம் விளம்பரம் கொடுத்த simplelife.in கம்பெனிக்காரர்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு அமோகமாம். ஒரே நாளில் நானுறுக்கும் மேற்பட்ட ரிஜெஸ்ட்ரேஷனாம். இணைய விளம்பர விஷயத்தில் சுமார் 5 சதவிகித ரிசல்ட் என்பது மிகப்பெரிய விஷயமாம். என்னவோ போங்கப்பா.. ஆனாலும் ரொம்பத்தான் பாராட்டுறாங்க.. இருந்தாலும் நண்பர்கள் நீங்க கொடுத்த ஆதரவுக்கு என் நன்றிகள். எதுக்குன்னா நம்மளை நம்பி விளம்பரம் கொடுக்கிறாங்க.. அதுக்கு உங்க ஆதரவு இருந்தாத்தானே இதெல்லாம் நடக்கும் அதுக்குத்தான்.
####################################
பெங்களூருக்கு ரெண்டு மூன்று முறை சமீப காலத்தில் சென்றிருந்தாலும் தங்கவேயில்லை. இம்முறை தங்கியிருந்த போது பிரிகேட் ரோட்டில் ஒரு பப்புக்கு சென்றேன். மதிய நேரத்தில் வியர்காத வெய்யில் உறுத்த, சில்லென அற்புதமான பியர் சாப்பிட போனோம். வழக்கம் போல ஜோடி ஜோடியாய் உட்கார்ந்து ஒருத்தரை ஒருத்தர் முத்தத்தால் விழுங்கிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் யாரைப் பற்றியும் லஞ்சையில்லாமல் இருந்தார்கள். சர்வ் செய்யும் ஆள் வரும் போதும் ஒரு கை மார்பிலும், இன்னொரு கையை அவளி(னி)ன் கழுத்தை சுற்றி முத்தமிட்டுக் கொண்டேயிருந்தார்கள். ஐந்தாறு பெண்கள் கூட்டமாய் வந்து கல்பாய் நான்கு ரவுண்டு டக்கீலாவை அடித்துவிட்டு, ரெண்டு ரவுண்ட் ஸ்காட்ச் சாப்பிட்டுவிட்டு, ட்ச் முறையில் பே செய்துவிட்டு போனார்கள். கிளம்பும் போது ஐந்து பெண்களில் இரண்டு பேர் உதட்டோடு அழுத்து முத்தமிட்டு பிரிந்தார்கள். கடந்த மூன்று வருடங்களில் விலையைத் தவிர பெரிய மாற்றமில்லை ஆனால் நல்ல குவாலிட்டி சரக்குகள்.  நாங்கள் மூன்று பேர் மூன்று லிட்டர் ட்ராட் பியருடன் கிளம்பிவிட்டோம். ம்ஹும். முடியல பாஸு..
###################################

