For every Action there will be a Equal and Opposite Reaction. இதுதான் படத்தின் அடிப்படை. இதை வைத்து மிக அருமையாய் திரைக்கதை அமைத்து விளையாடியிருக்கிறார் இயக்குனர் தாய் முத்துசெல்வன்.
குருவும் பிரியாவும் காதலிக்கிறார்கள், குரு ஒரு ஆடை வடிவமைப்பாளன், ப்ரியா ஈகிள் டிவி காம்பையர். இருவருக்கும் தனியாட்கள், திருமணம் செய்ய விரும்பி நாள் அன்று, ப்ரியா தூக்கிலிட்டு செத்திருக்கிறாள். தன் சாவுக்கு காரணமான வில்லனை வீடியோ கேமரா மூலமாய் அடையாளம் காட்டிவிட்டு போயிருக்க.. அவள் இறந்த அதே நாளில் அவளின் சாவுக்கு காரணமான ஈகிள் டிவி ஓனர் ஜேப்பியை கொல்ல நாள் குறிக்கிறான். அதை அவனுக்கும் சொல்லி விடுகிறான். அவன் குறித்த நேரத்தில் ஜேப்பியை கொன்றானா..? இல்லையா ஜேப்பி குருவிடமிருந்து தப்பிக்க என்ன செய்தான் என்பதுதான் கதை.
வழக்கமான பழிவாங்கும் கதையை திறமையான திரைக்கதையாலும், மிகைபடுத்தாத சூர்யாவின் நடிப்பாலும் அனல் பறக்க விட்டிருக்கிறார்கள். ஜேப்பிக்கும், குருவுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் அசத்தல் ரகம். அதிலும் முதல் பாதி பூராவும் ஜேப்பியை பொறைக்கு அலையும் நாயை போல .. ஓட விட்டே பீதியை கிளப்புவதும், அவன் மூலமாகவே அவனின் கருப்பு பக்கத்தை மீடியாவுக்கு வெளியிட வைப்பதும், தன்னை அலைக்ழிப்பவன் யார் என்று தெரியாமல் நொந்து போயிருக்கும் நேரத்தில் தெரிந்தத்வுடன் ஜேப்பி ‘டேய் பர்ஸ்ட் ஆப் உன்னோடதா இருக்கலாம்.. செகண்ட் ஹாப் என்னுது” என்று உறுமும் இடத்தில் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகிறது திரைக்கதை.
இயக்குனரின் நடிகராய் எஸ்.ஜெ.சூர்யா.. ஒரு ஹீரோவாய் பறந்து பறந்து சண்டை போட ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அடக்கி வாசிக்க வைத்திருக்கும் திரைகதையால் உணர்ந்து செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஜேப்பியை கட்டி போட்டு அவர் பேசும் சில வசனங்கள் அருமை.. அட எஸ்.ஜே.சூர்யாவா இது.
புது இந்தி நடிகை.. சாயாலி ஓகே. கண்களை அகல விரித்து பயப்படுகிறார். பாடல்களில் கவர்ச்சி காட்ட பிரயத்தனபடுகிறார். பாவம் இருந்தால்தானே. சிரிக்கிறார், ஆடுகிறார், இறக்கிறார்.
வில்லன் ஜேப்பியாய் ஆஹா படத்தின் கதாநாயகன் ராஜீவ் கிருஷ்ணா.. டிபிகள் கார்பரேட் வில்லனாய் வலம் வருகிறார். அருமை. முதல்லேர்ந்து அவரோட பல்லுதான் அவருக்கு பிராப்ளம்.
சூர்யாவின் நண்பன், போலீஸ் ஆபீஸர் தலைவாசல் விஜய், தாரிகா, ராஜ்காந்த், வில்லனின் அடியாள் யுகேந்திரன் என்று எல்லோருமே குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும் போலீஸ் ஆபீஸரின் போனை தன் போன் என்று நினைத்து உடைக்க போகும் இடத்தில் “சார்.. அது என் போன் “ என்பது போல படம் பூராவும் இயல்பான நகைச்சுவை கலந்த வசனங்கள். மிகையில்லாத ஒளிப்பதிவு. எடிட்டிங். என்று எல்லாமே நிறைவு.
வினயின் இசையில் பாடல்களை விட பிண்ணனி இசை படத்திற்க்கு பெரிய பலம்.
இயக்குனர் தாய்முத்துசெல்வனின் திரைகதைதான் படத்திற்கு பலமே. அதை திறம்பட செய்திருக்கிறார். கொஞ்சம் மெனக்கெட்டிருந்து பாடல் காட்சிகளை தவிர்த்திருந்தால் இன்னும் பரபரப்பான படம் கிடைத்திருக்கும். க்ளைமாக்ஸ் உத்தி புதிது.