பெங்களூர் மெட்ரோவில் பதினைந்து ரூபாய் கொடுத்து பயணித்தோம். மிக குறைந்த தூர பயணமே. மெட்ரோ ஸ்டேஷனில் போட்டோ எடுக்கக் கூடாது என்று சொல்வதற்கு பிகிலுடன் ஆட்களை போட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் ஊதிக் கொண்டேயிருக்க, ஆட்கள் போட்டோ எடுத்துக் கொண்டேத்தானிருக்கிறார்கள். அடுத்தடுத்து ஸ்டேஷன் வந்துவிடுகிறது. இளம் பெண்கள் தான் டிரைன் டிரைவர்களாய் இருக்கிறார்கள். ஸ்டேஷன்கள் படு சுத்தமாய் இருக்கிறது. ஒரு ஆளுக்கு ஒரு வட்ட பிலலை போன்ற டோக்கனை எலக்ட்ரானிக் முறைப்படி சார்ஜ் செய்து தருகிறார்கள். சிங்கப்பூரைப் போல எல்லாமே இருக்கிறது. ஆனால் உச்சா போக டாய்லெட் கேட்டால் இல்லை என்கிறார்கள். எவ்வளவோ செலவு செய்யுறீங்க இது க்கும் ஒரு செலவு செய்யுங்களேன் ப்ளீஸ்.
####################################
பதிவர் நண்பர் விந்தை மனிதன் ராஜாராமன் திருமணத்திற்கு இரண்டு செட்டாக நண்பர்கள் போயிருந்தோம். நான், அப்துல்லா, டாக்டர் புருனோ, ஓ.ஆர்.பி ராஜா ஒரு வண்டியில், இன்னொரு செட்டாய் மணிஜி, செல்வம், அகநாழிகை வாசு, மயில்ராவணன்,பாபாஷா சங்கர் ஆகியோர். வழக்கம் போல் செளம்யன், அபிஅப்பா வின் விருந்தோம்பலில் குளித்துவிட்டு, திருமணத்தை அட்டெண்ட் செய்தோம். வழக்கப்படி தஞ்சை மாவட்ட விசிட் முடிந்ததும், பக்கத்தில் உள்ள ஒரு கோயில், நாகூர், வேளாங்கண்ணிக்கு ட்ரிப் அடிப்பது வழக்கம். இம்முறை கோயிலுக்கும், வேளாங்கண்ணிக்கும் போக முடியவில்லை. வேளாங்கண்ணியில் செம கூட்டம். நாகூரிலும் கூட்டம் தான் பட் ஓகே. விஷயம் அதுவல்ல..அங்கே செருப்பு விடும் இடத்தில் ஒருவன் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க, அங்கே செருப்பு எடுக்க வந்தா ஒருவரைப் பார்த்து, “சார்.. நல்லாயிருக்கியளா?” என்றான் பிச்சைக்காரன். அவருக்கு ஏதும் புரியவில்லை. கொஞ்சம் யோசனையாய்.. “யார் நீ?” என்று என்னடா இது பிச்சைக்காரன் நம்மை விசாரிக்கிறானே என்ற ஒரு குழப்பம் அவர் முகத்தில் தெரிந்தது. “என்னா சார் என்னை தெரியலையா? நான் தான் கும்பகோணம் ஸ்டோர்ல வேலை பார்த்தேனே நீங்க கூட வருவியளே..? குமாரு..” என்றதும் அவருக்கு கொஞ்சம் ஞாபகம் வந்து இவனின் கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போய் “இங்க என்னடா பண்றே?” என்று கேட்க, அவன் பெருமையாய் “பிச்சை எடுக்குறேன்” என்று சொல்லிவிட்டு, கை நீட்டினான்.  அவர் ஏதும் பேசாமல் கையில் இருந்த பத்து ரூபாய் நோட்டைப் போட்டு விட்டு திரும்பித்திரும்பி அவனை பார்த்துக் கொண்டே போனார். இன்னமும் அந்த பிச்சைக்காரன் குரலில் தெரிந்த கலெக்டராயிருக்கிறேன் என்ற தொனியில் சொன்ன பிச்சை எடுக்குறேன் என்ற குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
#####################################
என் டீவிட்டரிலிருந்து
உன் குரலை உயர்த்தாதே.. அதற்கு பதிலாக விவாதத்தின் தரத்தை உயர்த்திக் கொள் 

ஆதீத அன்பு காதலின் வெளிப்பாடென்றால், கோபம் உன் மேல் காட்டும் அக்கறை. இதை மிகச்சிலரே உணர்கிறார்கள்.

என்னுடய போராட்டத்தின் போது நீ இல்லையென்றால். என் வெற்றியின் போது இருக்க மாட்டாய்.

யாரோ ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமானவராய் நிச்சயம் நீ இருப்பாய்.

நம் முன்னாள் காதலர்களை கடந்து செல்லும் போது கொஞ்சமே கொஞ்சம் உறுத்தலாய்த்தானிருக்கிறது.

உன்னோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் அதற்கான எல்லாவிதமான சாம, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள்.

காதலில் ஆண்கள் எப்போதுமே அமெச்சூர்கள்தான் #ப்ரொபஷனல் பெண்கள்.

கடலை போடுவதற்கு நட்பாயிருப்பதற்குமான வித்யாசம் தெரியாதவள் பெண்ணே அல்ல

என் நண்பனை எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் நாங்கள் இருவரும் வெறுப்பது என்று வரும் போது சேர்ந்தே வெறுக்கிறோம் இருவரையும்