உபரி தகவல் இயக்குனர் விஜய் டிவியில் முதலில் வந்த காத்து கருப்பு சீரியலின் இயக்குனர்.
நீயூட்டனின் 3ஆம் விதி - புயல் வேக திரைக்கதைக்காக..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
தமிழிஷ் லிங்க் கொடுக்கலையா சங்கர்?
சூர்யா ஸ்பெஷல் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கா?
படம் பாக்கனுமே..!
என் தல, எப்போதுமே தல தான்!!:)
படம் அருமை ன்னு சொல்லிடிங்க .....
நேரம் கிடைத்த உடன் போய் பார்க்கிறேன்.
உங்க பசங்க பட விமர்சனத்தையும் படித்தேன். நல்ல இருக்கு ....
சூர்யா ஸ்பெஷல் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கா?
படம் பாக்கனுமே..!//
ஆமாம் மிகைபடுத்தாத நடிப்புதான். ஆனால் இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாய் யார் சொன்னது..?
எதை சொல்லி.. படம் நல்லாருக்குன்னு சொன்னதாலயா..? இல்ல...படம் பார்த்துட்டு உங்களுக்கு பிடிக்கலையா விதயா..?
நேரம் கிடைத்த உடன் போய் பார்க்கிறேன்.//
கண்டிப்பா தியேட்டர்ல போய் பாருங்க.
//உங்க பசங்க பட விமர்சனத்தையும் படித்தேன். நல்ல இருக்கு ....//
படம் நல்லாருக்கா.. விமர்சனம் நல்லாருக்கா..?
.
வழக்கமா விமர்சனங்களில் டெக்னிகல் சமாச்சாரங்களை ஒரு பிடி பிடிப்பீங்களே!!!!!!!
படத்துல யோ பார்த்த மாதிரி இருக்கு .ஒரு பைட் கூட இல்லாது ரொம்ப ஆறுதல் ..சூர்யா ரொம்ப அடக்கி வாசிச்சு இருக்கார்
I will this and Pasang Movie Quickly.
I will see this and Pasang Movie Quickly.
அட.. வழக்கம் போல் நச் விமர்சனம்...
பல திறமையான தொழில் முறை நடிகர்கள் இருக்கும் போது எஸ்.ஜே ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்..??
ரேட் கம்மியாலா சங்கர்..??
விமர்சனம் சூப்பர்...
சரி நீங்க சொல்லிரீங்க நம்பாம இருக்கவும் முடில.
நல்ல அருமையான விமர்சனம். படத்தை போலவே விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு
Anyway I like ur review.
Name of the director is Thai
Muthu selvan not thai tamil selvan.
Hassan Raja.
Anyway I like ur review.
Name of the director is Thai
Muthu selvan not thai tamil selvan.
Hassan Raja.
//
ஆமாம் அக்னி..
Anyway I like ur review.
Name of the director is Thai
Muthu selvan not thai tamil selvan.
Hassan Raja.//
நன்றி ஹஸன்.. மாற்றிவிட்டேன்..
நல்ல அருமையான விமர்சனம். படத்தை போலவே விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு
//
மிக்க நன்றி இராகவன்.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும், 25வ்துக்கும்
//
என்ன முரளி ஊர்லதான் இருக்கீங்களா..?
கண்டிப்பாய் பாருங்கள் உயிரன்பன்.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..
சரி நீங்க சொல்லிரீங்க நம்பாம இருக்கவும் முடில//
நிஜமாத்தான் சொல்றேன் அசோக்.. நல்லா இருக்கு படம்..
விமர்சனம் சூப்பர்//
நன்றி ஜியா.. உங்கள் முதல் வருகைக்க்கும், கருத்துக்கும்...
அட.. வழக்கம் போல் நச் விமர்சனம்...
பல திறமையான தொழில் முறை நடிகர்கள் இருக்கும் போது எஸ்.ஜே ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்..??
ரேட் கம்மியாலா சங்கர்..??//
ஒரு வேளை அவருக்கு மார்கெட் இருக்கும் போது டேட் வாங்கி வைத்திருப்பார்கள்..
//
இதென்னடா வம்பா போச்சு.. நல்லாருக்குங்கிறதை .. நல்லாருக்குனுதானே சொல்லணும்..?
I will see this and Pasang Movie Quickly.
//
பாருங்க முத்துபாலகிருஷ்ணன்.
படத்துல யோ பார்த்த மாதிரி இருக்கு .ஒரு பைட் கூட இல்லாது ரொம்ப ஆறுதல் ..சூர்யா ரொம்ப அடக்கி வாசிச்சு இருக்கார்//
அதுக்கென்ன.. ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் மொத்ததில் பார்த்தால் நல்ல படம்.. அதனால் அதையெல்லாம் சொல்லவில்லை..அவ்வளவுதான்
குழப்பமே வேண்டாம்.. அவரு படமேதான்.. ஆனால் அவரு படமாதிரி இருக்காது..