ஒவ்வொரு ப்ரச்சனைக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பதைத்தான் கணக்கு நமக்கு சொல்லிக் கொடுப்பது.
##################################
ப்ளாஷ்பேக்
மீண்டும் ஓர் இளையராஜாவின் க்ளாசிக் பாடல் ராஜ பார்வையிலிருந்து.. ஜேசுதாஸின் குரலில், கண்ணதாசனின் அருமையான வரிகளில் அற்புதமான மெலடி. இப்பாடலின் விஷுவல் அதைவிட அழகான கவிதை. க்யூட்டான பாடல். 
########################################
செவிக்கினிமை
சமீபத்தில் கேட்டதில் யுவனின் இசையில் வந்த கழுகு படத்தில் வரும் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாடல் மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டதற்கான காரணம் இசை மட்டுமில்லாமல் சிநேகனினின் வரிகளும் தான் காரணம். பாதகத்தி பாடல் கூட கேட்கக்கேட்க நன்றாகவேயிருக்கிறார் போல் இருக்கிறது. ஆனால் ராகேஸ்வரியின் ஹிந்திபாப் பாடலின் சாயல் இருப்பதை நன்றாக உணர முடிகிறது. அதே போல் தேவின் இசையில் பாரி என்கிற படத்தில் வரும் வந்தாயோ என்கிற பாடல் கொஞ்சம் காதல் படப் பாடல் போலிருந்தாலும் பாடிய மாதவி சுரேஷின் குரல் இனிமை.
############################################
மை கார்னர்
நாளைய இயக்குனர் நளன் இயக்கும் கனா காணும் காலங்களில் ஒரு சிறிய கேரக்டர் செய்யச் சொல்லி அழைத்திருந்தார்.  சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு நடிக்கும் வேலை. செம வரவேற்பு.
####################################
குறும்படம்
நாளைய இயக்குனர் அருண்குமாரின் படம். மேக்கிங் மற்றும் டெக்னிக்கல் விஷயங்களில் தேர்ந்த வெளிப்பாடு இருக்கிறது. பின்னணியிசை மிகவும் நன்றாக இருக்கிறது.இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
#########################################
அடல்ட் கார்னர்
பாவமன்னிப்புக்கு வந்தான் ஒரு இத்தாலியன்.
“பாதர் எனக்கு மன்னிப்பு கொடுங்கள்?
“நீ என்ன செய்தாய் மகனே?
“ஒரு பெண் என் போரின் போது என் அறையில் வந்து ஒளிந்து கொள்ள இடம் கேட்டாள் அவளுக்கு கொடுத்தேன்” 
“அது ஒன்றும் பெரிய பாவமில்லையே.:”
”இல்லை பாதர். அவள் தங்குவதற்கு அவளிடம் வாடகையும், செக்ஸுவல் ஷேரிங்கு செய்தேன்”
“அதுவும் ஒன்றும் பெரிய பாவமில்லை. போர்காலத்தில் எதிரிகளிடமிருந்து காக்க நீ பல கஷ்டங்களை பட்டிருப்பாய். அதனால் நீ செய்த நன்மையின் காரணமாய் இந்த தீமை மன்னிக்கப்படும்.
“இப்போதுதான் திருப்தியாக இருக்கிறது பாதர். அப்புறம் ஒரு விஷயம் உறுத்துகிறது.?
“என்ன?
”அவளிடம் போர் முடிந்துவிட்டது என்று இன்னும் சொல்லவில்லை. சொல்லட்டுமா வேண்டாமா?” என்றான்.
கேபிள் சங்கர்


Post a Comment

14 comments:

Unknown said...

is nalan directing kkk in vijay tv???nalan rocks...thanks for the info

Sivakumar said...

மை கார்னர்... வெண்கலக்குரலில் பாடும் சிட்டுக்குருவிக்கு டப்பிங் வாய்ஸா?? என்ன ரீசன்?

காவேரிகணேஷ் said...

இன்னமும் அந்த பிச்சைக்காரன் குரலில் தெரிந்த கலெக்டராயிருக்கிறேன் என்ற தொனியில் சொன்ன பிச்சை எடுக்குறேன் என்ற குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

class cable

Karthik Somalinga said...

>>>ஆனால் உச்சா போக டாய்லெட் கேட்டால் இல்லை என்கிறார்கள். எவ்வளவோ செலவு செய்யுறீங்க இது க்கும் ஒரு செலவு செய்யுங்களேன் ப்ளீஸ்.<<<
லிப்டையும் பயன் படுத்த அனுமதிப்பதில்லை :(

Arun Kumar said...

in bangalore majestic
full tea - 8 Rs
3/4 tea - 7Rs
1/2 tea - 5 Rs.

R. Jagannathan said...

சென்னையின் ஆட்டோ கொள்ளைக்கு விடிவு - இதை மட்டும் நீங்கள் எத்தனை முறை, எத்தனை அதிகாரிகளிடம், எத்தனை கரை வேட்டிகளிடமும் “கேட்டாலும் கிடைக்காது!”

FEFSI issue: //அதிலும் பணம் போட்டு படமெடுக்கும் ஆட்களை பகைத்துக் கொண்டு என்ன சாதித்துவிட முடியும்?. // These unions are there only to scare the big-moneyed people and make money for themselves. Even large industrial giants and multi-nationals have to face these unions and pay the officials to maintain some peace and productivity. Only now, Japanese companies as Nokia are trying to fight this menace but I am not sure how far our political system will help them!

-R. J.

CS. Mohan Kumar said...

பிகருக்கு தலை வலின்னதும் கேபிள் துடிக்கிராறு. ஆளுக்கு ஏத்த காரக்டர் தான் குடுத்துருக்காங்க :))

வவ்வால் said...

கேபிள்,

பெங்களுருவில் நல்ல அனுபவம் கிடைச்சது போல :-))

பெங்களுருவில் ஆட்டோ கட்டணம் கொஞ்சம் அடாவடியாக இல்லாததற்கு காரணம் என்ன என கவனித்தீர்களா? அங்கே அடிக்கடி கட்டணத்தினை சீரமைக்கிறார்கள். நீங்கப்போட்டபடத்திலேயே விவரம் இருக்கு.

மினிமம்க்கு அப்புறம் ஒரு கி.மீக்கு 11 ரூ, தமிழ்நாட்டில் அரசு பரிந்துரை இன்னமும் ஒரு கி.மி 7 ரூ தான்.தமிழ் நாட்டிலும் அரசே கட்டணத்தை சரியாக மறு நிர்ணயம் செய்ய வேண்டும்.

காலை ஆறு க்கு முன்னர், மற்றும் இரவு 9க்கு அப்புறம் மீட்டர் போட்டாலும் இரட்டிப்பு கட்டணம். மேலும் இரவில் மீட்டர் போடாமல்ல் பேரம் தான் அங்கும். அங்கு ஏகப்பட்ட ஒரு வழிப்பாதை என்பதால் அருகில் இருக்கும் இடத்துக்கும் காசு நிறைய ஆகும், மாலையில் செம டிராபிக் இருக்கும் என்பதால் சில இடங்களுக்கு ஆட்டோ வர மாட்டேன் என்றே சொல்வார்கள்.

அங்கே ஏசி டவுன் பஸ் தமிழ் நாட்டை விட குறைவாகவும் இருக்கு.மேலும் தொலை தூர பேருந்துகளும் குறைவாக இருக்கு. இத்தனைக்கும் அவர்களது கி.மீ கட்டணம் தமிழ் நாட்டை விட அதிகம்(இப்போ சமம் ஆகி இருக்கும்)இதுக்கு என்ன காரணம் எனில் தமிழ் நாட்டில் ஸ்டேஜ் வைத்து தான் கட்டணம் , (கி.மீ என்று சொன்னாலும்,கி.மீ கணக்கு புறப்பாடு-இறுதி நிலைக்கு மட்டுமே) இடையில் உள்ள நிறுத்தத்தில் இறங்கினால் தமிழ்நாட்டு பேருந்தில் கட்டணம் அதிகம் ஆகிவிடும்.ஏறினாலும் அப்படித்தான்.

உ.ம்: அச்சிரப்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு ஏறினால் திண்டிவனம் -சென்னைக்கட்டணம் ,தமிழ் நாட்டில்.

----
டிராட் பீர் குடிக்கிறதுக்கு சும்மாவே இருக்கலாம் :-))
-----

வவ்வால் said...

ஜெகநாதம்,

//Only now, Japanese companies as Nokia are trying to fight this menace but I am not sure how far our political system will help them!//

எங்கே இருந்து தான் இப்படியான அறிவாளிகள் வராங்களோ,

முதலில் நோக்கியா ஜப்பானிய நிறுவனம் அல்ல பின்லாந்து,
அடுத்து நோக்கியா தொழிலாளர் பிரச்சினை வேறு , ஃபெப்சி பிரச்சினை வேறு.

ஃபெப்சி சொல்வது எத்தனை பேரை,யாரை வேலைக்கு வைக்கணும், எவ்வளவு சம்பளம் போன்றவை அது எல்லாம் தொழிலாளர் சட்டத்தில் கூட வராது.

நோக்கியா தொழிலாளர் பிரச்சினை அடிப்படையானது 5000 ரூ சம்பளத்திற்கு 12 மணி நேர வேலை 3 ஆண்டுகளுக்கு பின் ஊதிய உயர்வு, நிரந்தரம்னு சொல்லிட்டு இப்போ அப்படி செய்யவில்லை, எனவே உரிமைக்காக போராடுறாங்க.