என்ன தல இப்டி பொசுக்குன்னு சொல்லிட்டிங்க? :(
தலைப்பிற்கு மிகவும் பொருத்தமான படம்
நீயூட்டனின் 3ஆம் (நம் தலை)விதி - முயல் வேக திரைக்கதைக்காக...
உங்களது பதிவுகள் ஓவன்ரும் அருமை.நான் உங்களது விசிறி.உங்களது திரை விமர்சனம் நீயூட்டனின் 3ஆம் விதி மிக அருமை. இப்பவே படம் பார்க்கணும் போல இருக்கு
.நான் இன்று சென்று படம் பார்த்து நாளை எனது அனுபவங்களை பகரிந்து கொள்கிறான்.
நன்றி
உங்களது பதிவுகள் ஓவன்ரும் அருமை.நான் உங்களது விசிறி.உங்களது பசங்க திரை விமர்சனம் படித்தவுடன் படம் பாத்தேன்.மிக அருமை.நன்றி
உங்களது திரை விமர்சனம் நீயூட்டனின் 3ஆம் விதி மிக அருமை. இப்பவே படம் பார்க்கணும் போல இருக்கு
.நான் இன்று சென்று படம் பார்த்து நாளை எனது அனுபவங்களை பகரிந்து கொள்கிறான்.
நன்றி
சங்க்
உங்க விமர்சனமே படம் பார்த்த திருப்தியா தந்து விட்டது (உங்களுக்கும் நல்ல மனசு சார்).
விமர்சனத்தை படிச்சு பெருமூச்சுவிட்டுக்க வேண்டியதுதான்..
நீயூட்டனின் 3ஆம் விதி படம் பாத்தேன்.உஷ் .முடுயல !
சரி மொக்கை . அதுவும் படத்துல இருக்குற ரோமன்சே சான்ஸ்'ei illai..
இரண்டே மணி நேரத்தில் எதிரியின் இமேஜை காலி செய்து அவனையும் காலி செய்வதுதான் படத்தின் பலம் ஆனால் லாஜிக் உதைப்பதும் இந்த ஏரியாவில்தான்.
இரண்டு மணி நேரத்தில் சூர்யா செய்யும் வேலைகளை இருபது நாட்களில் முடிப்பதுகூட கடினம்.
வில்லன் யார், ஹீரோ யார், பழி வாங்குவதற்கான காரணம் என்ன என்பது தெரிந்த பிறகும் சட்டென்று சபதத்தை முடிக்காமல் சவ்வாக இழுப்பது மைனஸ். என்ன கொடுமை சார் ?
ராஜீவ் கிருஷ்ணா தனது சேனலில் காம்பியரிங் செய்யும் பெண்களை கட்டாயப்படுத்தி அனுபவிக்கும் சென்ஸ் மேனியாக். அதற்காக ஷாயாலியை அடைய துப்பாக்கி, ஒரு டஜன் அடியாள்கள், போலீஸ் பட்டாளம், போன் டார்ச்சர் என அவர் கொடுக்கும் டார்ச்சர், ஓவர் டோஸ். கொசு அடிக்க கொத்து குண்டா?
பாடல்கள் மகா குப்பையாக இருக்கிறது.
முதல பாடல - பனியன் விளம்பரத்துக்காக !
கடைசி பாடல - பைக் விளம்பரத்துக்காக !
மற்ற பாடல - இருக்கு ஆனா இல்லை?
தமிழ்சினிமாவில் இருந்து விலகி பல நூறு ஆங்கிலப்படங்களின் தாக்கத்தோடு ஒரு தமிழ்சினிமா முயற்சி எனக்கொள்ளலாம்.அனால் பாவம்?
இதில் என்ன புதுமை என்றால் திட்டமிடலும் காதலும் படமல்ல.. பழிவாங்க அவன் எடுத்துக்கொள்ளும் இரண்டு மணிநேரம்.எங்கேயோ கேட்ட கதை போல் இருக்கிறதா கைதியின் டைரி? இருபத்திநாலு மணிநேரம்? நிறைய விடைகள் இருக்கிறது.
நியூட்டனின் மூன்றாவது விதிப்படி சொல்லணும்னா...
எல்லாம் தலைவிதி தான். 'இன்னும் எத்தனை பேர் படம் பார்த்து சாக வைப்பாய் என் மக்க' .
மொக்கையான S.J. சூர்யா படமல்ல என்ற திருப்தி மட்டும் தான்.