சும்மா இதான் சாக்குனு எல்லாத்தையும் ஒரே தட்டில வச்சு சொல்ல வந்துட்டிங்க.

R. Jagannathan said...

Mr. Vowall,

Despite my knowing Nokia is Finnish, I incorrectly wrote it as Japanese in a hurry. This does not change my views on our Labour Union hooliganism. You yourself have mentioned that FEFSI demands will not be covered by Labour laws, which means they are unfair and the strike and rowdyism are to be condemned. It would have been nice if you were specific about it. As to Nokia agreement, I am sure the Unions can take up the issues with the Management and the Government and even the Courts for a proper solution. You, the most knowledged, should be aware of the unacceptable behaviour of some workers with strong support by the Union. Support them if your concience permits. We cannot achieve anything by arguing here. - R. J.

வவ்வால் said...

ஜெகநாதம் ,

அய்யா உங்களுக்கு தமிழ் புரியலையா இல்லை என் தமிழ் அவ்வளவு தானா என தெரியவில்லை, இரண்டும் ஒரே போல பிரச்சினை அல்ல, என்று சொல்லி இருக்கேன், ஒரு இடத்தில் தொழிலாளிகள் முதலாளிகளை மிரட்டுறாங்க(ஃபெப்சி) , இன்னொரு இடத்தில் முதலாளி தொழிலாளியை சுரண்டுறாங்க(நோக்கியா).

நீங்க இரண்டையும் ஒன்றாக்கி தொழிலாளிகளே மோசம் குத்துங்க எசமான் குத்துங்க என்பது போல எசப்பாட்டுப்பாடுறிங்க. அதை தான் சொன்னேன். லேபர் யூனியன்கள் பற்றி எனக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை,ஆனால் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு அவர்களை விட்டால் மாற்று இல்லை என்பதே யதார்த்தம்.

அப்புறம் என்ன குறிப்பா பேசுனு சொல்றிங்க நான் தெளிவா தான் சொல்லி இருக்கேன்,என்ன நிலைனு புரியாம பொத்தாம் போதுவா சொல்லி இருப்பது நீங்க தான். நோக்கியா பிரச்சினையை எப்படி ஃபெப்சில முடிச்சு போட்டிங்கன்னே எனக்கு புரியலை. ஒரு வேளை முதலாளிகள் எல்லாம் நல்லவங்க என்ற கருத்தாக்கம் கொண்டவரோ?

//As to Nokia agreement, I am sure the Unions can take up the issues with the Management and the Government and even the Courts for a proper solution.//

அது எப்படி சுயுரா சொல்றிங்க :-)) SEZ, contract labour agreement, போன்றவை வைத்து நோக்கியா தப்பித்துக்கொள்கிறது, தொழிலாளர் ஆணையம் கூட எதுவும் செய்யலைனு தகவல்.

// should be aware of the unacceptable behaviour of some workers with strong support by the Union. Support them if your concience permits. We cannot achieve anything by arguing here. - R. J.//

அப்படி என்ன தொழிலாளர்கள் செய்தாங்கனும் சொல்லிட்டா நல்லா இருக்கும். நீங்க முதலாளிகளையே ஆதரியுங்கள் அதுவே வாழ்வை வளப்படுத்தும். நான் பிரச்சினையின் அடிப்படையிலே அனுகுவேன், எனவே எனக்கு எவ்வித மனத்தடங்களும் இல்லை.

arul said...

sankar anna ungal twitter quotes miga arumai

"ஆதீத அன்பு காதலின் வெளிப்பாடென்றால், கோபம் உன் மேல் காட்டும் அக்கறை. இதை மிகச்சிலரே உணர்கிறார்கள்.

என்னுடய போராட்டத்தின் போது நீ இல்லையென்றால். என் வெற்றியின் போது இருக்க மாட்டாய்.

யாரோ ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமானவராய் நிச்சயம் நீ இருப்பாய்.

உன்னோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் அதற்கான எல்லாவிதமான சாம, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள்.

காதலில் ஆண்கள் எப்போதுமே அமெச்சூர்கள்தான் #ப்ரொபஷனல் பெண்கள்."

superb

தருமி said...

உங்க ‘மருமகன்’ எனக்கு ரொம்ப பிடிக்குது.

Unknown said...

அட்ரா சக்க சி பி செந்திகுமார் பேட்டி காமெடி கும்மி பாகம் 1